search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்குதல்"

    • மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று கந்தசாமி அவரது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் மின்விளக்கு எரியவில்லை என்பதால், பிளக் பாயிண்டில் இருந்து பிளக்கை பிடுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    மயங்கிய நிலையில் கிடந்த அவரை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுபற்றி ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்தசாமிக்கு யோகலட்சுமி என்ற மனைவியும், மதன் (3) மற்றும் 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குடோனின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையை சரி செய்தார்.
    • மின்கம்பி வயரில் உரசியதில் ஷேக்சம்சுதீன் மீது மின்சாரம் தாக்கியது.

    கோவிலம்பாக்கம்:

    பள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஷேக் சம்சுதீன்(வயது28). மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.

    இவர் குடோனின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையை சரி செய்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பி வயரில் உரசியதில் ஷேக்சம்சுதீன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது தாய் பலத்த காயமடைந்தனர்.
    • உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). இவர் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாயுடன் விவசாய நிலத்தில் உள்ள மோட்டாரை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது தாய் பலத்த காயமடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    அவரது தாய்க்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுபற்றி ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×