என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மிளகாய் பொடி தூவி தாயிடம் நிலத்தை அபகரித்த மகள்: கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் புகார்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை அடுத்த நடுப்பட்டி குரும்பபட்டியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி சவடமுத்து (வயது85). இவரது கணவர் மற்றும் ஒரு மகன் உயிரிழந்து விட்டனர்.
மகள் மயிலம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரிடம் இருந்த 7 செண்ட் நிலத்தை தனது பெயருக்கு தானமாக கொடுக்க வேண்டும் என மகள் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி மறுக்கவே ஆத்திரம் அடைந்த மயிலம்மாள் மிளகாய் பொடியை தூவி அவரை கடுமையாக தாக்கி உள்ளார்.
மிரட்டி அந்த நிலத்தை தனதுபெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்துள்ளார். இதனால் சவடமுத்து வசிப்பதற்கு இடம் இல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு திண்னைகளில் தங்கி அவர்கள் தரும் உணவை உண்டு காலத்தை ஓட்டி வருகிறார்.
இன்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அவர் அந்த மனுவில் தனது மகள் சித்ரவதையால் 7 செண்ட் நிலத்தை அவர் பெயருக்கு தானமாக கொடுத்து விட்டேன். தற்போது வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றேன். எனவே அந்த தானசெட்டில் மெண்ட்டை ரத்து செய்து நிலத்தை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். மூதாட்டி ஒருவருக்கு அவரது மகளே கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்