search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tweet"

    சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். #DonaldTrump #SaudiArabia
    வாஷிங்டன்:

    ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது.

    மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4-ந் தேதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

    இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது, அவர் சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.  #DonaldTrump #SaudiArabia #Tamilnews
    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை வைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி, கிண்டல் செய்து பதிவிட்ட ட்வீட்களை தற்போது காங்கிரஸ் கட்சியினர் தேடி எடுத்து, கேள்விகளை எழுப்பி வருகின்றனர். #RupeeAllTimeLow #Congress #Modi
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாயை தொட்டு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் சேர்ந்து சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தின் மதிப்பு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போல, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் சமூக வலைதளத்தில் பாஜகவை தாளித்து வருகின்றனர்.

    குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 ரூபாயை தொட்டது. அப்போது, குஜராத் முதல்வராகவும், பிரதமர் போட்டியில் இருந்த மோடி, மன்மோகன் சிங் வயதுக்கு ஏற்றவாறு ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது என ட்வீட் செய்திருந்தார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூபாயின் மதிப்பு 40 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

    இது மட்டுமல்லாது, கருப்புப்பணம், பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம் ஆகியவை குறித்து அப்போதைய காங்கிரஸ் அரசையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் மோடி கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். தற்போது, மோடி பிரதமராகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் விஸ்வரூபம் எடுத்துள்ளதே தவிர துளியும் குறையவில்லை. 



    அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், எனக்கான முறை இது என காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கண்ட பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது. ‘ரூபாயின் மதிப்பு 40-க்கு வரும் என கூறினீர்களே? இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 69 ரூபாயாக உள்ளது.

    கருப்புப்பணத்தை மீட்டு 15 லட்சம் கொடுப்பேன் என்றீர்களே? இப்போது, 50 சதவிகித பணம் சுவிஸ் வங்கியில் அதிகரித்துள்ளது.’ என பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம், பணமதிப்பிழப்பு ஆகிய பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் அதிரடி கேள்விகளை எழுப்பி வருகிறது.

    மேலும், மோடியின் பழைய ட்வீட்களை தேடி எடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கேள்விகளை எழுப்பும் போது, பாஜக கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. சர்வதேச அளவில் எல்லா ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. அதனால், இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது என பாஜகவினர் சமாளித்து வருகின்றனர்.

    எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? போன்ற கேள்விகளையும் காங்கிரசார் எழுப்புகின்றனர். மேற்கண்ட விவகாரங்களால் சமூக வலைதளம் கருத்து மோதல் களமாக மாறியுள்ளது. 
    ×