search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veeranam Lake"

    கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேட்டூர் அணை தண்ணீரும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில்  வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை திறப்பு மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும்.

    கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேட்டூர் அணை தண்ணீரும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி வரக்கூடிய 800 கனஅடிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    இது தவிர வெள்ளியங்கால் ஓடை வழியாக 1,000 கனஅடி தண்ணீரும், வி.என்.எஸ். மதகு வழியாக 1,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

    வடவாறு வழியாக 1,685 கனஅடி நீர் ஏரிக்கு வருகிறது. ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வீரமுடையான்சத்தம், குமராட்சி, வெள்ளூர், நடுத்திட்டு, பருத்திக்குடி, சிவாயம், நந்திமங்கலம் உள்பட 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகர் குடிநீருக்கு மட்டும் 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவமழை பெய்யும் காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரும். தற்போது மேட்டூர் அணையில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 45.25 அடி நீர்மட்டம் உள்ளது. நேற்று விடிய விடிய கனமழை நீடித்தது. எனவே வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    சென்னை மாநகர் குடிநீருக்கு மட்டும் 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. வீராணம் ஏரியின் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.50 அடியாக இருந்தது. மேலும் லால்பேட்டை, காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி நீர் வி.என்.எஸ். மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.

    சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    வீராணம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியிலும், மேட்டூர் அணை தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியிலும், மேட்டூர் அணை தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.90 அடியாக நீர்மட்டம் உயர்நதுள்ளது. நேற்று நீர்மட்டம் 44.70 அடியாக இருந்தது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 957 கனஅடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1739 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 62 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் கூடுதலாக 450 கனஅடி தண்ணீரை வெள்ளியங்கால் ஓடை வழியாக திறந்து விட்டனர். இந்த மழை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் வீராணம் ஏரி 2-வது முறையாக நிரம்பி விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது ஏரியில் 45.45 அடியில் தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 41 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.



    இதற்கிடையே கோடையின் காரணமாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்து வருகிறது.

    வீராணம் ஏரியில் 39 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நீர்மட்டம் அதற்கு கீழே குறையாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்போது ஏரி நிரம்பி காட்சி அளிக்கிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி நீர் வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி 47.50 அடியை எட்டியது.

    இங்கிருந்து பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாகவும், சென்னை குடிநீருக்காக ராட்சத குழாய் மூலமும் 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது.

    கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 43.20 அடியாக இருந்தது. நீர்மட்டம் 39 அடியாக குறைந்து விட்டால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் சூழ்நிலை உருவாகியது.

    இதைத்தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்தது.

    பின்னர் கடந்த 4-ந் தேதி கீழணைக்கு தண்ணீர் வந்தது. அங்கிருந்து கடந்த 8-ந் தேதி 2 ஆயிரம் கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.40 அடியாக உயர்ந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    கீழணையில் இருந்து தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து நேற்று இரவு வீராணம் ஏரி முழுக்கொள்ளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து இன்று 1,300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லை. வீராணம் ஏரியை நம்பியே சென்னை மக்கள் உள்ளனர்.

    வீராணம் ஏரி நிரம்பி உள்ளதால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் அளவு விரைவில் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். கோடைகாலத்தில் வீராணம் ஏரி வறண்டு காணப்படும். ஏரியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். இந்த நிலையில் சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்போது ஏரி நிரம்பி காட்சி அளிக்கிறது. இதைப்பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பி உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். #VeeranamLake


    கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்து உள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்துசேரும். மழைக் காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி 47.50 அடியை எட்டியது. சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும், வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் தற்போது ஏரி வறண்டுவரும் நிலை ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வழியாக கீழணை வந்தது. அங்கிருந்து கடந்த 7-ந் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரதொடங்கியது.

    இதை தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயர தொடங்கியது. இந்த நிலையில் கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு இன்று காலை 2,400 கன அடி நீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.03 அடியாக இருந்தது. ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்து உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து நேற்று சென்னைக்கு 62 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    ஏரிக்கு இதே அளவு தண்ணீர் கீழணையில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் இன்னும் 4 நாட்களில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டும். அதன் பிறகு இங்கிருந்து சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  #VeeranamLake
    விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
    ஸ்ரீ முஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரிமூலம் அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் வீராணம் ஏரி பூர்த்திசெய்கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.

    வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீர் தேவைப்படும்போது மீண்டும் வடவாறு வழியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    வீராணம் ஏரி பாசன பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருக்கிறது. இதனால் தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 74 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake
    வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் வீராணம் ஏரியின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்படுகிறது. கடந்த டிசம்பர் 27-ந்தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.

    இதற்கிடையில் கடந்த 9-ந்தேதி 46.75 அடியாக ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இதையடுத்து விவசாயத்துக்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் கடந்த 15-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 18-ந் தேதி வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை மீண்டும் எட்டியது. இந்த நிலையில் நேற்று வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்த போதிலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 47.50 அடியாக உள்ளது.

    ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 117 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக தொடர்ந்து 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #VeeranamLake
    வீராணம் ஏரி நேற்று மாலை முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 27-ந் தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி கடல் போல் காட்சி அளித்தது.

    இதற்கிடையில் கடந்த 9-ந் தேதி 46.75 அடியாக ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே மதகில் உடைப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், அந்த உடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு நீர் வரத்து இல்லாததால், ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இதையடுத்து விவசாயத்துக்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் கடந்த 15-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை நகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 60கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று காலை 44 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தொடர்ந்து ஏரிக்கு நீர் வந்துகொண்டிருப்பதால் விவசாயத்துக்கு 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டிய போதும் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவை குறைத்தது ஏன்? என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது மின் பற்றாக்குறை காரணமாக சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் 44 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது அந்த மின் பற்றாக்குறையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர் வழக்கம்போல் சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VeeranamLake

    வீராணம் ஏரி நேற்று மாலை தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    இந்த ஏரி மூலமாக சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர்வரும். பருவமழை காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 47 அடி வரை உயர்ந்தது.

    ஆனால் கடந்த சிலநாட்களாக வீராணம் ஏரியின் சுற்றி உள்ள பகுதிகளில் சரிவர மழை பெய்யாததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 45.25 அடியாக குறைந்தது.

    ஏரியின் நீர்மட்டம் 39 அடிக்கு குறையாமல் இருந்தால் தான், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீரை அனுப்பிவைக்க முடியும். கோடைகாலத்தில் சென்னைக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியதால், ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக கூடுதலாக தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

    கீழணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று மாலை ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.

    தற்போது பாசன பகுதியில் சம்பா பயிர் அறுவடை காலம் நெருங்கி விட்டதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. எனவே ஏரியில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 24 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. #VeeranamLake

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி, பூண்டி ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Veeranamlake #Poondilake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன.

    கடந்த சில நாட்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக பூண்டி, வீராணம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதையடுத்து சென்னை குடிநீருக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க அதிகாரிகளாக முடிவு செய்து உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்கின்றது. இதனால் கீழணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று 1,350 கனஅடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் மூலமும் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.60 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உயர்ந்துள்ளது.

    ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இன்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கஜா புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின்போது தேவையான மழை இல்லாததால் தற்போது ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை உள்ளது என்பதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் வீராணம் ஏரியில் தொடர்ந்து தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

    47 அடிக்கு மேல் தண்ணீர் வந்து விட்டால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்படும். கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும். வீராணம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றார்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 21.38 அடியாக பதிவானது. 387 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி).

    ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 20 கன அடி தண்ணீர் பேபி கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Veeranamlake #Poondilake

    ×