என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில்
- அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது.
- 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது.
சேலம்:
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
அதன்படி, சென்னையில் இருந்து கோவை வரை இயக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. அதி காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு 8 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை சென்ற டைந்தது. பின்னர் 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலை யத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது. அப்போது சேலம் கோட்ட ரெயில்வே மேலா ளர் பங்கஜ்குமார் சிங் ரெயிலில் உள்ள சிறப்பம்சங்களை பார்வையிட்டு இன்றைய பயணத்தில் தொழில்நுட்ப ரீதியில் பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.
பின்னர் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்ற டைகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மொத்தம் 16 பெட்டி களை கொண்டதாகும். இதில் உயர்தர குஷன் சீட்கள், 360 டிகிரியில் சுழலும் வகையில் இருக்கை கள், சி.சி.டி.வி கேமரா வசதி, ரெயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ள மைக் வசதி, நவீன கழிவறை, ஏசி வசதி, வைபை, ஜி.பி.எஸ், எல்.சி.டி திரைகள், தனித்தனி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ரெயிலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்