search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்வீட்"

    • சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்.
    • எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    அதன்படி அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே...

    குஜராத் மாடல்- சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் #Elections2024-க்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே...

    இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா?

    * சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்;

    இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்

    * எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்

    * தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு

    * ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது

    * மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து

    * ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400

    * வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

    * தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன்; செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம்

    * அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்

    * மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன்

    * வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம்

    * கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்

    * வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.

    * கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்

    * சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்

    * தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்

    * அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன்

    * வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு

    * சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு

    * தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்

    * குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்; சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன்

    - என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி அளிக்கத் தயாரா?

    இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் 'Made in BJP' வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்!

    #பதில்_சொல்லுங்க_மோடி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்.
    • உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை.

    40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்து எளிமையாக பரப்புரை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை,

    நமது சாதனைகள் - நிதிநிலை அறிவிப்புகள் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்

    'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' என இனி....

    இந்தியாவைக் காக்க #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எக்ஸ் தளம் முடங்கியதால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.
    • சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமா எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.

    எக்ஸ் தளத்தை உலக தலைவர்கள் முதல் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் இன்று காலை முதல் எக்ஸ் சமூக வலைத்தளம் செயலிழந்தது. இதனால் பயனாளர்கள் அவதியடைந்து வந்தனர்.

    எக்ஸ் தளத்தின் உள்ளே பயனாளர்களுக்கு பக்கங்கள் காண்பித்தாலும், அதில் யாருடைய பதிவுகளும் காட்டப்படவில்லை. பின்தொடர்தல் (Follow), உங்களுக்காக (For you) உள்பட அனைத்து தாவல்களும் தகவல்கள் இல்லாமல் காலியாக இருந்தன. பயனர்கள் தங்களின் பதிவுகளை உருவாக்கலாம் பதிவிடலாம். ஆனால், அந்த பதிவுகள் யாரும் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.

    இந்நிலையில், எக்ஸ் தளம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை வைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி, கிண்டல் செய்து பதிவிட்ட ட்வீட்களை தற்போது காங்கிரஸ் கட்சியினர் தேடி எடுத்து, கேள்விகளை எழுப்பி வருகின்றனர். #RupeeAllTimeLow #Congress #Modi
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாயை தொட்டு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் சேர்ந்து சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தின் மதிப்பு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போல, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் சமூக வலைதளத்தில் பாஜகவை தாளித்து வருகின்றனர்.

    குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 ரூபாயை தொட்டது. அப்போது, குஜராத் முதல்வராகவும், பிரதமர் போட்டியில் இருந்த மோடி, மன்மோகன் சிங் வயதுக்கு ஏற்றவாறு ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது என ட்வீட் செய்திருந்தார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூபாயின் மதிப்பு 40 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

    இது மட்டுமல்லாது, கருப்புப்பணம், பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம் ஆகியவை குறித்து அப்போதைய காங்கிரஸ் அரசையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் மோடி கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். தற்போது, மோடி பிரதமராகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் விஸ்வரூபம் எடுத்துள்ளதே தவிர துளியும் குறையவில்லை. 



    அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், எனக்கான முறை இது என காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கண்ட பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது. ‘ரூபாயின் மதிப்பு 40-க்கு வரும் என கூறினீர்களே? இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 69 ரூபாயாக உள்ளது.

    கருப்புப்பணத்தை மீட்டு 15 லட்சம் கொடுப்பேன் என்றீர்களே? இப்போது, 50 சதவிகித பணம் சுவிஸ் வங்கியில் அதிகரித்துள்ளது.’ என பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம், பணமதிப்பிழப்பு ஆகிய பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் அதிரடி கேள்விகளை எழுப்பி வருகிறது.

    மேலும், மோடியின் பழைய ட்வீட்களை தேடி எடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கேள்விகளை எழுப்பும் போது, பாஜக கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. சர்வதேச அளவில் எல்லா ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. அதனால், இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது என பாஜகவினர் சமாளித்து வருகின்றனர்.

    எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? போன்ற கேள்விகளையும் காங்கிரசார் எழுப்புகின்றனர். மேற்கண்ட விவகாரங்களால் சமூக வலைதளம் கருத்து மோதல் களமாக மாறியுள்ளது. 
    ×