search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் நாச்சியார் கோவிலில் கோடை விழா இன்று தொடங்குகிறது
    X

    உறையூர் நாச்சியார் கோவிலில் கோடை விழா இன்று தொடங்குகிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா எனப்படும் பூச்சாற்று உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை வெளிக்கோடை திருநாள் ஆகும்.

    இந்த நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டியும், இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை பொதுஜன சேவையும் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் புறப்பாடாகி 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை உள்கோடை திருநாள் ஆகும். இந்த நாட்களில் தாயார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். இரவு 6.30 மணிக்கு தாயார் உள்கோடை மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்யப்படும். இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொது ஜன சேவைக்கான நேரம் ஆகும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி வீணை வாத்தியத்துடன் இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை வசந்த உற்சவம் ஆகும். இந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தாயார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தை அடைவார். இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8.30 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×