search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிக்கரணை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    பள்ளிக்கரணை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    • குடோனின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையை சரி செய்தார்.
    • மின்கம்பி வயரில் உரசியதில் ஷேக்சம்சுதீன் மீது மின்சாரம் தாக்கியது.

    கோவிலம்பாக்கம்:

    பள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஷேக் சம்சுதீன்(வயது28). மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.

    இவர் குடோனின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையை சரி செய்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பி வயரில் உரசியதில் ஷேக்சம்சுதீன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×