search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi thiruvizha"

    • நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    விழாவில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், தொடர்ந்து முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன்,செந்தில் முருகன்,கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு சுகாதார வசதி, குடிநீர், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.

    • 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளுதல் நடந்து வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். கோவிலுக்குள் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கும்.

    அதன் பால் பெரிய சில்வர் தொட்டியில் விழும். பிறகு அங்கு இருந்து கோவில் வெளிப்புறமான சஷ்டி மண்டப வளாகம் வரை குழாய் வழியாக அபிஷேகம் கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விசாக கொறடு மண்டபத்தில் இருந்து சஷ்டி மண்டபம் வளாகம் வரை 100 அடி நீளத்திற்கு புதியதாக குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பக்தர்கள் பாட்டில் மற்றும் பாத்திரங்கள் மூலம் அபிஷேக பால் பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாக கொறடு மண்டபத்தில் தற்காலிகமாக மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது.

    • வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்க குதிரை என பல்வேறு வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம், பழனி நகரின் நான்கு ரத வீதி வழியாக வந்து, மீண்டும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கும்பம் கொட்டுதல், காத்தவராயன் பூஜை நடக்கிறது.
    • 108 கலச அபிஷேகம் நடக்கிறது.

    மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் வருகிற 2-ந் தேதி வைகாசி விசாகம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கோரேகாவ் டீன் டோங்கிரி பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கால்நாட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி விசாகம் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. இன்று (புதன்கிழமை) காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) 108 கலச அபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு குழந்தைகள் கலை நிகழ்ச்சி, பரிசு வழங்குதல் நடைபெறுகிறது.

    வரும் வெள்ளிக்கிழமை (2-ந் தேதி) வைகாசி விசாக தினத்தில் காலை 6 மணிக்கு சாமிக்கு மூலமந்திர ஜெப ஹோமம் நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் அலகு, வேல்குத்தி, பால்குடம், காவடி எடுத்து ராமர் கோவில் வழியாக முருகன் கோவிலுக்கு ஊர்வலம் வருகின்றனர். மதியம் 12 மணிக்கு பிறகு மகா அபிஷேகமும், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

    இரவு சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. சனிக்கிழமை (3-ந் தேதி) மாலை 6.45 முதல் 8.30 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருகல்யாணம் நடைபெறுகிறது. அதன்பிறகு வீதி உலா, அன்னதானம் நடக்கிறது.

    செம்பூர் திலக்நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சார்பில் 65-வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகத்தன்று காலை 11 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி, சக்தி கிரகம், அக்னி சட்டி எடுத்து ஸ்ரீபுலங்கேஷ்வர் சிவன் கோவிலில் இருந்து, கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். மாலை 6 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    3-ந் தேதி (சனிக்கிழமை) இரவு முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 4-ந் தேதி இரவு நித்திய பூஜை நடந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. கும்பம் கொட்டுதல், காத்தவராயன் பூஜையும் நடக்கிறது.

    • வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் கடந்த 22-ந் தேதி வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேர்த்திக் கடனுக்காக உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21 அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில் குழந்தை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வருதல், அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் சகாயம்அந்தோணியூசின், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூடுதலாக மின்விளக்கு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்திருந்தனர்.

    இதேபோல் முள்ளிப்பள்ளம் ஊராட்சி தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள்ராஜா, ஊராட்சி செயலாளர் மனோபாரதி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பாதைகள் அனைத்திலும் சுத்தம் செய்யப்பட்டு கூடுதலாக மின்விளக்கு வசதி செய்துள்ளனர்.

    மாலை அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அபிஷேகம் நடந்தது. இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார சுகாதாரப்பணி ஆய்வாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோர் முகாம் அமைத்திருந்தனர். இன்று மாலை மந்தைகளம் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். தொடர்ந்து மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    திருவிழாவை காண கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 12-ம் நாள் கண்ணாடி பல்லக்கில் சுவாமியும், அம்பாளும், ஏழூர் பல்லக்கு புறப்படுவது வழக்கம்.
    • விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வைகாசி மகா உற்சவம் நடைபெறும்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்புடைய தலமாகும்.

    முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோவிலில் காணப்படுகிறது. கரிகாலச்சோழனுக்கு கருணை பாலித்த இக்கோவிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இந்த கோவிலில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரம் தொடங்கி விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வைகாசி மகா உற்சவம் நடைபெறும். உற்சவம் முடிந்து 11-வது நாளில் பிச்சாடனார் கரந்தையில் நான்கு வீதிகளில் வலம் வருவார்.

    பின்னர் 12-ம் நாள் கண்ணாடி பல்லக்கில் சுவாமியும், அம்பாளும், ஏழூர் பல்லக்கு புறப்படுவது வழக்கம். இந்த விழா கடந்த 1988-ம் ஆண்டு வரை அரண்மனை தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறவில்லை. இதையடுத்து மீண்டும் ஏழூர் பல்லக்கு விழாவை நடத்திட வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 24-ந் தேதி இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகிஅம்மன், சுந்தரர், தனி அம்மன், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் ஆகியோர் எழுந்தருளுகிறார்கள். இந்த பல்லக்குகள் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருந்தட்டான்குடி, வெண்ணாற்றங்கரை, பள்ளியக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூர், குருங்கலூர், கடகடப்பை, உதாரமங்கலம், சித்தர்காடு, மாரியம்மன் கோவில், சின்ன அரிசிகாரத் தெரு, கீழவாசல், அரண்மனை, கீழவீதி, தெற்கு, மேலவீதி, வடக்கு வீதி, சிரேஸ் சத்திரம், பூக்குளம், செல்லியம்மன்கோவில் வழியாக கோவிலை சென்றடையும்.

    இந்த பல்லக்குகள் சப்தஸ்தான தலங்களான கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், கூடலூர் திருக்கூடலம்பதியான சொக்கநாதர் கோவில், கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவில், கீழவாசல் பூமாலை வைத்தியநாதர் கோவில் ஆகிய ஏழு ஊர்களில் உள்ள கோவில்கள் வழியாக வலம் வரும். 34 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது.

    இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமையில் நடைபெற்றது. இதில் குலமங்கலம் ரவி, சுங்கான்திடல் பாபு, பள்ளியக்ரஹாரம் ராஜ்குமார் மற்றும் அந்தந்த கிராம முக்கியஸ்தர்கள், கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வண்ணார மாரியம்மன் திருவிழா, எல்லைக்கட்டுதல் நிகழ்ச்சி, பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதல் உற்சவம், பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி அன்று பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார, தீபாராதனை நடந்தது. அதையடுத்து சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. 5-ம் திருவிழாவான நேற்று காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது. இதில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோபுரம் முன்பு நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதையடுத்து இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இதற்காக பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி மேள, தாளங்கள் முழங்க தெருவடைச்சான் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சாமி தேரடி தெரு, சங்கரநாயுடு தெரு, வரதராஜபெருமாள் கோவில் தெரு, போடிச்செட்டி தெரு வழியாக வந்து மீண்டும் தேரடி தெருவை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யானை வாகனத்தில் நால்வர் புறப்பாடு, இரவு வெள்ளி ரதம், இந்திர விமானத்தில் சாமி வீதி உலா, நாளை (புதன்கிழமை) திருக்கல்யாணம் பரிவேட்டை, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குதிரை வாகனம், இரவு பிச்சாண்டவர் புறப்பாடு தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

    2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து அங்கு கூடி நிற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அப்போது தேரில் பாடலீஸ்வரர், அம்மனுடன் ஆடி அசைந்து வரும் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு ரசிப்பார்கள்.

    அதன்பிறகு 3-ந்தேதி நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, முத்துப்பல்லக்கு, 4-ந்தேதி தெப்ப உற்சவம், 5-ந்தேதி ஞானப்பால் உண்ட ஐதீகம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது.
    • 3-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் விசாக திருவிழா விசேஷமானதாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது அதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவாகவும், மற்றொருநாள் மொட்டையரசு உற்சவ விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா தொடர்ந்து வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. .திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 9-வது நாளான வருகின்ற 2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது.

    விசாக திருவிழா நாளில், தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமான் தன் இருப்பிடமான சண்முகர் சன்னதியை விட்டு கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். திருவிழா காலங்களில் உற்சவர் தன் சன்னதி இருப்பிடம் விட்டு இடம் பெயர்ந்து நகர் வீதி உலா வருவது இயல்பு. ஆனால் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை சண்முகப்பெருமான் தன் இருப்பிடத்தை விட்டு இடம்பெயருவது விசாக திருவிழாவில் மட்டுமே. இதை தனி சிறப்பாக போற்றுகிறார்கள். வருகின்ற 2-ந் தேதி விசாகத்தினத்தன்று தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கு காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகின்ற 3-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது. அன்று காலையில் மொட்டையரசு திடலுக்கு தங்கக் குதிரையில் செல்லும் தெய்வானை, பெருமான் பூப்பல்லக்கில் இருப்பிடம் திரும்புகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • 31-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 1-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

    மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மேலூருக்கு திருமறை நாதர் எழுந்தருளிய விழா நடைபெற்றது. கோவிலில் இருந்து திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் எழுந்தருளி மேலூருக்கு புறப்பாடாகினர். வழி நெடுகிலும் பல்வேறு கிராமங்களில் மண்டகப்படிகளில் ஏராளமான பக்தர்கள் திருமறைநாதர்-வேதநாயகி அம்மனை வரவேற்று தரிசித்தனர்.

    மேலூர் நகரின் நுழைவு வாயிலில் தாசில்தார் மண்டகப்படியில் திருமறை நாதர் - வேதநாயகி அம்மன் எழுந்தருளினர். அப்போது சிவனடியாருக்கு சிவலிங்கம் பெற்று தந்த தாசில்தாருக்கு முதல் மரியாதை செய்யும் வகையில் தற்போதைய தாசில்தார் செந்தாமரையை பாரம்பரிய வழக்கப்படி தாலுகா அலுவலகத்தில் இருந்து அழைத்துவந்து பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.

    விழாவின் தொடர்ச்சியாக 31-ந் தேதி திருக்கல்யாணமும், 1-ந்தேதி காலை நேரத்தில் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    • 1-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

    விசாக திருநாளான 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    இதற்கிடையே விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

    4-ம் திருவிழாவான நேற்று முன்தினம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பாக மண்டகப்படி நடைபெற்றது. இதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள காமதேனு வாகனம் கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள திருவாவடுதுறை கிளை மடத்தில் பலவகையான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து தேங்காய் மற்றும் பழவகைகள், இனிப்புகள் படைக்கப்பட்டது.

    பின்னர் பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுசீந்திரம் திருவாவடுதுறை கிளை மட ஆய்வாளர் வீர நாதன் மற்றும் மட அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×