search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur robbery"

    • கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
    • அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைகளான ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் கவரப்பேட்டை ஆகிய நான்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து நேற்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நான்கு கடைகளிலும், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆவின் பால் உள்ளிட்ட நான்கு கடைகளிலும் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள சூப்பர் மார்க், கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பேக்கரி மற்றும் வீடுகளில் 15 சவரன் நகை, உள்ளிட்ட 10 கடைகளில் 3 லட்சம் ரூபாய் பணம் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் 3 குழுக்களாக பிரிந்து தனியார் வாகனத்தில் கொள்ளையடித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மர்மநபர்களை இரண்டு தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • லாரியுடன் 8 டன் கிராவலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பரத் குமார். லாரி டிரைவர். இவர் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.

    பொன்னேரி அடுத்த இலவம்பேடு அருகே வந்த போது சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு அங்குள்ள கடையில் பரத்குமார் சாப்பிட்டார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென லாரி டிரைவர் பரத் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொன்னேரி பஜாரில் தன்னை இடித்து விட்டு வந்ததாக கூறி டிரைவர் பரத்குமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ.500, செல்போன், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை பறித்து விட்டு மிரட்டி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பரத்குமார் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரியை சேர்ந்த மூர்த்தி (36) என்பவரை கைது செய்தனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரியில் ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி கிராவல் கடத்தி வரப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியுடன் 8 டன் கிராவலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்மநபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
    • இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுனை சேர்ந்தவர் ஷெரீப் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே சென்றார். வீட்டில் மனைவி காஜிதா மட்டும் இருந்தார்.

    அப்போது வீட்டிற்கு வந்த 2 பேர் ஆட்டோ சவாரிக்கு வேண்டுமென கேட்டனர். தனது கணவர் வீட்டில் இல்லை வெளியே சென்று உள்ளார் என தெரிவித்தார். அந்த மர்மநபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    • அடையாளம் தெரியாத மர்மநம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
    • அவரது சத்தம் கேட்கவே கணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்டாக்கம் தசரத நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி மெக்கானிக். இவரது மனைவி சாந்தகுமாரி.

    நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    அவரது சத்தம் கேட்கவே கணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். மீஞ்சூரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவர் வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் நடராஜன் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கம், டி.வி. ஆகியவற்றை பட்டப்பகலில் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூரில் டிபன் கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மா.பொ.சி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஜே.என் சாலை ஆயில் மில் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றார். இன்று அதிகாலை கடைக்கு வந்தபோது ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நகரின் முக்கிய சாலையில் உள்ள கடையில் கொள்ளை நடந்த சம்பவம் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டின் கதவை திறந்து 10 சவரன் நகை மற்றும் வெள்ளி கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த செஞ்சி மதுரா கண்டிகையை சேர்ந்தவர் வேணு. விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு மனைவியுடன் சென்றார்.

    மாலை வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளி கொள்ளை போனது தெரிய வந்தது. கடம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர், விக்னேஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி பிரேமா. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர்.

    நேற்று காலை 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 7 ½ பவுன் நகை, ரூ.6 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை - பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அருகே ஆசிரியை வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, தனியார் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி வெளியே சென்றனர். மாலையில் ஆசிரியை தமிழரசி வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×