search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple festival"

    • கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஊதாக்கட்டை (எ) ஆறுமுகம் என்பவரது மகன் அய்யனார் (வயது 22). இவர் வெளியூரில் தங்கி கொத்த–னார் வேலை பார்த்து வரு–கிறார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த–தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக தனது சொந்த ஊரான புளியங் குளம் கிராமத்திற்கு அய்ய–னார் வந்திருந்தார். திருவிழா–வையொட்டி கலை நிகழ்ச்சி முடிந்த நிலையில் நேற்று காலை அய்யனார் வெளி–யில் சென்று விட்டார்.

    இதற்கிடையே எம்.புளியங்குளம் அருகேயுள்ள மயிலி ரெயில்வே பாலத் திற்கு அடியில், மதுவில் பூச்சி மருந்தை குடித்த நிலை–யில் அய்யனார் உயிருக்கு போராடி கொண்டிருப்ப–தாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற நண்பர்கள் மற்றும் உறவி–னர்கள் அவரை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அதன்பின்னர் அங்கி–ருந்து மேல் சிகிச்சைக்காக அய்யனார் அருப்புக் கோட்டை அரசு மருத்துவ–மனைக்கு கொண்டு செல் லப்பட்டார். இருப்பினும் உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் வழியி–லேயே அய்யனார் பரிதாப–மாக உயிரிழந்தார். இதனை–யடுத்து அவரது தாய் அழகு மீனாள் கொடுத்த புகா–ரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருச்சுழி போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    வெளியூரில் தங்கி கொத் தனார் வேலை பார்த்து வந்த அய்யனார் சொந்த ஊரில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

    • ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய் கருப்பண சுவாமி கோவிலில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.இதற்கு சாணார்பட்டி ஒன்றியம் தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை தாங்கினார்.இதில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன்,நத்தம்தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின குமார், கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன்,

    வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,கணவாயப்பட்டி ஊராட்சி செயலாளர் வெற்றிவேந்தன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகளுடன் பக்தர்களுக்கு பிரமாண்ட விருந்து அளிக்கப்பட்டது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. மேலும் இங்கு சித்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதம் இந்த கோவில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி நேற்று திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதன்பின் ஆடி 18-ம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சர்வ தீப ஆரத்தியுடன் அன்னதான ஏற்பாடுகள் தொடங்கின.

    இதில் 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகள், 4டன் மளிகை பொருட்களுடன் 120 சமையல் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட விருந்து தயாரிக்கப்பட்டது.

    அதன்பின் சுவாமிக்கு படையல் பூஜை நடந்தது. வடித்து கொட்டப்பட்ட பிரம்மாண்ட அன்ன குவியலில் வேல் குத்தி சிவலிங்கம் பிடித்து பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • திருநங்கைகள் பால்குட ஊர்வலம்
    • தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை காந்திவீதி, ரங்கவிலாஸ் தோட்டத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.

    ஆடி 3-ம் வெள்ளிக்கிழ மையையொட்டி இன்று காலை 6 மணியளவில் பால்குட ஊர்வலம் நடந்தது. பால்குட ஊர்வலத்தை புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்தார். தொகுதி செயலாளர் பழனிசாமி, தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தில் சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவி ஷீத்தல்நாயக் தலைமையில் திருநங்கைகள், பெண்கள்என 108 பேர் பங்கேற்று பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    சமூகத்தில் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற வேண்டு தலோடு திருநங்கைகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பால்குட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனலட்சுமி செய்திருந்தார்.

    • 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
    • 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.

    கடலூர்:

    ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் வழிபாடு, விஷேச பூஜைகள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வடக்குதிட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத வழிபாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று இரவு வடக்குதிட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் தரப்பை சேர்ந்தவர்களும் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் தரப்பை சேர்ந்தவர்களும் கோவிலுக்கு வந்தனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். 

    இதை பார்த்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த மோதல் குறித்து சந்தோஷ் புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சரண்ராஜ், பழனிவேல், காளிதாஸ், செந்தமிழ் செல்வன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். பின்னர் சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ், சக்திவேல், ஆகாஷ், சுபாஷ் ஆகியோர் மீதும் மொத்தம் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.
    • இன்று 30-ந்தேதி துரோபதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே பெரியூபட்டியில் உள்ள மதுரைவீரன், பட்டாணி, சன்னாசி, துரோபதி, வீரபுத்திரன் ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.

    21-ந் தேதி காப்புகட்டி 8-நாட்கள் விரதம் இருந்தனர். அதனைத்தொடர்ந்து தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28-ந்தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர். நேற்று கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து மதுரை வீரனுக்கு அசைவ படையல் போட்டு சிறப்பு பூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று 30-ந்தேதி துரோபதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கவுரி ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவிலுக்கு சென்று வழிபட காரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுரி (45) என்பவர் ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அரசூர் - பண்ருட்டி சாலையில் ஆனத்தூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கதுரை லேசான காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கவுரி இறந்துபோனார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.
    • 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகேயுள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் இளையராஜா, அசோக், கல்வி, மணிகண்டன், சக்தி, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இளையராஜா, அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கு புகைப்பட்டி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு இக்கோவிலில் நேற்று சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) நடைபெற்றது. அப்போது ஐதீகப்படி ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு கோவிலுக்கு வந்தார். கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர். இதனை அங்கிருந்தவர்கள் தட்டி கேட்டனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன், கோவில் அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பிரிவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் கோவில் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
    • தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த ஆர்.கோம்பை கிராமத்தில் வந்தவழி பெரியகருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.

    பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவற்றை கொண்டு ராட்சத அண்டாக்களில் அசைவ உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. பெரியகருப்பசாமிக்கு படையல் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதனைதொடர்ந்து தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. பிற்பகலில் தொடங்கிய இந்த விருந்து இரவு வரை நீடித்தது. இந்த விழாவில் ஆர்.கோம்பை மட்டுமின்றி சுற்றுப்புரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கருப்பசாமியை வழிபட்டு சென்றதுடன் விருந்திலும் பங்கேற்று உணவருந்தி சென்றனர்.

    • தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.
    • பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.

    கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 2-வது நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அழகு குத்தி தீச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடை-த்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக கெங்கை அம்மன் திருவிழா நடந்துவருகிறது.

    இதனையொட்டி சாமி ஊர்வலம் நேற்று நடந்தது. அதே பகுதியை சேர்ந்த தீபக் (வயது 22) என்பவர் சாமி கும்பிட சென்றார். அப்போது அங்கு வந்த செந்தூர ப்பாண்டியன் (31), தீபக்கை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது 2 பேரும் மோதலில் ஈடுபட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த தீபக் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தூர ப்பாண்டியனை கைது செய்து ஜெயிலில் அ்டைத்தனர்.

    ×