search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatened to kill"

    • தப்ப முயன்ற போது கை முறிந்தது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பாஷா, பெயிண்டு கடை உரிமையாளர்.

    கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர், இவரை செல்போ னில் தொடர்புகொண்டு, வசூர் ராஜா பேசுவதாகவும், ரூ. 3 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். பணம் தரவில்லை என்றால் உன்னையும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து, பாஷா, தனது கடை ஊழி யர் சலீம் என்பவருடன் தனியார் ஷூ கம்பெனிக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.

    அப் போது, அவர்களை காரில் பின்தொடர்ந்து வந்து மடக் கிய வசூர் ராஜா, அவனது கார் டிரைவர் வெங்கடே சன் ஆகியோர், கத்தியைக் காட்டி, "நாளை உன் கடைக்கு வருவேன்.

    ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து வை, இல்லை யென்றால் இந்த முறை கண்டிப்பாக கொலை செய்து விடுவேன்" என மிரட்டியதோடு, அவரிட மிருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சத்து வாச்சாரி போலீசில் பாஷா புகார் அளித்தார். இதையடுத்து வசூர் ராஜா பெருமுகையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரையும் அவருடன் இருந்த வெங்கடேசனையும் பிடிக்க முயன்றனர்.

    அப்போது தப்பி செல்ல முயன்ற வசூர் ராஜா தவறி கீழே விழுந்தார். அதில் அவரது வலது கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    தொடர்ந்து அவரையும், வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன குமார் (வயது 30). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தனகுமார் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த புது வசூரை சேர்ந்த வசூர் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் சந்தன குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.11, 500 -ஐ பறித்தனர்.

    இதுகுறித்து சந்தன குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரிலும் போலீசார் வசூர் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாலிபர் கைது
    • 3 பேரை தேடி வருகின்றனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த ஜங்காலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் யுவராணி(வயது 39). இவர், சேம்பள்ளியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக, ஜங்காலப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த்(23) தன் நண்பர்கள் 3 பேருடன், யுவராணி பணிபுரியும் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் மாலை சென்று தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது யுவராணியை தாக்கிய நிறுவனத்தை சேர்ந்த திலகவதி என்பவர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார். தொடர்ந்து, அவரையும் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே, அந்த வழியாக சென்ற மின்வாரிய ஊழியர் பாபு தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரையும் தாக்கியுள்ளனர்.

    தொடர்ந்து, இதுகுறித்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்த தாலுகா போலீசார், பெண் களையும் அரசு ஊழியரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கில், ஸ்ரீகாந்தை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த நூக்காம்பாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). லாரி டிரைவர்.

    வளர்புரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 23). இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் லாரியை ஓட்டிக்கொண்டு வளர்புரத்திற்கு வந்துள்ளார். அப்போது பிள்ளையார் கோவில் அருகே லாரியை நிறுத்தினார்.

    இதனைக் கண்ட பார்த்தசாரதி பணம் சம்பந்தமாக ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டார். லாரியின் கண்ணாடியை உடைத்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜேந்திரன் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்த சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    மூதாட்டி ஒருவருக்கு அவரது மகளே கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை அடுத்த நடுப்பட்டி குரும்பபட்டியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி சவடமுத்து (வயது85). இவரது கணவர் மற்றும் ஒரு மகன் உயிரிழந்து விட்டனர்.

    மகள் மயிலம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரிடம் இருந்த 7 செண்ட் நிலத்தை தனது பெயருக்கு தானமாக கொடுக்க வேண்டும் என மகள் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி மறுக்கவே ஆத்திரம் அடைந்த மயிலம்மாள் மிளகாய் பொடியை தூவி அவரை கடுமையாக தாக்கி உள்ளார்.

    மிரட்டி அந்த நிலத்தை தனதுபெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்துள்ளார். இதனால் சவடமுத்து வசிப்பதற்கு இடம் இல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு திண்னைகளில் தங்கி அவர்கள் தரும் உணவை உண்டு காலத்தை ஓட்டி வருகிறார்.

    இன்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அவர் அந்த மனுவில் தனது மகள் சித்ரவதையால் 7 செண்ட் நிலத்தை அவர் பெயருக்கு தானமாக கொடுத்து விட்டேன். தற்போது வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றேன். எனவே அந்த தானசெட்டில் மெண்ட்டை ரத்து செய்து நிலத்தை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். மூதாட்டி ஒருவருக்கு அவரது மகளே கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளிபாளையம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சிவம் (வயது 52). இவர் பள்ளிப்பாளையம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
    • இந்த நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சிவம் (வயது 52). இவர் பள்ளிப்பாளையம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    மேலும் இவர் ம.தி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார்.

    இந்த நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாகராஜி டம் புகார் தெரிவித்தனர். நான், நகராட்சி பணியாளர் களிடம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து கடந்த 24-ந் தேதி நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்ட்ஹ நிலையில் களியனூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கவுன்சிலர் சிவம் செல் போனில் தொடர்பு கொண்டு ஆக்கிரிமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தை யால் திட்டியுள்ளார்.

