என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.
சாணார்பட்டி அருகே கணவாய்கருப்பு கோவில் திருவிழா
- ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய் கருப்பண சுவாமி கோவிலில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.இதற்கு சாணார்பட்டி ஒன்றியம் தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை தாங்கினார்.இதில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன்,நத்தம்தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின குமார், கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன்,
வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,கணவாயப்பட்டி ஊராட்சி செயலாளர் வெற்றிவேந்தன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story






