என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனையில் சிகிச்சை"

    • திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர முதலமைச்சர் அழைப்பு .
    • ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு என தகவல்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அங்கிருந்தபடியே ஓரணியில் தமிழ்நாடு நிலவரம், தேர்தல் களப்பணிகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், அப்போலோ மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    2026 சட்டமன்றத் தேர்தல் களப் பணிகள் குறித்து முதலமைச்சர் அறிவுரைகளை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
    • காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார்.

     கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்காக வந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×