search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில்பூ பல்லக்குடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவு
    X

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில்பூ பல்லக்குடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவு

    • இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
    • இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்ததார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் கண்டருளி, இரவு 8 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடு, இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    மேலும் சந்திர கிரகணம் நாளான 8-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடை சாத்தப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்து இரவு 9 மணிக்கு ஊஞ்சல் கண்டருளல் நடைபெற்றது. பின்னர் இரவு 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைந்தார்.

    கடைசி நாளான நேற்று சாற்று மறையுடன் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்ந்தார். இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் கண்டருளல் சேவை நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு 9 மணி அளவில் தாயார் மண்டபத்தில் இருந்து பூ பல்லக்கில் புறப்பட்டு கோவிலை வலம் வந்தார். இரவு 10 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவையுடன் இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

    Next Story
    ×