என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் ரூ. 3 லட்சம் பணம்-நகை கொள்ளை
- கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
- அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைகளான ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் கவரப்பேட்டை ஆகிய நான்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நான்கு கடைகளிலும், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆவின் பால் உள்ளிட்ட நான்கு கடைகளிலும் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள சூப்பர் மார்க், கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பேக்கரி மற்றும் வீடுகளில் 15 சவரன் நகை, உள்ளிட்ட 10 கடைகளில் 3 லட்சம் ரூபாய் பணம் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் 3 குழுக்களாக பிரிந்து தனியார் வாகனத்தில் கொள்ளையடித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மர்மநபர்களை இரண்டு தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்