search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தே பாரத் ரெயில் சேவையால் திருப்பூர் வழியாக இயக்கப்படும்  ரெயில்களின் நேரத்தில் மாற்றம்
    X

    கோப்புபடம்.

    வந்தே பாரத் ரெயில் சேவையால் திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் நேரத்தில் மாற்றம்

    • பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படும்.

    திருப்பூர் :

    வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்குவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் வரும் நேரம் மாறுகிறது. கோவை - சென்னை வந்தே பாரத் ெரயில் (எண்:20644) இயக்கம் நாளை (9ந் தேதி) தொட ங்குகிறது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படுமென அறிவிக்கப்ப ட்டுள்ளதால், அதே நேரத்தில் கோவையில் இருந்து புறப்படும் 3 ரெயில்களின் நேரம் புதிய அட்டவணைப்படி மாற்றப்பட்டடுள்ளது.

    அதன்படி கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) காலை 5:45 மணிக்கு பதில் 5 நிமிடம் முன்பாக 5:40 மணிக்கு புறப்படுகிறது. 6:23 மணிக்கு பதில் 6:18 மணிக்கு திருப்பூர் வந்து விடும். கோவை - திருப்பதி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:22616) வழக்கமான நேரத்தை விட 10 நிமிடம் தாமதமாக 6:10 மணிக்கு புறப்படும். திருப்பூரை 6:50 மணிக்கு கடக்கும்.

    கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 5 நிமிடம் தாமதமாக 6:20 மணிக்கு புறப்படும். திருப்பூரை 7 மணிக்கு கடக்கும்.காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் வந்தே பாரத் ெரயில் (எண்:20644) 6:35 மணிக்கு திருப்பூர் வந்து, இரண்டு நிமிடம் நின்று 6:37 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×