    இந்த நிலையில் சிவம் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வெடியரசம் பாளையம் பகுதியில் இருந்து பள்ளி பாளையத்

    திற்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த நாகராஜ் தகறாறில் ஈடுபட்டு கல்லால் தாக்க முயன்றதஅக தெரி கிறது.

    மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் தெரிகிறது. இது பற்றி சிவம் பள்ளிப் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி விசாரித்து வரு கிறார்கள்.

    • ஒருவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ருக்மணி. நேற்று கண வன்- மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதேப் பகுதியை சேர்ந்த ஜெய் சங்கர் சொத்து தகராறு காரண மாக தன்னை பற்றி தான் பேசிக் கொண்டு இருப்பதாக நினைத்து தகராறு செய் துள்ளார்.

    தகராறு முற்றி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதில் உஷாராணி மற் றும் ஜெய்சங்கர் ஆகிய இருவ ரையும் தாக்கி கொலை மிரட் டல் விடுத்துள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த ருக்மணி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து ருக்மணி கொடுத்த புகாரின் பேரில் உஷாராணி மற்றும் ஜெய்சங் கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

    ருக்மணி மற் றும் கனகராஜ் இருவரும் தாக் கியதாகஉஷாராணி கொடுத்த புகாரின்பேரில் ருக்மணி மற்றும் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழிமறித்து தாக்குதல்
    • 3 பேர் கைது

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் சந்தை மேடு கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் என்பவர் மகன் மகேஷ் (வயது31). இவர் நரசமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக உள்ளார்.

    இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் சந்தைமேடு அருகே சென்றார். அப்போது சென்னை ஓட்டேரி சேர்ந்த ரவி என்பவர் மகன் கோபாலகிருஷ்ணன் (26), மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மகன் சதீஷ் (20), வரதன் மகன் வினோத்குமார் (28) ஆகிய 3 பேரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஷை வழிமடக்கி கையால் அடித்தும் அசிங்கமாக திட்டியும் கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணன் வினோத் குமார் வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்

    • முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பூங்கொடி, கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.
    • அதை பார்த்த விஸ்வநாதன் வீட்டிலிருந்து இரும்பு குழாயை எடுத்து சென்று கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா திடுமல் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 47), விவசாயி.

    இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரரான விஸ்வநாதன் - பூங்கொடி தம்பதிக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பூங்கொடி, கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.

    அதை பார்த்த விஸ்வநாதன் வீட்டிலிருந்து இரும்பு குழாயை எடுத்து சென்று கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் கிருஷ்ணவேணி பலத்த காயமடைந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விஸ்வநாதனை தீவிரமாக தேடி வருகின்றார்.

    • நாவப்பிள்ளை கிராம நிர்வாக அலுவலர்.
    • கொலை மிரட்டல்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் நாவப்பிள்ளை (வயது 57). இவரிடம் பரமநத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த ஏழுமலை, முருகன் ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து நிலப்பட்டா வழங்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுத்த கிராம நிர்வாக அலுவலர் நாவப்பிளையை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து நாவப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, முருகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ராஜேஸ்வரி அனந்தப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
    • இசக்கிராஜா, அனந்தப்பனை கை விரல்களில் கடித்தார்.

    களக்காடு:

    ஏர்வாடி மரக்குடி தெருவை சேர்ந்தவர் ஜோசப் பிரான்சிஸ் சாவி யோ. இவரது குடும்பத்தின ருக்கும், அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (வயது 26) குடும்பத்தினருக்கும் பொது முடுக்கில் தூண் கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஜோசப் பிரான்சிஸ் மனைவி ராஜேஸ்வரி (37) தனது வீட்டின் முன் நின்று தந்தை அனந்தப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிராஜா, ராஜேஸ்வரி குடும்பத்தினரை அவதூறாக பேசினார். இதனை அன ந்தப்பன் தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராஜா அனந்தப்பனை கை விரல்களில் கடித்தார். மேலும் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இசக்கி ராஜாவை கைது செய்தனர்.

    அடிக்கடி பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த உதயமூர்த்தி மனைவி லதா (வயது 47). இவர் தனது மகன் பிரசாத் (29)தின் தேவைக்காக கடன் கொடுத்துள்ளார்.

    அந்த கடனை திருப்பிக் கேட்ட போது ஆட்டோ ஓட்டி கழித்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் லதா அடிக்கடி பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பிரசாத் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரிஷிவந்தியம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அலமேலு (வயது 40). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த அலமேலு அந்த குழந்தைகளை தள்ளி சென்று விளையாடுமாறு கூறியுள்ளார்.

    இதைகேட்டு ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும்அவருடைய மனைவி உமா ஆகியோர் அலமேலுவை திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதை தடுக்க முயன்ற அலமேலு உறவினர் முனியம்மாளையும் கோவிந்தன், உமா ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோவிந்தன், உமா ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×