search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ekadasi vratham"

    மகத்துவம் வாய்ந்த நாளான மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் உங்களின் சகல பாவங்கள் நீங்கும்.
    பெருமாளை வழிபடுவதற்கு ஒரு அற்புதமான நாளாக ஷட்திலா ஏகாதசி விரத தினம் வருகிறது. இந்த ஏகாதசி விரத தினத்தின் முக்கியத்துவம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    பூலோகத்தில் வாழ்ந்த பெண் ஒருத்தி தான் செய்த புண்ணிய பலன் காரணமாக மனித உடலோடு சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றால். சொர்க்க லோகத்தில் தனக்கு அத்தனை வசதிகள் இருந்தாலும் தன்னால் நேரத்திற்கு தான் விரும்பிய உணவு கிடைக்காமல் அவதியுற்றார். அப்போது அங்கே ஒரு துறவி உருவத்தில் வந்த பெருமாளிடம் தனது இந்த நிலை குறித்து கூறி, அதற்கான காரணம் என்ன என்று கேட்டாள்

    அதற்கு துறவி உருவில் இருந்த பெருமாள் அந்த பெண்ணிடம் அவள் பூலோகத்தில் அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு தான தர்மங்களை செய்திருந்தாலும், ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுக்க இருக்கும் பிணியான பசி பிணியினை போக்கும் அன்னதானம் செய்ய மறந்து விட்டதாகவும், மேலும் ஒரு முறை துறவி ஒருவர் சாப்பிட உணவு கேட்டு பாத்திரத்துடன் அவள் வீட்டின் முன்பாக வந்த போது, அந்த பாத்திரத்தில் மண்ணை கொட்டி அவரை அவமதித்த பாவமே அந்த பெண் சொர்க்கலோகத்தில் இருந்தாலும் உணவு கிடைக்காமல் அவதியுற நேரிட்டதாக கூறினார் துறவி உருவத்தில் இருந்த பெருமாள்.

    இதையறிந்து வருந்திய அந்த பெண்ணிடம் பெருமாள் மண்ணுலகில் வாழும் மனிதர்கள் நன்மைகளை பெற பல விரதங்களை கடைபிடிக்கின்றனர். அதில் ஒன்று தான் மாசி மாத தேய்பிறை காலத்தில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதம் ஆகும். இந்த விரதத்தை மேற்கொள்ளவர்கள் வாழ்வில் பசிப்பிணி தீர்ந்து அன்னம் எனப்படும் உணவிற்கு பஞ்சமிருக்காது என்றும், உன்னை இங்கு தரிசிக்க வரும் தேவலோக பெண்களிடம் இந்த ஷட்திலா விரதத்தின் பலன்களை பெற்றால் உனது பசிப்பிணி தீரும் என்று கூறி மறைந்தார்.

    வந்தது நாராயணனே என்றறிந்த பெண் தேவலோக பெண்கள் அவளின் தரிசனம் பெற வந்த போது ஒரு அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள். வந்த தேவலோக பெண்கள் அப்பெண் தங்களுக்கு தரிசனம் தருமாறு கெஞ்ஜினர். அதற்கு அந்த பெண், தேவலோக பெண்கள் கடைபிடித்த ஷட்திலா விரதத்தின் பலனை தனக்கு தந்தால் தான் அவர்களுக்கு தரிசனம் தருவதாக கூறினாள். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்ள, விரதத்தின் பலனை பெற்ற பெண் தனது பசிப்பிணி நீங்க பெற்றாள்.

    மகத்துவம் வாய்ந்த நாளான இந்த மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவான பெருமாளை விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் இதர பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிப்பட்டு உங்களால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், உங்களின் சகல பாவங்கள் நீங்குவதோடு, உங்கள் வாழ்நாளில் உணவிற்கு ஏங்கும் உணவு பஞ்சம், வறுமை போன்ற நிலை ஏற்படாமல் பெருமாள் காத்தருள்வார்.
    மாதம் தோறும் வரும் ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

    விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம். 
    ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
    1. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

    2. சாதி வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.

