search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    • மர்மநபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
    • இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுனை சேர்ந்தவர் ஷெரீப் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே சென்றார். வீட்டில் மனைவி காஜிதா மட்டும் இருந்தார்.

    அப்போது வீட்டிற்கு வந்த 2 பேர் ஆட்டோ சவாரிக்கு வேண்டுமென கேட்டனர். தனது கணவர் வீட்டில் இல்லை வெளியே சென்று உள்ளார் என தெரிவித்தார். அந்த மர்மநபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    Next Story
    ×