search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water open decrease"

    வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்றும் தொடர்ந்து அதே அளவான 1,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த சிலநாட்களாக தொடர்ந்து 47 அடியாக வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு நேற்று 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்படுகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும்.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றையவிட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake
    வீராணம் ஏரி அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    கர்நாடகா மாநில அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு காவிரி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,450 கன அடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவான 1,450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக கடந்த 26-ந் தேதி முதல் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 370 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று அது சற்று குறைந்து 300 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய விட 70 கனஅடி குறைவு ஆகும்.

    வீராணம் ஏரி அமைந்துள்ள பகுதியான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதேப்போல் நேற்று இரவும் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீராணம் ஏரி பகுதியில் பெய்த மழையின் அளவு 2 மி.மீ. ஆகும். மழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீராணம் ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. வீராணம் ஏரி நிரம்பியதால் அங்கிருந்து கடந்த மாதம் 14-ந் தேதி முதல் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 73 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றையவிட 1 அடி குறைவு ஆகும். #VeeranamLake
    ×