search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water inflow declined"

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். #Hogenakkal

    மேட்டூர அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 14 ஆயிரத்து 232 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த 19-ந் தேதி 24 ஆயிரத்து 764 கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர், படிப்படியாக குறைய தொடங்கியது.

    நேற்று 17ஆயிரத்து 994 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் குறைந்து 14ஆயிரத்து 232 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்காக 13ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.18 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 105.20 அடியாக உயர்ந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. #MetturDam
    சேலம்:

    கடந்த 13-ந் தேதி 13ஆயிரத்து 47 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 7ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 6 ஆயிரத்து 191 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 13ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று 103.82 அடியாக இருந்து மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.35 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,200 கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 7,400 கன அடியாக இருந்தது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 6,200 கனஅடியாக குறைந்தது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    மெயின் அருவி, சினி சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் குளித்து விட்டு சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று சற்று சரிந்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மாநிலத்திலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டறாம் பாளையம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று சற்று சரிந்து நீர்வரத்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 7 கனஅடியாக வந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    இதையடுத்து பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஒகேனக்கல்லில் மீன் விற்பனை குறைந்தது.
    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இதனால் மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் முழுஅளவு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழி யாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக இருந்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்தது. இன்று வினாடிக்கு 8,600 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் அங்குள்ள அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.

    இதனால் கர்நாடகா- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்தது. இன்று வினாடிக்கு 8,600 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் சினிபால்ஸ், புலியருவி, ஐந்தருவி, காவிரி ஆற்றில் கரையோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் ஒகேனக்கல்லுக்கு அதிகமாக நீர்வரத்து வந்ததால் மெயின் அருவியில் கம்பிகள் சேதம் அடைந்தது. அந்த பகுதியில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு 13 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து சற்று சரிந்து நேற்று 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்றும் அதே அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லாததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

    நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 13 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து சற்று சரிந்து நேற்று 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்றும் அதே அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்தபோது ஒகேனக்கல்லில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மெயிருனவியில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்து சேதமடைந்தது.

    இதனால் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகளை யாரும் குளிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததால் சினிபால்ஸ், காவிரி ஆற்றில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், சினிபால்ஸிலும் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் மெயினருவியில் மட்டும் குளிக்க இன்றும் 63-வது நாளாக தடைவிதிக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளை யாரையும் மெயினருவி பகுதியில் அனுமதிக்கவில்லை.

    மேலும், மெயினருவியில் உள்ள சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக மெயினருவி பகுதிகளில் வரும் நீர்வரத்தை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை முடித்த பிறகு மீண்டும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி துறை அதிகாரி தெரிவித்தனர்.

    இதுபோன்று கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல் இயக்க தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரிசலில் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். வழக்கமான பாதையான மாமரத்துகடுவு பகுதியில் பரிசல் இயக்க இன்றும் அதிகாரிகள் தடைவிதித்து உள்ளனர். நீர்வரத்து மேலும் சரிந்து 5 ஆயிரம் கனஅடிக்கு குறைவாக வரும்போதுதான் வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


    கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து இன்று காலை 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 26,590 கன அடியும், கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக இருந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து அதிகரித்து 34 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலையில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை இந்த நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கொட்டுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

    இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆனால் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல்திட்டு வரை இன்று 3-வது நாளாக பரிசல் இயக்கப்பட்டு வருகிறது.

    முதலைப்பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.  #Hogenakkal #Cauvery
    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. #papanasamdam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் மேற்கு பருவமழை காரண மாக கடந்த வாரம் கனமழை கொட்டியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகள் தவிர மீதமுள்ள 9 அணைகளும் நிரம்பியது.

    பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லை. செங்கோட்டை, குண்டாறு மலைப் பகுதியில் மட்டும் சிறிய அளவில் சாரல் மழை பெய்து வருகிறது. குண்டாறு அணை பகுதியில் இன்று காலை வரை ஒரு நாள் மழை அளவு 9 மில்லி மீட்டர் ஆகும். அடவி நயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும், கடனாநதி, செங்கோட்டை நகர பகுதிகளில் 1 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இன்று முற்றிலும் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2555 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 436 கனஅடி தண்ணீரும், கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 2396 கனஅடி தண்ணீர் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 141.80 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 3084 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2593 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 146.09 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 445 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.55 அடியாக உள்ளது. கடனாநதி அணை யில் 83 அடி தண்ணீரும், ராமநதி அணையில் 82.50 அடியும், கருப்பாநதி-70.21, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-19, நம்பி யாறு-20.60, கொடு முடியாறு-52.50, அடவி நயினார்-132.22 அடி தண்ணீரும் உள்ளது.

    அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் வெள்ளம் குறைந்தது. #papanasamdam

    ×