    4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.

    5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.

    6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு கொண்டது.

    7. வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.

    8. ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.

    9. ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    10. ஏகாதசி தினத்தன்று உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.

    11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுகிறது.

    12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது.

    13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லது என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை.

    14. வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்யலாம்.

    15. ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும்.

    16. துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை.

    17. துவாதசி திதி மிக, மிக குறைவான நேரமே இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம்.

    18. ஏகாதசி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன.
    19. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும்.

    20. ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.

    21. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் அனைவரும் விரதம் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    22. பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.

    23. நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.

    24. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு.

    25. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.

    26. முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.

    27. ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

    28. ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

    29. சீதையை பிரிந்த ராமர், பக்தாப்யர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி பங்குனி மாதத்தில் வரும் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பலனாக வானர சேனைகளின் துணைக்கொண்டு கடலை கடந்து இலங்கேஸ்வரனை அழித்து இலங்கையை வென்றார். விஜயா என்னும் இந்த ஏகாதசி விரதம் நாம் கேட்ட பலன்களை கொடுக்கக்கூடியது.

    30. வைகுண்ட ஏகாதசி அன்று தான், குருக்ஷேத்ரப் போரில் அர்ஜுனனுக்குக் கீதையை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ததால், இந்தநாள் ‘கீதா ஜயந்தி’ எனவும் கொண்டாடப்படுகிறது.

    சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும்.
    எல்லாவிரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும். வளர்பிறையில் வருவது ‘காமதா ஏகாதசி’ எனப்படும். அன்றைய தினத்தில் விரதம் இருந்து, இறைவனை வணங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

    ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட வேண்டும். பூஜை அறைய சுத்தம் செய்து, அலங்காரப் பிரியனான மகா விஷ்ணு படத்திற்கு  மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். ( பூஜைக்கு தேவையான துளசியை முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்வது சிறப்பு) பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைத்து, பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள், ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

    ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மகாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண் விழிக்க வேண்டும்.

    கோபம், கவலை, வீண்பேச்சு, சண்டை, புறம்பேசுவதைத் தவிர்த்து, இறைவனை வழிபட உங்கள் பாவங்கள் தொலைந்து நன்மை பிறக்கும்.

    ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று விரதத்தை பூர்த்தி செய்து உணவு உண்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது.
    நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
    அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு சந்திரன் பூமியை சுற்றி வரும்போது ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற அளவில் விலகிச் சென்று ஏகாதசியன்று சுமார் 120 டிகிரிலியிருந்து 132 டிகிரியில் இருக்கும். அப்போது பூமி, சூரியன் சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடைகிறது. அப்போது மற்ற நாட்களை விட அதிக அளவு பூமியின் மீதும், பூமியில் உள்ள தண்ணீர் மீதும், சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பாதிப்பு உண்டாகிறது.

    மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படும். அதன் காரணமாக நமது உடம்பில் உள்ள ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் உணவருந்தினால் சரியாக ஜீரணமாவது கடினம்.

    சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் கடல் நீர் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப்படுவதைப் போல மனித உடலிலும் உள்ள தண்ணீரிலும் பாதிப்பு உண்டாகி, ஜீரண சக்தியை இழந்து விடுகிறது. மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாட்களில் தொடர்ந்து உணவை உட்கொண்டு வருபவர்களுக்கு அஜீரணம் உண்டாகலாம்.

    அஜீரணமானவுடன் மருந்து உட்கொள்வதும், சாப்பிட்ட உணவை பலவந்தமாக ஜீரணிக்க முயற்சி செய்வதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும். இதன் விளைவாகத்தான் சிறிய சிறிய நோய்கள் உண்டாகிறது. அந்த நோய்கள் பெரிய நோய்களாக மாறி விடக்கூடாது என தடுக்கவே நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
    மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.
    அம்பரீஷன்! மாமன்னன். அதிகாரம், செல்வம், சுக போகங்கள் என அனைத்துமே அவன் கைக்கு எட்டிய நிலையில் இருந்தன. என்றாலும் அவன் அவற்றில் விழவில்லை.

