என் மலர்
நீங்கள் தேடியது "tiruvallur police investigation"
திருவள்ளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர், விக்னேஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி பிரேமா. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர்.
நேற்று காலை 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 7 ½ பவுன் நகை, ரூ.6 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை - பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர், விக்னேஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி பிரேமா. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர்.
நேற்று காலை 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 7 ½ பவுன் நகை, ரூ.6 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை - பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






