search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veeranam lake water level"

    வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் வீராணம் ஏரியின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்படுகிறது. கடந்த டிசம்பர் 27-ந்தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.

    இதற்கிடையில் கடந்த 9-ந்தேதி 46.75 அடியாக ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இதையடுத்து விவசாயத்துக்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் கடந்த 15-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 18-ந் தேதி வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை மீண்டும் எட்டியது. இந்த நிலையில் நேற்று வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்த போதிலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 47.50 அடியாக உள்ளது.

    ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 117 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக தொடர்ந்து 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #VeeranamLake
    வீராணம் ஏரி நேற்று மாலை முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 27-ந் தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி கடல் போல் காட்சி அளித்தது.

    இதற்கிடையில் கடந்த 9-ந் தேதி 46.75 அடியாக ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே மதகில் உடைப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், அந்த உடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு நீர் வரத்து இல்லாததால், ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இதையடுத்து விவசாயத்துக்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் கடந்த 15-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை நகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 60கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று காலை 44 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தொடர்ந்து ஏரிக்கு நீர் வந்துகொண்டிருப்பதால் விவசாயத்துக்கு 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டிய போதும் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவை குறைத்தது ஏன்? என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது மின் பற்றாக்குறை காரணமாக சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் 44 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது அந்த மின் பற்றாக்குறையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர் வழக்கம்போல் சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VeeranamLake

    வீராணம் ஏரி நேற்று மாலை தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    இந்த ஏரி மூலமாக சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர்வரும். பருவமழை காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 47 அடி வரை உயர்ந்தது.

    ஆனால் கடந்த சிலநாட்களாக வீராணம் ஏரியின் சுற்றி உள்ள பகுதிகளில் சரிவர மழை பெய்யாததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 45.25 அடியாக குறைந்தது.

    ஏரியின் நீர்மட்டம் 39 அடிக்கு குறையாமல் இருந்தால் தான், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீரை அனுப்பிவைக்க முடியும். கோடைகாலத்தில் சென்னைக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியதால், ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக கூடுதலாக தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

    கீழணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று மாலை ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.

    தற்போது பாசன பகுதியில் சம்பா பயிர் அறுவடை காலம் நெருங்கி விட்டதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. எனவே ஏரியில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 24 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. #VeeranamLake

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 46.60 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் இன்று 46.70 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். வீராணம் ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்கின்றது. இதனால் கீழணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று 1,350 கனஅடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் மூலமும் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.60 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இன்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. நேற்று விவசாய பாசனத்துக்கு 230 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று அது 200 கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேலும் வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் உயராமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்த்து கொள்வர். ஆனால் தற்போது நீர்மட்டம் 46 அடியை தாண்டியுள்ளது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கஜா புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின் போது தேவையான மழை இல்லாததால் தற்போது ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை உள்ளது என்பதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் வீராணம் ஏரியில் தொடர்ந்து தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

    47 அடிக்கு மேல் தண்ணீர் வந்து விட்டால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்படும். கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும். வீராணம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றார். #VeeranamLake
    கடலூரில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.80 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவதிலும் முதன்மையான ஏரியாக விளங்குகிறது.

    கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர் மழை இல்லாததாலும், வடவாறு வழியாக அதிக தண்ணீர் வராததாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் 44 அடியாக நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு ஓடைகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வருகிறது.

    நேற்று ஏரியின் நீர்மட்டம் 45.55 அடியாக இருந்தது. இன்று அது சற்று அதிகரித்து 45.80 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாதோப்பில் உள்ள வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சென்னைக்கு தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 71 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. விவசாய பாசனத்துக்கு 34 மதகுகள் வழியாக 80 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. #VeeranamLake
    வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்றும் தொடர்ந்து அதே அளவான 1,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த சிலநாட்களாக தொடர்ந்து 47 அடியாக வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு நேற்று 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்படுகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும்.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றையவிட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake
    வீராணம் ஏரி அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    கர்நாடகா மாநில அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு காவிரி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,450 கன அடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவான 1,450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக கடந்த 26-ந் தேதி முதல் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 370 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று அது சற்று குறைந்து 300 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய விட 70 கனஅடி குறைவு ஆகும்.

    வீராணம் ஏரி அமைந்துள்ள பகுதியான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதேப்போல் நேற்று இரவும் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீராணம் ஏரி பகுதியில் பெய்த மழையின் அளவு 2 மி.மீ. ஆகும். மழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீராணம் ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. வீராணம் ஏரி நிரம்பியதால் அங்கிருந்து கடந்த மாதம் 14-ந் தேதி முதல் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 73 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றையவிட 1 அடி குறைவு ஆகும். #VeeranamLake
    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று ஏரியில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது மட்டுமில்லாமல் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது.

    பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1400 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவை விட 50 கன அடி குறைவாகும். நேற்று ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவு உள்ளது. தற்போது ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயத்துக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 76 கன அடி அதிகமாகும். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அந்த அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake
    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1524 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு 1524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 45.80 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது. தண்ணீரைசேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக் கட்டுக்கு நேற்று 1100 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கால்வாய்கள் தூர்வாரும்பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிந்த உடன் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வீராணம் ஏரி நிரம்பி உள்ளதால் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  #VeeranamLake
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 45.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய விட 550 கனஅடி அதிகமாகும். தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவான 45.50 அடியாக உள்ளது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதையொட்டி பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக குறைக்கப்பட்டது. இன்றும் அதேபோல் தொடர்ந்து 45.50 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவான 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 676 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது. #VeeranamLake
    வீராணம் ஏரியின் கரைகள் உடையாமல் இருக்க நீர்மட்டம் 45.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மை நீர் ஆதாரமாக திகழ்கிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.

    தற்போது கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து அங்கிருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவில் 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.80 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று குறைந்து 45.50 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியின் கரைகள் உடையாமல் இருக்க நீர்மட்டம் 45.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரியின் கரைகளின் பாதுகாப்பு கருதியும், தற்போது விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை இல்லை என்பதாலும் ஏரியின் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவான 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 972 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. #VeeranamLake
    ×