search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றம் கோவிலில் சண்முகப்பெருமானுக்கு 2-ந்தேதி பாலாபிஷேகம்
    X

    திருப்பரங்குன்றம் கோவிலில் சண்முகப்பெருமானுக்கு 2-ந்தேதி பாலாபிஷேகம்

    • 2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது.
    • 3-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் விசாக திருவிழா விசேஷமானதாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது அதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவாகவும், மற்றொருநாள் மொட்டையரசு உற்சவ விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா தொடர்ந்து வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. .திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 9-வது நாளான வருகின்ற 2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது.

    விசாக திருவிழா நாளில், தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமான் தன் இருப்பிடமான சண்முகர் சன்னதியை விட்டு கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். திருவிழா காலங்களில் உற்சவர் தன் சன்னதி இருப்பிடம் விட்டு இடம் பெயர்ந்து நகர் வீதி உலா வருவது இயல்பு. ஆனால் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை சண்முகப்பெருமான் தன் இருப்பிடத்தை விட்டு இடம்பெயருவது விசாக திருவிழாவில் மட்டுமே. இதை தனி சிறப்பாக போற்றுகிறார்கள். வருகின்ற 2-ந் தேதி விசாகத்தினத்தன்று தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கு காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகின்ற 3-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது. அன்று காலையில் மொட்டையரசு திடலுக்கு தங்கக் குதிரையில் செல்லும் தெய்வானை, பெருமான் பூப்பல்லக்கில் இருப்பிடம் திரும்புகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×