search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையில் துண்டிப்பு"

    • சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது
    • கடலரிப்பு ஏற்பட்டு கொட்டப்பட்ட மணல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.

    இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடல ரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது. தொடர்ந்து ஏற்படும் கடலரிப்பிலிருந்து வீடுகளை பாதுகாக்க அங்கு தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. முயற்சியால் மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் சார்பில் கடலரிப்பில் ஏற்பட்ட பள்ளத்தில் மணல் கொட்டப்பட்டது. அங்கு கடலரிப்பு காலங்களில் வீடுகளை பாதுகாக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. கொட்டில்பாட்டில் மணல் கொட்டப்பட்ட பகுதியில் மீண்டும் கடலரிப்பு ஏற்பட்டு கொட்டப்பட்ட மணல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொட்டில்பாட்டில் ஏற்பட்ட மீண்டும் கடலரிப்பு பகுதிகளை நேற்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் பங்குத்தந்தை ராஜ், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் முனாப் மற்றும் நிர்வாகிகள் அந்தோணி தாசன், ஜார்ஜ், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின் உள்பட ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

    கடலரிப்பு பகுதியை பார்வையிட்ட பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆண்டுதோறும் நடக்கும் கடலரிப்பில் கொட்டி ல்பாட்டில் மீனவர் கிரா மத்தை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்து வேன் என உறுதி அளித்தார்.

    ×