search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vratham"

    நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
    அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு சந்திரன் பூமியை சுற்றி வரும்போது ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற அளவில் விலகிச் சென்று ஏகாதசியன்று சுமார் 120 டிகிரிலியிருந்து 132 டிகிரியில் இருக்கும். அப்போது பூமி, சூரியன் சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடைகிறது. அப்போது மற்ற நாட்களை விட அதிக அளவு பூமியின் மீதும், பூமியில் உள்ள தண்ணீர் மீதும், சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பாதிப்பு உண்டாகிறது.

    மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படும். அதன் காரணமாக நமது உடம்பில் உள்ள ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் உணவருந்தினால் சரியாக ஜீரணமாவது கடினம்.

    சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் கடல் நீர் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப்படுவதைப் போல மனித உடலிலும் உள்ள தண்ணீரிலும் பாதிப்பு உண்டாகி, ஜீரண சக்தியை இழந்து விடுகிறது. மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாட்களில் தொடர்ந்து உணவை உட்கொண்டு வருபவர்களுக்கு அஜீரணம் உண்டாகலாம்.

    அஜீரணமானவுடன் மருந்து உட்கொள்வதும், சாப்பிட்ட உணவை பலவந்தமாக ஜீரணிக்க முயற்சி செய்வதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும். இதன் விளைவாகத்தான் சிறிய சிறிய நோய்கள் உண்டாகிறது. அந்த நோய்கள் பெரிய நோய்களாக மாறி விடக்கூடாது என தடுக்கவே நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
    மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.
    அம்பரீஷன்! மாமன்னன். அதிகாரம், செல்வம், சுக போகங்கள் என அனைத்துமே அவன் கைக்கு எட்டிய நிலையில் இருந்தன. என்றாலும் அவன் அவற்றில் விழவில்லை.

    அவன் மனம் எப்போதும் விஷ்ணுவின் மலர்ப்பதங்களையே எண்ணியது. அரச வாழ்க்கை சுகபோகத்தால் ஏற்படும் தடுமாற்றமோ மயக்கமோ அறவே அவனிடம் இல்லை.விரதமும் பூஜையுமாக உள்ளில் ஒங்கி நின்றான் அம்பரீஷன். அப்படி அவன் மேற்கொண்டிருந்த விரதம் ஏகாதசி விரதம்.

    மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.

    அதாவது, தசமியன்று மதியம் மட்டும் சாப்பிடுவான். இரவில் உணவை விலக்கி, மறுநாள் முழுவதும் சாப்பாடு இன்றி இறைவனை பூஜிப்பான். அடுத்த நாள் காலை துவாதசி திதியில் பாரணை செய்வது என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான் அம்பரீஷன்.

    ஆண்டுக்கணக்கில் பின்பற்றி வந்த அந்த ஏகாதசி விரதத்தை ஒருமுறை யமுனை நதிக்கரையில் அனுஷ்டிக்கலாம் என்று அம்பரீஷன் முடிவு செய்தான். இதையடுத்து மதுவனம் வந்து சேர்ந்தான் அம்பரீஷன். திட்டமிட்டப்படி விரதத்தை தசமியில் தொடங்கினான். ஏகாதசி உபவாசம் முடிந்து, துவாதசி திதி வந்து விட்டது. விரதத்தை முடித்து பாரணை செய்ய வேண்டும்.

    அப்படிப்பட்ட சமயத்தில் அங்கு துர்வாசர் வந்து சேர்ந்தார். துர்வாச முனிவரை வரவேற்று உபசரித்தான் அம்பரீஷன். பிறகு தன்னுடன் உணவருந்த வருமாறு அழைத்தான். மன்னா! இதோ யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன் என்று போனார் துர்வாசர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. பாரணையை நிறைவு செய்வதற்கான காலம் முடியப்போகிறது.

    அதைச் செய்யாவிடில், அதுவே தோஷமாகி விடும். என்ன செய்வது?

    விரதத்தை முடிக்க இயலாமல் தடுமாறினான் அம்பரீஷன். ஆட்களை அனுப்பி நதியில் துர்வாசரை தேடச் சொன்னான். அரச படை வீரர்கள் யமுனை நதிக்கரையை சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால் துர்வாசர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

    அம்பரீஷனுக்கு மிகவும் கவலை யாகி விட்டது. மன்னனின் கவ லையை அறிந்த மந்திரிகள், மன்னா! கொஞ்சம் துளசி தீர்த்தத்தைப் பருகி, நீங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம். துர்வாச மகரிஷி வந்தவுடன் அவருடன் சேர்ந்து நீங்கள் உணவருந்தலாம். அதனால், விரதமும் நிறைவேறும். அதிதியை விட்டுவிட்டு சாப்பிடும் தோஷமும் ஏற்படாது என்றனர்.

