search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uraiyur Kamalavalli Nachiyar Temple"

    • இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது
    • ஆயில்ய நட்சத்திரத்தன்று இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில். கேட்டவர்க்கு கேட்டதையெல்லாம் வழங்கி அருளும் வரப்பிரசாதி என்று கமலவல்லி நாச்சியாரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    அரங்கன் என்கிற பரமாத்மாவை, கமலவல்லி எனும் ஜீவாத்மாவாக இருந்து, மன்னருக்கு மகளாக் அவதரித்து, திருமணம் புரிந்து கொண்டவளின் திருக்கோயில் இது. உறையூர் மன்னனின் இளவரசியாக மகாலக்ஷ்மியே அவதரித்த ஒப்பற்ற பூமி இது என்கிறது ஸ்தல புராணம்.

    இங்கே கல்யாண விமானம் எனப்படும் கமல விமானத்தில் கோயில் கொண்டு தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அழகு ததும்பத் தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் கமலவல்லி நாச்சியார். வெளியூர் அன்பர்களுக்கு, இது கமலவல்லி நாச்சியார் கோயில். கமலவல்லித் தாயார் கோயில். ஆனால், உள்ளூர்க்காரர்கள், திருச்சிவாசிகள்... நாச்சியார்கோயில் என்றுதான் சொல்லுகிறார்கள்.

    இங்கே உள்ள விமானம் கல்யாணவிமானம் என்பது போல் இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. சூரிய புஷ்கரணி என்றும் போற்றப்படுகிறது.

    கமலவல்லி நாச்சியாரின் திருநட்சத்திரம்... ஆயில்யம். எனவே மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. அதேபோல், பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, ஆயில்ய நட்சத்திர நாளில், ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கன் இங்கே உறையூர் நாச்சியார்கோயிலுக்கு வருவார். அப்போது இருவருக்கும் திருமண வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

    இந்த திருமண வைபவத்தை நேரில் வந்து தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம். அதேபோல், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரநாளில், கமலவல்லி நாச்சியாரை மனமுருக வேண்டிக்கொண்டால், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தாயாரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்தால், அவர்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். வழக்கில் வெற்றிகிடைத்து இனிதே வாழ்வார்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    ஆயில்ய நட்சத்திர நாளில், நாச்சியார்கோவில் கமலவல்லி நாச்சியாரை வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பிரிந்த தம்பதி கூட விரைவில் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்.

    • பரமபதவாசல் திறக்கப்பட்டு திருவாய்மொழி மண்டபம் வந்து சேர்ந்தார்.
    • இன்று இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் திருமொழி, திருவாய் மொழி திருநாள் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

    அன்று முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 16-ந்தேதி மாலை நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை ஹிரண்யவதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெற்றது. இரவு 11.15 மணிக்கு ஆழ்வார் ஆசார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • இன்று வீணை வாத்தியம் கிடையாது.
    • நாளை இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் திருமொழி, திருவாய் மொழி திருநாள் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 16-ந்தேதி மாலை நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    நேற்று மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 9.15 மணி வரை தீர்த்த கோஷ்டியும், 9.45 மணி வரை பொதுஜன சேவையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 10.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேருகிறார். அங்கு திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும். இரவு 11.15 மணிக்கு ஆழ்வார் ஆசார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைகிறர். இன்று வீணை வாத்தியம் கிடையாது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணிவரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • 19-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும்.
    • வருகிற 20-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறும்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

    அன்று முதல் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி வந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    சொர்க்கவாசலை கடந்து சென்ற உற்சவ நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அப்போது சொர்க்கவாசல் முன்பு திரண்டு நின்ற பக்தர்கள் உற்சவ நாச்சியாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதனை தொடர்ந்து 19-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும். அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந் தேதி தீர்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும்.

    21-ந் தேதியன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணி வரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தலும் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • இன்று மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • 20-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. அதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து சொர்க்கவாசலை கடந்து தாயார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்கிறார். இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. பின்னர் இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். தொடர்ந்து 21-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து உற்சவம் நடைபெறும்.

    அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந் தேதி மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேருகிறார். அங்கு திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும்.

    வருகிற 21-ந் தேதியன்று இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணிவரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணிவரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
    • இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்ததார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் கண்டருளி, இரவு 8 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடு, இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    மேலும் சந்திர கிரகணம் நாளான 8-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடை சாத்தப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்து இரவு 9 மணிக்கு ஊஞ்சல் கண்டருளல் நடைபெற்றது. பின்னர் இரவு 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைந்தார்.

    கடைசி நாளான நேற்று சாற்று மறையுடன் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்ந்தார். இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் கண்டருளல் சேவை நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு 9 மணி அளவில் தாயார் மண்டபத்தில் இருந்து பூ பல்லக்கில் புறப்பட்டு கோவிலை வலம் வந்தார். இரவு 10 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவையுடன் இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

    • நவராத்திரி உற்சவம் கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.

