search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Claiming"

    சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். #DonaldTrump #SaudiArabia
    வாஷிங்டன்:

    ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது.

    மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4-ந் தேதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

    இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது, அவர் சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.  #DonaldTrump #SaudiArabia #Tamilnews
    குத்தகை நிலுவைத்தொகை தொடர்பாக பிரதமரின் அத்தை தாஹிபென் அளித்த புகாரின்பேரில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். #DahibenNarottamdasModi
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் வாத்நகரை சேர்ந்தவர் தாஹிபென் நரோட்டம்தாஸ் மோடி. 90 வயதான இந்த மூதாட்டி, தன்னை பிரதமர் நரேந்திர மோடியின் அத்தை என்று சொல்கிறார். வத்நகரில் இவருக்கு சொந்தமான கட்டிடத்தை, பீடி தொழிலாளர்களுக்கு மருந்தகம் அமைப்பதற்காக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் 1983-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்தது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை புதுப்பிக்கப்பட வேண்டும்.

    ஆனால், 1998-ம் ஆண்டுக்கு பிறகு குத்தகையை புதுப்பிக்காத அமைச்சகம், அப்போது கொடுத்த மாத வாடகை ரூ.1,500-ஐ இப்போதும் அளித்து வருகிறது. இதனால், குத்தகை புதுப்பிப்பது தொடர்பாகவும், புதுப்பிக்காத ஆண்டுகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படுமா? என்றும் கேட்டு தகவல் ஆணையத்தில் கடந்த ஆண்டு தாஹிபென் மனு அளித்தார்.

    ஆனால், மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் உதவி நல்வாழ்வு அதிகாரி மொய்த்ராவும், அவருடைய உயர் அதிகாரி போப்லேவும் போதிய தகவல்களை அளிக்கவில்லை. தான் பிரதமரின் அத்தை என்று அவர் மேல்முறையீட்டு மனுவில் கூறியும் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டனர்.

    எனவே, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு, மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கும் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? என்று கேட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.  #DahibenNarottamdasModi #Tamilnews 
    ×