    மந்திரிகளின் யோசனை அம்பரீ ஷனுக்கு சரி என மனதில் தோன் றியது. மேலும் அந்த நேரத்தில் அதை தவிர வேறு வழியும் இல்லை. அதனால் அம்பரீஷன் அந்த ஆலோசனையை ஏற்றான். அவன் துளசி தீர்த்தத்தைப் பருகி பாரணை செய்த சிறிது நேரத்தில் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். தன்னை உணவருந்த அழைத்து விட்டு மன்னன் மட்டும் துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்து விட்டான் என்பதை உணர்ந்தார். அவருக்கு கோபம் தலைக்கேறியது.

    ‘அம்பரீஷா! என்னை அவமதித்து விட்டாய் அல்லவா? இதே பார்!’ என்று துர்வாசர் சீறினார். பிறகு தன் ஜடாமுடியில் ஒரு முடியைப் பிய்த்து வீசினார்.
    அந்த முடியில் இருந்து ஒரு பெரிய பூதம் பயங்கர உருவில் வெளிப்பட்டது. அந்த பூதத்தை பார்த்த உடனே அனைவரும் நடுநடுங்கிச் சிதறி ஓடினார்கள். அதைக்கண்ட துர் வாசர் கடகடவென்று சிரித்தார். பூதமோ, அம்பரீஷனை நோக்கிப் பாய்ந்து சென்றது.

    ஆனால் அம்பரீஷன் பயப்பட வில்லை. மாறாக கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தான். அதைப் பார்த்து துர்வாசரே ஆச் சரியப்பட்டார். உயிர் பிழைத்தால் போதும் என்று அனைவரும் அறியபடி ஓடுகின்றனர். ஆனால் இவன் ஓடவுமில்லை. என்னை மன்னித்து காப்பாற்றுங்கள் என்று தன்னிடம் சரண் அடையவும் இல்லையே என்று துர்வாசர் சிந்தித்தார்.

    பூதம் அம்பரீஷனை நெருங்கியது. அப்போது தீப்பிழம்புகளை கக்கிக் கொண்டு, படுவேகமாகச் சுழன்றபடி வெளிப்பட்டது ஸ்ரீசுதர்சன சக்கரம். அதிர்ந்து போனார் துர்வாசர். இது ஏன் வெளிப்பட்டது? இது மகாவிஷ்ணுவின் ஆயுதமாயிற்றே! இப்போது வெளிப்பட்டது ஏன் என்று கேள்விகள் ஓடின அவருக்குள்.

    இதை எதிர்கொள்ள பூதத்தாலும் முடியாதே என்று தோன்றியது அவருக்கு. ஸ்ரீசுதர்சனத்தை சக்ரராஜன் என் பார்கள். உலகிலுள்ள ஆயுதங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவன். அதை எதிர்கொள்ள எவராலும் இயலாது. அப்படிப்பட்ட சுதர்சனம் படுவேகமாக சுழன்று வருகிறது.

    அம்பரீஷனைப் பிடிக்க முயன்ற பூதத்தை சுதர்சன சக்கரம் வெட்டித் தள்ளியது. அதன் பிறகு அது துர்வாசரை நோக்கித் திரும்பியது. இதுதான் சுதர்சனத்தின் சிறப்பு. அம்பை மட்டும் அது கவனிக்காது. ஏவியவரையும் அது கண்டுபிடித்து தண்டிக்கும். அப்படித்தான் பூதத்தை ஏவிய துர்வாசரை நோக்கிப் பாய்ந் தது சுதர்சனம்.

    துர்வாசருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகி விட்டது. பூதத்தை வீழ்த்தியதோடு நில்லாமல்தன்னைத் துரத்தும் சுதர்சனத்தை எப்படி நிறுத்துவது என்று அவருக்கு புரிய வில்லை. அதனால் அவர் பிரம்மன், சிவன், விஷ்ணு என்று ஒவ்வொருவரிடமாக அபயம் தேடி ஓடினார். எல்லாரையும் நடுங்க வைக்கும் கோபக்காரரான துர்வாசருக்கு என்ன ஆபத்து? ஏன் அவர் ஓட வேண்டும் ? புரியாமல் எல்லோரும் விழித்தார்கள்.