    அவன் மனம் எப்போதும் விஷ்ணுவின் மலர்ப்பதங்களையே எண்ணியது. அரச வாழ்க்கை சுகபோகத்தால் ஏற்படும் தடுமாற்றமோ மயக்கமோ அறவே அவனிடம் இல்லை.விரதமும் பூஜையுமாக உள்ளில் ஒங்கி நின்றான் அம்பரீஷன். அப்படி அவன் மேற்கொண்டிருந்த விரதம் ஏகாதசி விரதம்.

    மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.

    அதாவது, தசமியன்று மதியம் மட்டும் சாப்பிடுவான். இரவில் உணவை விலக்கி, மறுநாள் முழுவதும் சாப்பாடு இன்றி இறைவனை பூஜிப்பான். அடுத்த நாள் காலை துவாதசி திதியில் பாரணை செய்வது என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான் அம்பரீஷன்.

    ஆண்டுக்கணக்கில் பின்பற்றி வந்த அந்த ஏகாதசி விரதத்தை ஒருமுறை யமுனை நதிக்கரையில் அனுஷ்டிக்கலாம் என்று அம்பரீஷன் முடிவு செய்தான். இதையடுத்து மதுவனம் வந்து சேர்ந்தான் அம்பரீஷன். திட்டமிட்டப்படி விரதத்தை தசமியில் தொடங்கினான். ஏகாதசி உபவாசம் முடிந்து, துவாதசி திதி வந்து விட்டது. விரதத்தை முடித்து பாரணை செய்ய வேண்டும்.

    அப்படிப்பட்ட சமயத்தில் அங்கு துர்வாசர் வந்து சேர்ந்தார். துர்வாச முனிவரை வரவேற்று உபசரித்தான் அம்பரீஷன். பிறகு தன்னுடன் உணவருந்த வருமாறு அழைத்தான். மன்னா! இதோ யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன் என்று போனார் துர்வாசர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. பாரணையை நிறைவு செய்வதற்கான காலம் முடியப்போகிறது.

    அதைச் செய்யாவிடில், அதுவே தோஷமாகி விடும். என்ன செய்வது?

    விரதத்தை முடிக்க இயலாமல் தடுமாறினான் அம்பரீஷன். ஆட்களை அனுப்பி நதியில் துர்வாசரை தேடச் சொன்னான். அரச படை வீரர்கள் யமுனை நதிக்கரையை சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால் துர்வாசர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

    அம்பரீஷனுக்கு மிகவும் கவலை யாகி விட்டது. மன்னனின் கவ லையை அறிந்த மந்திரிகள், மன்னா! கொஞ்சம் துளசி தீர்த்தத்தைப் பருகி, நீங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம். துர்வாச மகரிஷி வந்தவுடன் அவருடன் சேர்ந்து நீங்கள் உணவருந்தலாம். அதனால், விரதமும் நிறைவேறும். அதிதியை விட்டுவிட்டு சாப்பிடும் தோஷமும் ஏற்படாது என்றனர்.

    மந்திரிகளின் யோசனை அம்பரீ ஷனுக்கு சரி என மனதில் தோன் றியது. மேலும் அந்த நேரத்தில் அதை தவிர வேறு வழியும் இல்லை. அதனால் அம்பரீஷன் அந்த ஆலோசனையை ஏற்றான். அவன் துளசி தீர்த்தத்தைப் பருகி பாரணை செய்த சிறிது நேரத்தில் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். தன்னை உணவருந்த அழைத்து விட்டு மன்னன் மட்டும் துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்து விட்டான் என்பதை உணர்ந்தார். அவருக்கு கோபம் தலைக்கேறியது.

