search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding ceremony"

    • இர்பான் மருத்துவமனை இயக்குநர் எஸ்.சாதிக் அலி இல்ல திருமண விழா நடந்தது.
    • பொறியாளர் இர்பான் அலி, ஜாபிர் அலி, முகமது ஜபான் அலி உள்பட உறவினர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிராமத்தை சேர்ந்த ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்னாள் நிலைய அதிகாரியும், முன்னாள் அரசு மருத்துவமனை (காச நோய் பிரிவு) துணை இயக்குனரும், புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளிகளின் தாளாளரும் பாரதி நகர் இர்பான் மருத்துவமனையின் இயக்குனருமான மருத்துவர் எஸ்.சாதிக் அலி-கன்சுல் மகரிபா ஆகியோரது மகன் டாக்டர் பர்ஹான் அலி மணமகனுக்கும், நெல்லையை சேர்ந்த முகமது ஜலீல்-சுமையா பானு ஆகியோர் மகள் மருத்துவர் ஆமினா பேகத்திற்கும் நேற்று ராமநாதபுரம் அருகே உள்ள ஏ1 மகாலில் திருமணம் நடைபெற்றது.

    புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை செயலாளர் முகமது நிஜாமுதீன், தலைமையில் தலைவர் ஹமிதுல் ஆஸ்கீன், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், துணை செயலா ளர் செய்யது அபுதாஹிர், பொருளாளர் முகமது இப்ராஹிம், முஸ்லிம் முன்னேற்ற சங்க தலைவர் சலீம், செயலாளர் ஜாகிர் முன்னிலையில் புதுவலசை தலைமை பேஸ் இமாம் அகமது திருமணத்தை நடத்தி வைத்து நிக்காஹ் ஓதி சிறப்பு துவா ஓதினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் பக்ருல்அமீன், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய நிர்வாகி கள், முக்கிய பிரமுகர்கள், டாக்டர்கள், பொறி யாளர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் பொறி யாளர் இர்பான் அலி, ஜாபிர் அலி, முகமது ஜபான் அலி உள்பட உறவினர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனர் சாத்தான்குளம் சகாபுதீன் இல்ல திருமண விழாவில் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
    • மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த சிங்கப்பூர் தொழில் அதி பரும், ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனருமான சகாபுதீன்-லைலத்து அரசியா பானு ஆகியோரது மகன் பட்டதாரி ஹபீப் ரகுமானுக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் முகமது ஹலீம்-ஜானம்மாள் ஆகியோரது மகள் பட்டதாரி இர்ஷாத் பர் ஹானாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமண நிக்கா ஏஒன் திருமண மகால் வளாகத்தில் சாத்தான்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் காபத்துல்லா, மலேசியா சாத்தான்குளம் ஜமாத் தலைவர் அயூப்கான், மற்றும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    திருமண நிக்கா நிகழ்ச்சியை புதுக்கோட்டை தெற்கு 2-ம் வீதி ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் நடத்தி வைத்தனர். சாத்தான்குளம் பள்ளிவாசல் தலைமை இமாம் சுலைமான் சிறப்பு துவா ஓதி மணமக்களை வாழ்த்தினார்.

    முன்னதாக ஆலிம்கள் மணமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கும் வகையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றி மண மக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவில் கே.நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, டாக்டர் மணிகண்டன் ஆகியோர் மணமக்களுக்கு நினைவு பரிசு கொடுத்து வாழ்த்தினர்.

    மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரமுகர்கள் தொழிலதி பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவில் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை யினர், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்டிட பொறியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஆலிம் பெருமக்கள் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா சிறப்பாக நடைபெற வேண்டி மணமக்களை வாழ்த்தி மணமகன் மாமா சித்தார்கோட்டை ரபி அகமது- பலிலா பேகம் குடும்பத்தினர். ராமநாதபுரம் என்.எஸ்.ஏ. குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் ஹசன் அலியார் மற்றும் குடும்பத்தினர், அல்பரிதா குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் அபுல்கலாம் குடும்பத்தினர், கீழக்கரை மெரினா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் சுல்தான் சம்சுல் கபீர் பாரதி நகர் அஜந்தா பேக்கரி எம். சுலைமான், திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் நிறுவனர் என்.களஞ்சியம். என்.பத்மநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் தொழில்அதிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    மணமக்கள் வீட்டார் சார் பில் சித்தார்கோட்டை ரபி அகமது, தீன் டிராவல்ஸ் உரி மையாளர் சாத்தான்குளம் உசைதீன் ஆகியோர்கள் வர வேற்றனர். ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் ஷஹ் பாஸ் முகம்மது, வஜிஹா பானு, நஜீப்முகம்மது, ஜஸ்ரா, முகம்மதுஹலீம், ஜானம்மாள், முகம்மது இர்பான், முகம்மது அலி ஜின்னா, ஜெய்த்துன்பீவி, முகம்மது கலிபுல் அமீன், அனீஸ் பாத்திமா உள்பட ஏஒன் மஹால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் செய் திருந்தனர். அனை வருக்கும் ஏஒன் மஹால் நிறுவனர் சகாபுதீன், குடும்பத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

    • ஜெயலலிதா கோவிலில் 11-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் விழா டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.
    • தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழகர் கோவில், பழமுதிர்சோலை ஆகிய கோவிலில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெறும், திருமணவிழாவிற்கான அழைப்பிதழ்களை தனது குடும்பத்துடன் சென்று வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த விழாவில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், எத்தனை நலத்திட்ட உதவிகள் செய்தாலும், அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சிதிருமண விழா நிகழ்ச்சியாகும். அம்மா இருக்கும்போது அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணத்தை நடத்தினோம்.அதனை தொடர்ந்து அம்மா பேரவை சார்பில் மதுரையில் 120 ஏழை, எளிய மணமக்களுக்கு திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.

