search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெயிண்டு கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது
    X

    பெயிண்டு கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது

    • தப்ப முயன்ற போது கை முறிந்தது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பாஷா, பெயிண்டு கடை உரிமையாளர்.

    கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர், இவரை செல்போ னில் தொடர்புகொண்டு, வசூர் ராஜா பேசுவதாகவும், ரூ. 3 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். பணம் தரவில்லை என்றால் உன்னையும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து, பாஷா, தனது கடை ஊழி யர் சலீம் என்பவருடன் தனியார் ஷூ கம்பெனிக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.

    அப் போது, அவர்களை காரில் பின்தொடர்ந்து வந்து மடக் கிய வசூர் ராஜா, அவனது கார் டிரைவர் வெங்கடே சன் ஆகியோர், கத்தியைக் காட்டி, "நாளை உன் கடைக்கு வருவேன்.

    ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து வை, இல்லை யென்றால் இந்த முறை கண்டிப்பாக கொலை செய்து விடுவேன்" என மிரட்டியதோடு, அவரிட மிருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சத்து வாச்சாரி போலீசில் பாஷா புகார் அளித்தார். இதையடுத்து வசூர் ராஜா பெருமுகையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரையும் அவருடன் இருந்த வெங்கடேசனையும் பிடிக்க முயன்றனர்.

    அப்போது தப்பி செல்ல முயன்ற வசூர் ராஜா தவறி கீழே விழுந்தார். அதில் அவரது வலது கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    தொடர்ந்து அவரையும், வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன குமார் (வயது 30). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தனகுமார் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த புது வசூரை சேர்ந்த வசூர் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் சந்தன குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.11, 500 -ஐ பறித்தனர்.

    இதுகுறித்து சந்தன குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரிலும் போலீசார் வசூர் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×