    திருச்சி திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் விசேஷமானதாக கருதப்படும் நவராத்திரி உற்சவம் கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து நவராத்திரி கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்தவகையில் நவராத்திரியின் 5-ம் நாளான நேற்று வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை கமலவல்லி தாயார் (உற்சவர்) மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்தார். அப்போது கமலவல்லி நாச்சியார் சந்திர சூரியன் சவுரி கொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசு மாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை, வைரத்தாலான பெருமாள் பதக்கம், வலது ஹஸ்தத்தில் கிளி, இடது ஹஸ்தத்தில் திருஆபரணங்கள், வைர திருமாங்கல்யம், பாத சலங்கை, தோடா (சிலம்பு) அணிந்திருந்தார்.

    பின்னர், நவராத்திரி கொலு மண்டபத்தில் பொற்பாதங்கள் (திருவடி) தெரிய எழுந்தருளினார். அங்கு அவருக்கு அமுது செய்விக்கப்பட்டது. இதன் பின்னர் இரவு 9 மணிக்கு மேல் தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால் உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தாயார் திருவடி சேவையை கண்டு தரிசித்து சென்றனர்.

    • கமலவல்லி நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருச்சி உறையூரில் பிரசித்திபெற்ற கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான இங்கு வசந்த உற்சவம் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணி அளவில் வசந்த மண்டபம் வந்தடைந்தார்.

    அங்கு அலங்காரம், அமுது செய்து கண்டருளிய பின் சாற்று மறை செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பின்னர் தாயார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்வசம் தொடங்கி நடந்து வருகிறது.
    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று தாயார் ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வருகிற 25-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை சேர்கிறார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளலும், பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடும் நடக்கிறது. இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    இதேபோல் 26-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்தல், இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளி, இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பாடு, இரவு 9 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா எனப்படும் பூச்சாற்று உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை வெளிக்கோடை திருநாள் ஆகும்.

    இந்த நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டியும், இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை பொதுஜன சேவையும் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் புறப்பாடாகி 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை உள்கோடை திருநாள் ஆகும். இந்த நாட்களில் தாயார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். இரவு 6.30 மணிக்கு தாயார் உள்கோடை மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்யப்படும். இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொது ஜன சேவைக்கான நேரம் ஆகும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி வீணை வாத்தியத்துடன் இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை வசந்த உற்சவம் ஆகும். இந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தாயார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தை அடைவார். இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8.30 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 
    திருச்சி உறையூர் கோவிலில் கமலவல்லி நாச்சியாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உற்சவரே உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலுக்கும் உற்சவராக இருக்கிறார். எனவேதான், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் மட்டும் உற்சவ விக்ரகம் இருக்கிறது. பெருமாளுக்கு உற்சவ விக்ரகம் இல்லை. மாறாக ஆண்டுக்கு ஒருமுறை கமலவல்லி நாச்சியாரின் ஜென்ம நட்சத்திரமான(பிறந்தநாள்) பங்குனி ஆயில்யத்தன்று ஸ்ரீரங்கத்தில் நடக்கும் ஆதிபிரம்மோற்சவத்தின் 6-ம் நாளில் ரெங்கநாதர்(நம்பெருமாள்) உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலுக்கு வந்து அவருடன் திருமண கோலத்தில் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு ‘சேர்த்தி சேவை’ அளித்து காட்சியளிப்பது வழக்கம்.

    திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று கமலவல்லி நாச்சியாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. அதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் அழகிய மணவாளனான நம்பெருமாள், கோவில் கண்ணாடி அறையில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டியை கடந்து மதியம் 12 மணிக்கு கமலவல்லி நாச்சியார் கோவில் மண்டபத்தை அடைந்தார்.

    நம்பெருமாள் சேர்த்தி சேவையை காண வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    அப்போது, பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு, உறையூரின் மாப்பிள்ளையான நம்பெருமாளுக்கு வரவேற்பு கொடுத்தனர். கோவிலுக்கு வந்த நம்பெருமாள், மூலஸ்தானம் எதிரே நின்று கமலவல்லி நாச்சியாரை அழைத்து, பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு சென்றார்.

    பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொண்டார். பின்னர் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் திருமணக்கோலத்தில் சேவை சாதித்தனர். பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியாருடன் திருமணக்கோலத்தில் சேர்த்தி சேவையாற்றினார். இந்த சேர்த்தி சேவை காட்சியை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சேர்த்தி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் செல்கிறார். அங்கு அதிகாலை 4 மணிக்கு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலைமாற்றிக்கொண்டு கண்ணாடி அறையில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. 
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவடி சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். விழாவின் 5-ம் நாளான நேற்று தாயார் திருவடி சேவை நடந்தது. மாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தாயார் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபத்தை வந்தடைந்தார்.

    தாயார் கிளி மாலை, சவுரி கொண்டையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி மண்டபத்தில் தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    தாயார் திருவடி சேவை என்பது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். அதுவும் நவராத்திரி விழாவில் தான் இந்த சேவை நடைபெறும். தாயாரின் பாதங்களை திரளான பக்தர்கள் மனமுருக வேண்டி தரிசித்தனர். வருகிற 18-ந்தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
    ×