search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi gun fire"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை நடுநிலையான டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். #Thoothukudi #SterliteProtest #KamalHaasan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்தவர்களில் 65 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பலியானவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை பலியானவர்களின் உடல்களை வாங்க போவதில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு கூடியுள்ளனர். காயம் அடைந்தவர்களை இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார்.

    அங்கிருந்து காரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். கமல்ஹாசன் வந்ததும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள் அவரது காரை சூழ்ந்தனர். உடனே போலீசார் கமல்ஹாசனுக்கு பாதுகாப்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் காரை விட்டு இறங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றார். காயம் அடைந்தவர்களை கமல்ஹாசன் பார்வையிட உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


    இதையடுத்து கமல்ஹாசனுடன் 5 பேர் மட்டும் சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட போலீசார் அனுமதி வழங்கினார்கள். பின்னர் கமல்ஹாசன் அரசு மருத்துவமனை வார்டுகளில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் நடந்த சம்பவம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். காயம் அடைந்த ஒவ்வொருவரையும் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாதாரண கூலி வேலை செய்தவர்கள், ஆர்ப்பாட்டத்தை பார்க்க வந்தவர்கள் தான் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். இந்த உயிர்களுக்கு என்ன விலை வைத்தாலும் சரியாகாது. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டவர் யார்? இந்த பிரச்சனைக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் தீர்வு.

    அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பலியானவர்களின் உடல்களை நடுநிலையான டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பிரச்சனையை இதோடு விட்டு விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் இன்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு திரண்ட பொதுமக்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவு கிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #Thoothukudi #SterliteProtest #KamalHaasan

    தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று காவல்துறை தலைவரான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனே பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin #Thoothukudi #Sterliteprotest
    சென்னை:

    தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 100 நாட்களுக்கு மேலாக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று நடத்திய பேரணியில் தீவிரவாதிகளை சுட்டுக்கொல்வது போல் நவீன துப்பாக்கிகளை வைத்து காவல் துறையினர் 11 பேரை சுட்டுத் தள்ளி உள்ளனர். மேலும் பல பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுகின்றனர்.

    காவல் துறையின் காட்டுமிராண்டித் தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று காவல்துறை தலைவரான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனே பதவி விலக வேண்டும்.


    டி.கே.ராஜந்திரன் ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர். இவர் மீது சி.பி.ஐ. விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் துப்பாக்கிசூடு நடந்துள்ளதால் தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் இவ்வளவு சம்பவங்கள் உயிர் பலிகள் ஏற்பட்டும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்க்கவில்லை. தென்மாவட்ட அமைச்சர்களை கூட அனுப்பி வைக்கவில்லை.

    தூத்துக்குடியில் அமைதி திரும்ப எந்த அமைச்சர்களும் முயற்சி எடுக்கவில்லை. இது இந்த அரசின் கையாலாகாததனமாகும். இந்த விசயத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு முதல்-அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    அமைச்சர் ஜெயக்குமார், தங்களது பதவி மற்றும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கிசூடு தவிர்க்க முடியாதது என கூறி உள்ளார். அங்கு பலியானது மனித உயிர்கள். அங்கு பேரணி நடைபெறுவது காவல் துறைக்கு முன் கூட்டியே தெரியும். அவர்கள் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இந்த ஆட்சியில் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் இப்படித்தான் உளறிக் கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Thoothukudi #Sterliteprotest
    ×