search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hospital treatment"

    • அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது.
    • போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்வாளன் மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடலூரில் இருந்து இந்த பாதுகாப்பு பணிக்காக கோவை நோக்கி நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் சுமார் 16 போலீசார் குழு உடன் சென்றனர். போலீஸ் வாகனத்தை மோகன் (வயது 27) என்பவர் ஓட்டி சென்றார். 

    இன்று அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனம் முன்பகுதி பலத்த சேதமானது. போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி போலீஸ் டிஎஸ்பி எஸ் பி மற்றும் போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீசர்களை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
    • காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார்.

     கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்காக வந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சுமார் 250 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. #DengueFever #Swineflu
    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், மதுரை, நெல்லை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஒரு சில மாவட்டங்களில் பன்றி காய்ச்சலும் பரவி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு விதமான வைரஸ் கிருமிகளும் பரவிவருவதால் அதனை தடுக்க தமிழக சுகாதாரத்துறை அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

    கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் பணியில் சுகாதாரத்துறையும் மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



    சென்னையில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டயர், பழைய கழிவுகள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறையின் தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் கூட காய்ச்சலால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறைக்கு தகவல் வந்துள்ளது.

    சென்னையில் 4 அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமே 250 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 45 பேர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் 3 பேருக்கு டெங்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

    அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு 50 படுக்கை வசதியுடன் 2 வார்டு தயாராக இருப்பதாகவும், டெங்குவினால் பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், நர்சுகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இன்று வரை 53 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 27 பேர் பெரியவர்கள், 26 பேர் குழந்தைகள் ஆவர். இதுதவிர 5 பேருக்கு டெங்கு ‘பாசிட்டிவ்’ இருப்பதால் அவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:-

    கடந்த வருடத்தை ஒப்பிடும் போது தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. காய்ச்சல் வார்டில் நோயாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கிறோம். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படும் என்பதால் ‘கஞ்சியும்’ வழங்கப்படுகிறது. வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு முகமுடி வினியோகிக்கப்பட்டுள்ளது.

    பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியாக வார்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் தடுப்பூசி 700 பேருக்கு போடப்பட்டு உள்ளது. தேவையான அளவு தடுப்பூசி மற்றும் மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 47 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு பாதிக்கப்பட்ட 31 குழந்தைகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை இயக்குனர் அரசர் சீராளர் தெரிவித்தார்.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் காரணமாக 112 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் திருவள்ளூரை அடுத்த புஞ்சி ரெட்டி பள்ளியை சேர்ந்த ரெதீசன் (17), விளாம்பாக்கத்தை சேர்ந்த பொன்னுரங்கம் (30), செம்பேட்டை சேர்ந்த மகேஷ் (27), சீற்றம்பாக்கத்தை சேர்ந்த் காயத்ரி (18), திருவள்ளூர் ராஜாஜி புரத்தை சேர்ந்த் நிஷாந்த் (8) ஆகிய 5 பேரின் ரத்த மாதிரியை சோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து 5 பேரையும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் சிகிச்சைக்காக பலர் குவிந்த வண்ணம் உள்ளனர். #DengueFever #Swineflu

    நாமக்கல் அருகே மீன் வாங்க வந்த வாலிபரிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அவரது கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள திருகாட்டு துறை பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 40).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு மீன் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பரமத்தி வேலூர் தெற்கு தெருவை சேர்ந்த பாரி (35) என்பவர் நேற்று மீன் வாங்க வந்தார். அப்போது பெரிய இலையில் மீனை கட்டி தரும்படி பாரி கூறினார்.

    இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த மணிவாசகம் தன் கையில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் பாரியின் கழுத்தை தர தர வென அறுத்தார்.

    இதனால் வலியால் அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் பாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிவாசகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ×