search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவாதவூரில் இருந்து மேலூருக்கு பல்லக்கில் வந்த திருமறைநாதர் வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு
    X

    திருவாதவூரில் இருந்து மேலூருக்கு பல்லக்கில் வந்த திருமறைநாதர் வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு

    • 31-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 1-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

    மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மேலூருக்கு திருமறை நாதர் எழுந்தருளிய விழா நடைபெற்றது. கோவிலில் இருந்து திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் எழுந்தருளி மேலூருக்கு புறப்பாடாகினர். வழி நெடுகிலும் பல்வேறு கிராமங்களில் மண்டகப்படிகளில் ஏராளமான பக்தர்கள் திருமறைநாதர்-வேதநாயகி அம்மனை வரவேற்று தரிசித்தனர்.

    மேலூர் நகரின் நுழைவு வாயிலில் தாசில்தார் மண்டகப்படியில் திருமறை நாதர் - வேதநாயகி அம்மன் எழுந்தருளினர். அப்போது சிவனடியாருக்கு சிவலிங்கம் பெற்று தந்த தாசில்தாருக்கு முதல் மரியாதை செய்யும் வகையில் தற்போதைய தாசில்தார் செந்தாமரையை பாரம்பரிய வழக்கப்படி தாலுகா அலுவலகத்தில் இருந்து அழைத்துவந்து பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.

    விழாவின் தொடர்ச்சியாக 31-ந் தேதி திருக்கல்யாணமும், 1-ந்தேதி காலை நேரத்தில் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×