    ‘அம்பரீஷா! என்னை அவமதித்து விட்டாய் அல்லவா? இதே பார்!’ என்று துர்வாசர் சீறினார். பிறகு தன் ஜடாமுடியில் ஒரு முடியைப் பிய்த்து வீசினார்.
    அந்த முடியில் இருந்து ஒரு பெரிய பூதம் பயங்கர உருவில் வெளிப்பட்டது. அந்த பூதத்தை பார்த்த உடனே அனைவரும் நடுநடுங்கிச் சிதறி ஓடினார்கள். அதைக்கண்ட துர் வாசர் கடகடவென்று சிரித்தார். பூதமோ, அம்பரீஷனை நோக்கிப் பாய்ந்து சென்றது.

    ஆனால் அம்பரீஷன் பயப்பட வில்லை. மாறாக கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தான். அதைப் பார்த்து துர்வாசரே ஆச் சரியப்பட்டார். உயிர் பிழைத்தால் போதும் என்று அனைவரும் அறியபடி ஓடுகின்றனர். ஆனால் இவன் ஓடவுமில்லை. என்னை மன்னித்து காப்பாற்றுங்கள் என்று தன்னிடம் சரண் அடையவும் இல்லையே என்று துர்வாசர் சிந்தித்தார்.

    பூதம் அம்பரீஷனை நெருங்கியது. அப்போது தீப்பிழம்புகளை கக்கிக் கொண்டு, படுவேகமாகச் சுழன்றபடி வெளிப்பட்டது ஸ்ரீசுதர்சன சக்கரம். அதிர்ந்து போனார் துர்வாசர். இது ஏன் வெளிப்பட்டது? இது மகாவிஷ்ணுவின் ஆயுதமாயிற்றே! இப்போது வெளிப்பட்டது ஏன் என்று கேள்விகள் ஓடின அவருக்குள்.

    இதை எதிர்கொள்ள பூதத்தாலும் முடியாதே என்று தோன்றியது அவருக்கு. ஸ்ரீசுதர்சனத்தை சக்ரராஜன் என் பார்கள். உலகிலுள்ள ஆயுதங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவன். அதை எதிர்கொள்ள எவராலும் இயலாது. அப்படிப்பட்ட சுதர்சனம் படுவேகமாக சுழன்று வருகிறது.

    அம்பரீஷனைப் பிடிக்க முயன்ற பூதத்தை சுதர்சன சக்கரம் வெட்டித் தள்ளியது. அதன் பிறகு அது துர்வாசரை நோக்கித் திரும்பியது. இதுதான் சுதர்சனத்தின் சிறப்பு. அம்பை மட்டும் அது கவனிக்காது. ஏவியவரையும் அது கண்டுபிடித்து தண்டிக்கும். அப்படித்தான் பூதத்தை ஏவிய துர்வாசரை நோக்கிப் பாய்ந் தது சுதர்சனம்.

    துர்வாசருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகி விட்டது. பூதத்தை வீழ்த்தியதோடு நில்லாமல்தன்னைத் துரத்தும் சுதர்சனத்தை எப்படி நிறுத்துவது என்று அவருக்கு புரிய வில்லை. அதனால் அவர் பிரம்மன், சிவன், விஷ்ணு என்று ஒவ்வொருவரிடமாக அபயம் தேடி ஓடினார். எல்லாரையும் நடுங்க வைக்கும் கோபக்காரரான துர்வாசருக்கு என்ன ஆபத்து? ஏன் அவர் ஓட வேண்டும் ? புரியாமல் எல்லோரும் விழித்தார்கள்.

    முதலில் அவர் பிரம்மனிடம் சரண் அடைந்து சிருஷ்டி கர்த்தாவே, என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். அதற்கு இல்லை. இது என்னால் ஆகக்கூடியதல்ல. நீர் சிவபிரானிடம் சென்று கேட்டுப் பாரும் என்று பிரம் மன் கைவிரித்து விட்டார். அடுத்து துர்வாசர் சிவனிடம் ஓடினார். கயிலைநாயகா, காப்பாற்று என்னை என்று கூக்குரல் எழுப் பினார். ‘மகரிஷி! என்னால் சுதர் சனத்தைத் தடுக்க முடியாது. எனவே விஷ்ணுவைச் சரண் அடை யுங்கள் என்று விலகிக் கொண்டார் சிவபெருமான். சுதர்சன சக்கரம் அனல் பறக்க சுழன்று கொண்டே வருவதை பார்த்ததும், துர்வாசர் விஷ்ணுவிடம் சரண் புகுந்தார்.

