search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Rail"

    • 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
    • சென்னை-விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை ஐ.சி.எப்-ல் தற்போது வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

    தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்ட்ரல்-மைசூர், சென்னை சென்ட்ரல்-கோவை, காசர்கோடு-திருவனந்தபுரம் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த 3 வந்தே பாரத் ரெயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை-திருப்பதி, சென்னை எழும்பூர்-நெல்லை இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையில் 31, 32, 33-வது வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில், 31-வது வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு, சாம்பல் நிறம் கொண்ட இந்த ரெயில் சமீபத்தில்தான் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருந்தது. இந்த ரெயில் மங்களூரு-பாலக்காடு அல்லது சென்னை-மங்களூரு இடையே இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகின்றன. இதேபோல தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பாதைகளின் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    சென்னை-விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த பாதை மேம்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் குறைந்தபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட வேண்டும். எனவே குறிப்பிட்ட வழித்தடத்தில் வேகத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இப்பணி விரைவில் முடிந்து விடும். இந்த பணி முடிந்த பிறகு சென்னை எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவை ரெயில்வே வாரியம் எடுக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டு அதற்கான பெட்டிகள் கேரளா வந்தடைந்தது.
    • விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா முழுவதும் அதிநவீன வசதிகள் அடங்கிய வந்தே பாரத் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் காசர்கோடு-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டு அதற்கான பெட்டிகள் கேரளா வந்தடைந்தது. தற்போது இந்த ரெயில் மங்களூரு-எர்ணாகுளம் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்னதாக திருவனந்தபுரம் வரை வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் சில நடைமுறை சிக்கல் காரணமாக எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. மங்களூரு சென்ட்ரலில் வந்தே பாரத் ரெயில்களில் பராமரிப்புக்கான மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் சோதனை ஓட்டம் நடை பெற உள்ளது.

    • தாக்குதலில் ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த கண்ணாடி ஜன்னலில் விரசல் ஏற்பட்டது.
    • கடந்த வாரமும் வந்தே பாரத் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்தசில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மலப்புரம் மாவட்டம் தனூர் மற்றும் பரப்பனங்காடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

    இந்த தாக்குதலில் ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த கண்ணாடி ஜன்னலில் விரசல் ஏற்பட்டது. அதிரஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் கடந்த வாரம் தலச்சேரி-மாஹே ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது வந்தே பாரத் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும்.
    • விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு 3-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயிலை வருகிற 7-ந் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார்.

    8-ந்தேதி முதல் பயணிகள் ரெயில்வே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம் வந்தே பாரத் ரெயில் விஜயவாடாவில் இருந்து கூடூர், ரேணிகுண்டா, வழியாக சென்னைக்கு வந்து அடைகிறது.

    இதே மார்க்கத்தில் சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    விஜயவாடாவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும். முக்கிய 2 நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்று உள்ளது.

    வழியில் இந்த ரெயில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

    திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என விஜயவாடா கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெற்கு மத்திய ரெயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆந்திராவில் ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திரா பாத்திற்கும், செகந்திரா பாத்தில் இருந்து திருப்பதிக்கு என 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தற்போது விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு 3-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்றுவிட்டார்.
    • போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார்.

    செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல் அவர் திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்காக காத்திருந்தார்.

    வந்தே பாரத் ரெயில் வந்து நின்றதும் அதில் இருந்து ஏராளமான பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

    ஸ்ரவந்தி கூட்டத்திற்கு நடுவே ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு ஓடினார்.

    இதனால் அதிர்ச்சடைந்த ஸ்ரவந்தி அலறி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்று விட்டார்.

    ஸ்ரவந்தி வைத்திருந்த பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது.

    இதுகுறித்த செகந்திராபாத் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

    அதில் தனது பையில் வைத்திருந்த வைர நெக்லஸ் உட்பட ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெயில்களில் ஏறும்போது பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    • அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • ரெயில் மீது கற்களை வீசிய 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி இடையில் ஒரு இடத்தில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை செகந்திராபாத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    திருப்பதி அடுத்த கூடூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    ரெயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் திருப்பதி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ரெயில் மீது கற்களை வீசிய 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் வந்தே பாரத் ரெயில் மீது அடிக்கடி கற்கள் வீசி தாக்கும் சம்பவம் நடக்கிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படும்.

    திருப்பூர் :

    வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்குவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் வரும் நேரம் மாறுகிறது. கோவை - சென்னை வந்தே பாரத் ெரயில் (எண்:20644) இயக்கம் நாளை (9ந் தேதி) தொட ங்குகிறது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படுமென அறிவிக்கப்ப ட்டுள்ளதால், அதே நேரத்தில் கோவையில் இருந்து புறப்படும் 3 ரெயில்களின் நேரம் புதிய அட்டவணைப்படி மாற்றப்பட்டடுள்ளது.

    அதன்படி கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) காலை 5:45 மணிக்கு பதில் 5 நிமிடம் முன்பாக 5:40 மணிக்கு புறப்படுகிறது. 6:23 மணிக்கு பதில் 6:18 மணிக்கு திருப்பூர் வந்து விடும். கோவை - திருப்பதி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:22616) வழக்கமான நேரத்தை விட 10 நிமிடம் தாமதமாக 6:10 மணிக்கு புறப்படும். திருப்பூரை 6:50 மணிக்கு கடக்கும்.

    கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 5 நிமிடம் தாமதமாக 6:20 மணிக்கு புறப்படும். திருப்பூரை 7 மணிக்கு கடக்கும்.காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் வந்தே பாரத் ெரயில் (எண்:20644) 6:35 மணிக்கு திருப்பூர் வந்து, இரண்டு நிமிடம் நின்று 6:37 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏப்ரல் மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • வருகிற 10-ந்தேதி டெல்லி-ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

    சென்னை:

    நாட்டின் அதிவேக ரெயில் சேவைக்காக வந்தே பாரத் ரெயில் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரெயில்களின் சேவை வழித்தட எண்ணிக்கையை ரெயில்வே அமைச்சகம் வேகமாக அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் போபால் -டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது நாட்டின் 11-வது வந்தே பாரத் ரெயில் ஆகும்.

    இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை-கோவை இடையே 12-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

    வருகிற 10-ந்தேதி டெல்லி-ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

    மேலும் செகந்திராபாத் தில் இருந்து திருப்பதிக்கு இந்த மாதத்திற்குள் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் வரப்பிரசாதமாக அமையும்.

    இதேபோல் பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு 15-வது வந்தே பாரத் ரெயில் இந்த மாதம் இயக்கப்பட உள்ளது.

    • மத்திய ரெயில்வே மந்திரிக்கு கதிர் ஆனந்த் எம்.பி. கடிதம்
    • மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும் என தகவல்

    வேலூர்:

    சென்னை- மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை - கோவை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பரத் ரெயில் காலை 7.5 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது.

    கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 5 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

    இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக வேலூர் தி.மு.க., எம் பி கதிர் ஆனந்த் மத்திய ரெயில்வே மந்திரி ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது;

    சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படு த்தப்பட்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    எனது வேலூர் மக்களவைத் தொகுதி மக்களின் சார்பாக, சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இது இப்பகுதியில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும்.

    எனவே சென்னை-கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் விரைவு ெரயிலுக்கு காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூரில் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது.
    • 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது.

    சேலம்:

    நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    அதன்படி, சென்னையில் இருந்து கோவை வரை இயக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. அதி காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு 8 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை சென்ற டைந்தது. பின்னர் 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலை யத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது. அப்போது சேலம் கோட்ட ரெயில்வே மேலா ளர் பங்கஜ்குமார் சிங் ரெயிலில் உள்ள சிறப்பம்சங்களை பார்வையிட்டு இன்றைய பயணத்தில் தொழில்நுட்ப ரீதியில் பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.

    பின்னர் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்ற டைகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மொத்தம் 16 பெட்டி களை கொண்டதாகும். இதில் உயர்தர குஷன் சீட்கள், 360 டிகிரியில் சுழலும் வகையில் இருக்கை கள், சி.சி.டி.வி கேமரா வசதி, ரெயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ள மைக் வசதி, நவீன கழிவறை, ஏசி வசதி, வைபை, ஜி.பி.எஸ், எல்.சி.டி திரைகள், தனித்தனி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ரெயிலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். 

    • பயணிகள் ஏமாற்றம்
    • காலை 7.05 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது

    வேலூர்:

    தமிழ்நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தினமும் சராசரியாக சுமார் 38,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் ரூ.360 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

    இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதில் சென்னை-மைசூர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20-க்கு மைசூரை சென்றடைகிறது. இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    இதனால் காட்பாடி, வேலூர், அரக்கோணம், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அனைத்துப் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த ரெயிலில் 4 மாதத்தில் காட்பாடியில் இருந்து மட்டும் 19,176 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

    காட்பாடியில் சென்னை- மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை - கோவை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது. சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பரத் ரெயில் காலை 7.5 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது.

    கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 5 மணிக்கு காட்பாடி ெரயில் நிலையத்தை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ெரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    சென்னை மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில் சென்னை கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்.
    • 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல்-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்.

    16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது. ஆனால் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த வழி தடத்தில் சதாப்தி, இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாலும் 16 பெட்டிகள் இயக்கினால் காலியாக ஓடும் என்பதாலும் 8 பெட்டிகளாக குறைத்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    வந்தே பாரத் ரெயில் பெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இன்று சோதனை ஓட்டம் மேற் கொள்ளப்பட்டது.

    சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். 8 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று சென்றது. 130 கி.மீ. வேகத்திற்கு இந்த ரெயிலை இயக்க முடியும் என்றாலும் அதைவிட குறைந்த வேகத்திலேயே இயக்கி சோதனை செய்யப் பட்டது.

    மற்ற ரெயில்களை விட குறைவான நிறுத்தம், வேகம் அதிகரிப்பு காரணமாக வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 6½ மணி நேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் சரியாக காலை 11.20 மணிக்கு கோவை சென்றடைந்தது. 5 மணி 40 நிமி டத்தில் ரெயில் கோவையை அடைந்தது. இதன்மூலம் ரெயில் சோதனை ஓட்டம் திட்டமிட்டப்படி நடந்துள்ளது.

    பிற்பகல் கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு முன்னதாக சென்ட்ரல் வந்து சேருகிறது. வாரத்தில் ஒரு நாள் தவிர 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    சோதனை ஓட்டத்தின் போது ஏதாவது தொழில் நுட்ப கோளாறு, பிரச்சினை ஏற்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ×