search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
    X

    பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

    • பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • லாரியுடன் 8 டன் கிராவலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பரத் குமார். லாரி டிரைவர். இவர் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.

    பொன்னேரி அடுத்த இலவம்பேடு அருகே வந்த போது சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு அங்குள்ள கடையில் பரத்குமார் சாப்பிட்டார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென லாரி டிரைவர் பரத் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொன்னேரி பஜாரில் தன்னை இடித்து விட்டு வந்ததாக கூறி டிரைவர் பரத்குமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ.500, செல்போன், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை பறித்து விட்டு மிரட்டி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பரத்குமார் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரியை சேர்ந்த மூர்த்தி (36) என்பவரை கைது செய்தனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரியில் ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி கிராவல் கடத்தி வரப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியுடன் 8 டன் கிராவலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×