என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்
- முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பூங்கொடி, கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.
- அதை பார்த்த விஸ்வநாதன் வீட்டிலிருந்து இரும்பு குழாயை எடுத்து சென்று கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா திடுமல் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 47), விவசாயி.
இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரரான விஸ்வநாதன் - பூங்கொடி தம்பதிக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பூங்கொடி, கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.
அதை பார்த்த விஸ்வநாதன் வீட்டிலிருந்து இரும்பு குழாயை எடுத்து சென்று கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் கிருஷ்ணவேணி பலத்த காயமடைந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விஸ்வநாதனை தீவிரமாக தேடி வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்