    முதலில் அவர் பிரம்மனிடம் சரண் அடைந்து சிருஷ்டி கர்த்தாவே, என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். அதற்கு இல்லை. இது என்னால் ஆகக்கூடியதல்ல. நீர் சிவபிரானிடம் சென்று கேட்டுப் பாரும் என்று பிரம் மன் கைவிரித்து விட்டார். அடுத்து துர்வாசர் சிவனிடம் ஓடினார். கயிலைநாயகா, காப்பாற்று என்னை என்று கூக்குரல் எழுப் பினார். ‘மகரிஷி! என்னால் சுதர் சனத்தைத் தடுக்க முடியாது. எனவே விஷ்ணுவைச் சரண் அடை யுங்கள் என்று விலகிக் கொண்டார் சிவபெருமான். சுதர்சன சக்கரம் அனல் பறக்க சுழன்று கொண்டே வருவதை பார்த்ததும், துர்வாசர் விஷ்ணுவிடம் சரண் புகுந்தார்.

    லட்சுமி நாயகா! உன்னுடைய ஆயுதம் என்னைத் துரத்துகிறது அதைத்தடுத்து நிறுத்தி என்னைக் காப்பாற்று என்றார். உடனே விஷ்ணு, துர்வாசரே, சுதர்சனம் கோபப்படுமாறு நீர் என்ன செய்தீர்? என்ன நடந்தது? என்று கேட்டார். இதையடுத்து துர்வாசர் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறினார். துர்வாசரின் விளக்கத்தைக் கேட்ட விஷ்ணு வருத்தம் ததும்ப மகிரிஷியே சக்கரத்தின் சினத்தைக் குறைக்க என்னாலும் முடியாது. ஆனால் ஒரு வழி இருக்கிறது என்று மெல்ல இழுத்தார்.

    என்ன வழி? அதை உடனே சொல்லுங்கள் என்றார் துர்வாசர்.

    அதற்கு விஷ்ணு, துர்வாசரே இது என்னால் செலுத்தப்பட்டிருந்தால் என்னால் நிறுத்திவிட முடியும். அம்பரீஷனும் இதை செலுத்த வில்லை. அவனுக்கு ஆபத்து என்பதால் தானாகவே கோபத்தில் சுதர்சனம் சுழல்கிறது. எனவே அம்பரீஷன் சுதர்சனத்தை பிரார்த்தித்தால், அதன் சினம் அடங்கும், உங்கள் ஆபத்தும் நீங்கும். இதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார்.

    துர்வாசருக்கு தனக்கு ஏற்பட் டுள்ள சூழ்நிலை தெளிவாகப் புரிந்து விட்டது. யாரை அழிக்க முற்பட்டாரோ, அந்த அம்பரீஷனிடமே அபயம் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவுக்கு வந்தார். அம்பரீஷா, என்னைக் காப்பாற்று என்ற படியே யமுனை நதிக்கரைக்கு விரைந்தார். அங்கே அம்பரீஷன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.

    மகிகரிஷியின் குரலைக் கேட்டு கண் விழித்தான். துர்வாசரை துரத்திக் கொண்டு வரும் சுதர்சன சக்கரத்தையும் பார்த்தான். என்னை நடந்ததென்று அவனுக்கு புரிந்து விட்டது. சக்ரராஜனே உலகம் அனைத்தையும் அழிக்க வல்லவரே உன்னை வணங்குகிறேன். மகிரிஷி என்னுடைய அதிதி. அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படா வண்ணம் காத்து அருள்புரிவாயாக என்று சுதர்சனரைத் துதித்தான்.

    அனல் பறக்கச் சுழன்று வந்து கொண்டிருந்த சக்கரம் மறைந்து போயிற்று. துர்வாசர் மனம் அமைதி பெற்று மன்னனோடு உணவருந்தி புறப்பட்டு போனார்.
    அப்படியரு அத்யந்தப் பாதுகாப்பை பேரருளை அம்பரீஷனுக்கு கொடுத்தது ஏகாதசி விரதம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.
    மார்கழி மாதம் வருகின்ற ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். அப்போது சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசலை திறந்து வைப்பர். அதில் நுழைந்து வந்தால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும். ஸ்ரீரங்கம் விஷ்ணு ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொர்க்க வாசலில் நுழையக் காத்திருப்பர்.

    அன்று முழுநாளும் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவல் நைவேத்தியம் செய்து அந்த அவலைச் சாப்பிட்டால் நமது ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும். குசேலனைக் குபேரனாக்கிய நாள் தான் வைகுண்ட ஏகாதசி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    ஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.

    அந்தத் திருநாள் மார்கழி மாதம் 3-ந் தேதி செவ்வாய்க்கிழமை (18.12.2018) அன்று வருகின்றது. மறுநாள் துவாதசியன்று அன்னம் வைத்து உணவு முறைப்படி விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.
    இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.

    கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

    1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்

    3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

    4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

    5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது

    6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

    7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

    8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது

    9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்

    10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்

    11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

    12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்

    13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

    14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

    15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

    16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

    17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்

    18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்

    19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

    20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்

    21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்

    22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

    23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

    24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

    25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும் 
    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்றும் அழைக்கிறார்கள்.
    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்றும் அழைக்கிறார்கள். ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அவற்றின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.

    பாபாங்குசா ஏகாதசி

    ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்களையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும், பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன?

    இந்திர ஏகாதசி

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.

    பின்னர் நாரதர் வந்ததின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறி முடித்தார் நாரதர்.

    தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.

    இன்னும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம் என்பது உறுதி.
    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம்.

    சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.

    இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.

    ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.
    விரதங்களும் பலன்களும்

    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

    திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவான் பரிபூர அன்பைப் பெறலாம்.

    செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

    புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.

    வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

    வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

    சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
    பக்தி செலுத்துபவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி. இவரை விரதமிருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும். அரச வாழ்வு வந்து சேரும்.
    நரசிம்மர் என்பதற்கு ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். திருமால் எடுத்த அவதாரங்களில் உக்கிரமான அவதாரமாக இருப்பினும், பக்தர்கள் அனைவருக்கும் விருப்பமான அவதாரம் இது. நரசிம்ம பெருமாளிடம், பிரகலாதனைப் போல பக்தி கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பக்தி செலுத்துபவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி. இவரை வழி பட்டால் எதிரிகள் தொல்லை விலகும். அரச வாழ்வு வந்து சேரும்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலைஅந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

    சுவாதி தினத்தன்று பக்தர்கள் அதிகாலை குளித்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.
    மகான் ராகவேந்திரரை கனவில் காணவிரும்பும் பக்தர்கள் அதற்குரிய விரதத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    மகான் ராகவேந்திரரை கனவில் காணவிரும்பும் பக்தர்கள் அதற்குரிய விரதத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.

    மகானை கனவில் காண்பதற்கான விரத பூஜை ஆரம்பிக்கும் முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும்.

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும்.

    பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
    ஸ்ரீ காம தேநுவே

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

    கையில் வைத்திருக்கும் துளசி தளத்தை படத்திற்கு அர்ப்பணித்தலும் முழு நம்பிக்கையுடன் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்தபின் கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

    இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.

    ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்து ஸ்ரீராகவேந்திரரை நம்பிக்கையுடன் வழிபட்டால் கனவில் நிச்சயம் தரிசனம் தருவார். அவர் தரிசனம் கிடைத்தால் நமது குறைகள் நீங்கும்.
    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதம். இந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதம். சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மற்றுமொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை, பவுர்ணமி கழிந்த 7-ம் நாளை ‘சப்தமி திதி’ என்று அழைக்கிறோம்.

    உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான, தை மாத வளர்பிறையை தொடர்ந்து வரும் சப்தமி திதியே ‘ரத சப்தமி’ ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகின்றன. அந்த தினத்தில், சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.

    விரதம் இருக்கும் முறை

    இந்த சிறப்பு மிக்க தினத்தில், சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்று நீராடலாம். நீராடும் போது, ஏழு எருக்கம் இலை, மஞ்சள் பொடி கலந்த அட்சதையை தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

    ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும்.

    கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

    சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்ற வற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    ரதசப்தமியன்று தொடங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார். எவ்வளவு கொடிய பாவங்களும் அதனால் அகன்று விடும்.
    அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
    அஜா ஏகாதசியை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார். முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.

    விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.

    பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.

    அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா !! உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.

    இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு ... இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.

    அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.

    அஜ ஏகாதசி நாளில் யாரெல்லாம் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.
    ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
    ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

    பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

    பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மணம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.

    செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உள்பட சுபாகரியம் நிறைவேறும்.
    ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ அனுஷ்டிக்க வேண்டும்.
    விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.

    அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.

    பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சப்த ரிஷிகளுக்கு நைவேத்தியம் செய்ததை, 7 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும்.

    மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சவுபாக்கியம் கிடைக்கும்.

    இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இந்த தானங்கள் செய்யப்படுவது, நம்முடைய வாழ்விலும், விரதங்களைக் மேற்கொள்ளும் போதும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே ஆகும்.

    கோ-தானம் (பசு அல்லது தேங்காய்), பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை), தில தானம் (எள்), ஹிரண்யம் (பொன்னாலான நாணயம்), வெள்ளி நாணயம், நெய், வஸ்திரம், நெல், வெல்லம், உப்பு ஆகியன. ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை, வஸ்திரம், தீபம், கும்பம், மணி, புத்தகம் ஆகியன.
    ×