    லட்சுமி நாயகா! உன்னுடைய ஆயுதம் என்னைத் துரத்துகிறது அதைத்தடுத்து நிறுத்தி என்னைக் காப்பாற்று என்றார். உடனே விஷ்ணு, துர்வாசரே, சுதர்சனம் கோபப்படுமாறு நீர் என்ன செய்தீர்? என்ன நடந்தது? என்று கேட்டார். இதையடுத்து துர்வாசர் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறினார். துர்வாசரின் விளக்கத்தைக் கேட்ட விஷ்ணு வருத்தம் ததும்ப மகிரிஷியே சக்கரத்தின் சினத்தைக் குறைக்க என்னாலும் முடியாது. ஆனால் ஒரு வழி இருக்கிறது என்று மெல்ல இழுத்தார்.

    என்ன வழி? அதை உடனே சொல்லுங்கள் என்றார் துர்வாசர்.

    அதற்கு விஷ்ணு, துர்வாசரே இது என்னால் செலுத்தப்பட்டிருந்தால் என்னால் நிறுத்திவிட முடியும். அம்பரீஷனும் இதை செலுத்த வில்லை. அவனுக்கு ஆபத்து என்பதால் தானாகவே கோபத்தில் சுதர்சனம் சுழல்கிறது. எனவே அம்பரீஷன் சுதர்சனத்தை பிரார்த்தித்தால், அதன் சினம் அடங்கும், உங்கள் ஆபத்தும் நீங்கும். இதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார்.

    துர்வாசருக்கு தனக்கு ஏற்பட் டுள்ள சூழ்நிலை தெளிவாகப் புரிந்து விட்டது. யாரை அழிக்க முற்பட்டாரோ, அந்த அம்பரீஷனிடமே அபயம் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவுக்கு வந்தார். அம்பரீஷா, என்னைக் காப்பாற்று என்ற படியே யமுனை நதிக்கரைக்கு விரைந்தார். அங்கே அம்பரீஷன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.

    மகிகரிஷியின் குரலைக் கேட்டு கண் விழித்தான். துர்வாசரை துரத்திக் கொண்டு வரும் சுதர்சன சக்கரத்தையும் பார்த்தான். என்னை நடந்ததென்று அவனுக்கு புரிந்து விட்டது. சக்ரராஜனே உலகம் அனைத்தையும் அழிக்க வல்லவரே உன்னை வணங்குகிறேன். மகிரிஷி என்னுடைய அதிதி. அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படா வண்ணம் காத்து அருள்புரிவாயாக என்று சுதர்சனரைத் துதித்தான்.

    அனல் பறக்கச் சுழன்று வந்து கொண்டிருந்த சக்கரம் மறைந்து போயிற்று. துர்வாசர் மனம் அமைதி பெற்று மன்னனோடு உணவருந்தி புறப்பட்டு போனார்.
    அப்படியரு அத்யந்தப் பாதுகாப்பை பேரருளை அம்பரீஷனுக்கு கொடுத்தது ஏகாதசி விரதம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற தவறான கருத்து உள்ளது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

    தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

    விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

    ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. 
    மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பவுர்ணமி திதிக்கு பிறகு 11-ம் நாளில் வரும் திதி ஏகாதசி ஆகும். ஒரு முறை முரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிக்க மகாவிஷ்ணு போரிட்டார். இந்தப் போர் 1000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது.

    ஒரு கட்டத்தில் இருவருமே களைப்படைந்தனர். மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் ஒரு குகையில் ஓய்வெடுத்தார். ஓய்வெடுக்கும் வேளையில் மகாவிஷ்ணுவை கொல்ல வந்தான் முரன்.

