search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணவிழா"

    • ஜெயலலிதா கோவிலில் 11-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் விழா டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.
    • தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழகர் கோவில், பழமுதிர்சோலை ஆகிய கோவிலில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெறும், திருமணவிழாவிற்கான அழைப்பிதழ்களை தனது குடும்பத்துடன் சென்று வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த விழாவில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், எத்தனை நலத்திட்ட உதவிகள் செய்தாலும், அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சிதிருமண விழா நிகழ்ச்சியாகும். அம்மா இருக்கும்போது அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணத்தை நடத்தினோம்.அதனை தொடர்ந்து அம்மா பேரவை சார்பில் மதுரையில் 120 ஏழை, எளிய மணமக்களுக்கு திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.

    தற்போது புரட்சித்த லைவர், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டும், 51-வது பொன்விழா ஆண்டை யொட்டி, அம்மா பேரவையின் சார்பில், எனது மகள் பிரியதர்ஷினி திருமணம் உட்பட 51 எளிய மணமக்களுக்கு சமத்துவ, சமுதாய திருமண விழாவினை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி வரும் பிப்ரவரி 23-ந் தேதி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். சமத்துவம் சமுதாய திருமணவிழா என்பது, எல்லோருக்கும் சமத்துவம் படைக்கும் வகையில் அடித்தளமாக இருக்கும்.

    இந்த திருமண விழாவிற்கான முகூர்த்த கால் அமைக்கும் பணி, வருகிற, 11-ந் தேதி காலை 10 மணிக்கு டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி, காமராஜ், செல்லூர் கே ராஜு, டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம். கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா.

    கருப்புசாமி பாண்டியன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, ரவிச்சந்திரன், செந்தில்நாதன், எம்.ஏ.முனியசாமி குட்டி யப்பா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறனர்.

    இந்த சமத்துவ சமுதாய திருமண விழா அம்மா பேரவையின் சார்பில், அனைத்து நல்ல உள்ளங்களின் பங்களி ப்புடன், நிதிஉதவியுடன் நடைபெறுகிறது. தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×