search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளம்"

    • சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது
    • கடலரிப்பு ஏற்பட்டு கொட்டப்பட்ட மணல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.

    இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடல ரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது. தொடர்ந்து ஏற்படும் கடலரிப்பிலிருந்து வீடுகளை பாதுகாக்க அங்கு தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. முயற்சியால் மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் சார்பில் கடலரிப்பில் ஏற்பட்ட பள்ளத்தில் மணல் கொட்டப்பட்டது. அங்கு கடலரிப்பு காலங்களில் வீடுகளை பாதுகாக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. கொட்டில்பாட்டில் மணல் கொட்டப்பட்ட பகுதியில் மீண்டும் கடலரிப்பு ஏற்பட்டு கொட்டப்பட்ட மணல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொட்டில்பாட்டில் ஏற்பட்ட மீண்டும் கடலரிப்பு பகுதிகளை நேற்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் பங்குத்தந்தை ராஜ், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் முனாப் மற்றும் நிர்வாகிகள் அந்தோணி தாசன், ஜார்ஜ், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின் உள்பட ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

    கடலரிப்பு பகுதியை பார்வையிட்ட பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆண்டுதோறும் நடக்கும் கடலரிப்பில் கொட்டி ல்பாட்டில் மீனவர் கிரா மத்தை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்து வேன் என உறுதி அளித்தார்.

    • இருவழிச்சாலைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
    • 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை குறைக்கும் வகையில் ஒரு சில சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மாநகராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் பல்வேறு சாலைகளை இருவழிச்சாலைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

    முதல் கட்டமாக கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து சவேரியார் ஆலயம் வரும் சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. காலை நேரங்களில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    சாலை விசாலமாக காட்சி அளிப்பதால் போக்குவரத்து நெருக்கடி இன்றி வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டார் டெக்சி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நிழற்கூடையின் முன்பகுதியில் குடிநீர் பைப்பில் சரி செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டது.

    10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று பணிகள் நடைபெறவில்லை. அந்த சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தடுப்பு வேலிகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரு புறங்களில் இருந்தும் வாகனங்கள் வர முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து இருபுறமும் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகவே காணப்பட்டது.

    எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த பணியை துரிதமாக முடித்து சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை மணல் நிரப்பி மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டி களும் கோரிக்கை வைத்துள்ள னர்.

    இதில் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது.
    • காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் சென்றுள்ளனர். நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசாமாக யாருக்கும் காயமோ, உயிரழப்போ இல்லை. விபத்துக்குள்ளான காரில் வந்தவர்கள், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர். இது தொடர்பாக காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.
    • 30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையம் பகுதியில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.

    மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் உதவி மாவட்ட அலுவலர் பழ. தியாகராஜ், சிறப்பு நிலைய அலுவலர் ரவி, தீயணைப்பு வீரர் பிரபாகரன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பசுமாடு மீது கயிறை போட்டு கட்டினர்.

    30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர். 

    • ஒரு ஆண்டுக்கு முன்பே அஞ்சல் நிலையம் அருகே உள்ள தார்சாலையின் 2பக்கமும் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 53 -வது வார்டுக்குட்பட்ட பாலாஜி நகர் செல்லும் சாலையில் வீரபாண்டி துணைஅஞ்சல் நிலையம் உள்ளது. இந்த அஞ்சல் நிலையத்துக்கு சின்னக்கரை,கரைப்புதூர், ஏ.பி.நகர்.வித்தியாலம், நொச்சிப்பாளையம், அவரப்பாளையம்*வ,ரபாண்டி. பலவஞ்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் இந்த அஞ்சல் நிலையத்துக்கு வந்து செல்கின்றார்கள்.

    இந்தநிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பே அஞ்சல் நிலையம் அருகே உள்ள தார்சாலையின் 2பக்கமும் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் பாதாளச் சாக்கடை சேதமடைந்துள்ளது.அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் அதற்குள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் அஞ்சல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    ×