search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் திருவடி சேவை நடந்ததையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் காணலாம்.
    X
    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் திருவடி சேவை நடந்ததையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் காணலாம்.

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவடி சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். விழாவின் 5-ம் நாளான நேற்று தாயார் திருவடி சேவை நடந்தது. மாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தாயார் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபத்தை வந்தடைந்தார்.

    தாயார் கிளி மாலை, சவுரி கொண்டையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி மண்டபத்தில் தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    தாயார் திருவடி சேவை என்பது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். அதுவும் நவராத்திரி விழாவில் தான் இந்த சேவை நடைபெறும். தாயாரின் பாதங்களை திரளான பக்தர்கள் மனமுருக வேண்டி தரிசித்தனர். வருகிற 18-ந்தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×