    தற்போது புரட்சித்த லைவர், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டும், 51-வது பொன்விழா ஆண்டை யொட்டி, அம்மா பேரவையின் சார்பில், எனது மகள் பிரியதர்ஷினி திருமணம் உட்பட 51 எளிய மணமக்களுக்கு சமத்துவ, சமுதாய திருமண விழாவினை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி வரும் பிப்ரவரி 23-ந் தேதி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். சமத்துவம் சமுதாய திருமணவிழா என்பது, எல்லோருக்கும் சமத்துவம் படைக்கும் வகையில் அடித்தளமாக இருக்கும்.

    இந்த திருமண விழாவிற்கான முகூர்த்த கால் அமைக்கும் பணி, வருகிற, 11-ந் தேதி காலை 10 மணிக்கு டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி, காமராஜ், செல்லூர் கே ராஜு, டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம். கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா.

    கருப்புசாமி பாண்டியன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, ரவிச்சந்திரன், செந்தில்நாதன், எம்.ஏ.முனியசாமி குட்டி யப்பா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறனர்.

    இந்த சமத்துவ சமுதாய திருமண விழா அம்மா பேரவையின் சார்பில், அனைத்து நல்ல உள்ளங்களின் பங்களி ப்புடன், நிதிஉதவியுடன் நடைபெறுகிறது. தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாக்டர் சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையில் உள்ள சரவணா மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பா.சரவணன்-கனிெமாழி தம்பதியரின் மகன் டாக்டர் அம்ரித் குமாருக்கும், தனசேகரன்-விஜயலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் சாதுர்யா என்கிற அபூர்வஸ்ரீக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அவர்களது திருமணம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்து வக்கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை (14-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது.இவர்களது திருமணத்தை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருமண விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படு கிறது. மேலும் ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மணமக்கள் டாக்டர் அம்ரித்குமார்-டாக்டர் சாதுர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

    • திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
    • காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார்.

     கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்காக வந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமண நிகழ்வை சேங்காலிபுரம் ராஜகோபால பட்டாச்சாரியார், கீழஅமராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தி வைத்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், புகழ்பெற்ற குரு ஸ்தலம் ஆலங்குடியில் நேற்று அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண விழா மாலை 6.30 மணி அளவில் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.

    ்திருமண நிகழ்வை சேங்காலிபுரம் ராஜகோபால பட்டாச்சாரியார், கீழஅ மராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியார் ஆகியோர் திருமண வைபவங்களை தலைமை ஏற்று நடத்தி வைத்தனர். இந்நிகழ்வில் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ .எம். மோகன் குடும்பத்தார்கள் மற்றும் உபயதா ரர்கள்,கி ராமவா சிகள் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • மணமக்களை டி.டி.வி. தினகரன் வாழ்த்தி பேசினார்
    • பெருமாள் கோவில் அருகே டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

    திருப்பூர், 

    அ.ம.மு.க.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி தலைவருமான மலையாண்டவர் ஏ.ஆர்.நடராஜ்-நிர்மலா தம்பதியின் மகன் லோகேஷ் மற்றும் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்கிற மாரிமுத்து-ஈஸ்வரி தம்பதியின் மகள் வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் ராமசாமி கவுண்டர்முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் உடுமலை சி.சண்முகவேலு, அமைப்பு செயலாளர் சேலஞ்சர் துரை ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர் பேசினார். விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கே.கிங், மாநகர் மாவட்ட துணை செயலாளர் சூர்யா செந்தில் மற்றும் அ.ம.மு.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அ.ம.மு.க. பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலையாண்டவர் நடராஜ் நன்றி கூறினார்.

    முன்னதாக திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பெருமாள் கோவில் முன்பும், வடக்கு மாவட்டத்தின் சார்பில் சந்தைப்பேட்டையிலும் அ.ம.மு.க. பொதுச்செயலளார் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருப்பூர் பெருமாள் கோவில் அருகே திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் விசாலாட்சி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் புல்லட் ரவி, சூர்யா செந்தில் , மாநகர் மாவட்ட பொருளாளர் சேகர் என்ற ஜெகநாதன், மாநகர் மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ரத்தினசாமி, மாநகர் மாவட்ட அம்மா இளைஞரணி செயலாளர் பெஸ்ட் தம்பு என்ற சண்முகசுந்தரம், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முத்துக்குட்டி, பொதுக்குழு உறுப்பினர் குட்வின் பழனிசாமி, அம்மா பனியன் தொழிற்சங்கம் சுரேஷ்ராஜா, மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பச்சமுத்து உள்பட அ.ம.மு.க. பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. விழாவுக்கு வந்த 16 பேரை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது லால்பேட்டை. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

    இதில் அந்த பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ரோட் டில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வெறிநாய் வந்தது. அந்த நாய் திடீரென்று ரோட்டில் நடந்து சென்ற அப்துல்ரகுமான் (65) என்பவரை கடித்து குதறியது. இதனால் அவர் கூச்சல் போட்டு அலறினார். அதனைத்தொடர்ந்து அந்த வெறிநாய் ரோட்டில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில் யாசன்பீவி(85), அப்துல்ஹமீது(55), முகமதுஷபீர், ஆசைத்தம்பி உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். 

    காயம் அடைந்த அனைவரும் காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 5 பேர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, லால்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக நாய்கள் மற்றும் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் ரோட்டில் செல்பவர்களையெல்லாம் விரட்டி கடிப்பதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×