    அப்போது விஷ்ணுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தி, பெண்ணாக உருவெடுத்து, முரனை அழித்தது. கண்விழித்த மகாவிஷ்ணு அந்த சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டதாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. மேலும் ‘ஏகாதசியில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை நான் அளிப்பேன்’ என்றும் மகாவிஷ்ணு அருள்புரிந்தார்.

    மன்னர் அம்பரிஷ், தீவிர விஷ்ணு பக்தர். அவர் நெடுங்காலமாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்தால் அம்பரிஷ் மன்னனின் உயிருக்கு ஆபத்து வந்தது. ஆனால் அவன் செய்த ஏகாதசி விரத பலனால், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் துர்வாசரை கொல்ல துரத்தியது. பயந்து போன துர்வாச முனிவர், அம்பரிஷ் மன்னனை சரணடைந்ததுடன், அவனுக்கு அளித்த சாபத்தையும் நீக்கினார். ஏகாதசி விரதத்தின் பலன் அப்படிப்பட்டது.
    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்றும் அழைக்கிறார்கள்.
    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்றும் அழைக்கிறார்கள். ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அவற்றின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.

    பாபாங்குசா ஏகாதசி

    ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்களையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும், பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன?

    இந்திர ஏகாதசி

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.

    பின்னர் நாரதர் வந்ததின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறி முடித்தார் நாரதர்.

    தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.

    இன்னும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம் என்பது உறுதி.
    அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
    அஜா ஏகாதசியை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார். முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.

    விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.

    பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.

    அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா !! உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.

    இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு ... இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.

    அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.

    அஜ ஏகாதசி நாளில் யாரெல்லாம் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.
    அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பவுர்ணமியை அடுத்த ஏகாதசியை கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார்.

    போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.

    இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு ‘ஏகாதசி' எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.
    விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்கு உகந்த வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வளர்பிறை ஏகாதசி

    வைகாசி 11 (25.05.2018) வெள்ளி - அதிக ஏகாதசி
    ஆனி 09 (23.06.2018) திங்கள் - நிர்ஜல ஏகாதசி
    ஆடி 07 (23.07.2018) திங்கள் - விஷ்ணு சயன ஏகாதசி
    ஆவணி 06 (22.08.2018) புதன் - புத்திரத ஏகாதசி
    புரட்டாசி 04 (20.09.2018) வியாழன் - பரிவர்த்தன ஏகாதசி
    ஐப்பசி 03 (20.10.2018) சனி - பாபாங்குசா ஏகாதசி
    கார்த்திகை 03 (19.11.2018) திங்கள் - பிரபோதின ஏகாதசி
    மார்கழி 03 (18.12.2018) செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி
    தை 03 (17.1.19) வியாழன் - பீஷ்ம, புத்திர ஏகாதசி
    மாசி 04 (16.02.2019) சனி - ஜெய ஏகாதசி
    பங்குனி 03 (17.03.2019) ஞாயிறு - ஆமலகி ஏகாதசி.

    தேய்பிறை ஏகாதசி

    வைகாசி 27 (10.06.2018) ஞாயிறு - அதிக ஏகாதசி
    ஆனி 25 (09.07.2018) திங்கள் - அபரா ஏகாதசி
    ஆடி 22 (07.08.2018) செவ்வாய் - யோகினி ஏகாதசி
    ஆவணி 21 (06.09.2018) வியாழன் - காமிகா ஏகாதசி
    புரட்டாசி 19 (05.10.2018) வெள்ளி - அஜ ஏகாதசி
    ஐப்பசி 17 (03.11.2018) சனி - இந்திரா ஏகாதசி
    கார்த்திகை 17 (03.12.2018) திங்கள் - ரமா ஏகாதசி
    மார்கழி 17 (01.01.2019) செவ்வாய் - உற்பத்தி ஏகாதசி
    தை 17 (31.01.2019) வியாழன் - சபலா ஏகாதசி
    மாசி 18 (02.03.2019) சனி - ஷட்திலா ஏகாதசி
    பங்குனி 17 (31.03.2019) ஞாயிறு - விஜயா ஏகாதசி.
    ×