search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்கள்"

    • வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் பாய்விரித்து படுத்து உறங்கியுள்ளாா்.
    • சாலையின் வளைவில் திரும்பிய போது, உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி மீது காா் ஏறியது

    அவிநாசி:

    அவிநாசி, காசிகவுண்டன்புதூா் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (வயது 59). காங்கயம் சாா்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளைதாரராக பணியாற்றி வந்தாா். விடுப்பில் உள்ள ராமசாமி, அவிநாசி மகா நகரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்துள்ளாா். வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் பாய்விரித்து படுத்து உறங்கியுள்ளாா்.

    அதே பகுதியில் வசித்து வரும் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளா் குருமூா்த்தி (47) தனது வீட்டிலிருந்து காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளாா். அப்போது சாலையின் வளைவில் திரும்பிய போது, உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி மீது காா் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து குருமூா்த்தியை கைது செய்தனா்.

    • ராராமுத்திரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.
    • மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்றது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமத்தில் பல வருஷமாக தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த 30 லட்சம் மதிப்பிலான 50 சென்ட் அரசு நிலம் ஊராட்சி மன்ற தலைவர் சோழன் முயற்சியால் மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், நில அளவையர் அழகேசன்.

    வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரை கொண்ட வருவாய்குழுவினர் மற்றும் ஊராட்சிதுறையினர் மூவம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.

    பின்னர் மீட்கப்பட்ட அரசு நிலத்தை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு வரப்பு அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதாபிரகலாதன், ஊராட்சி செயலாளர் அசோக் பணிதல பொறுப்பாளர்கள்.

    தேசிய ஊரக வேலைதிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    அரசு நிலத்தை மீட்க நடவடிக்கைஎடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகிகளுக்கும், வருவாய்துறையினருக்கும் கிராமமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆயிரத்திற்கும்ய மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்க நகர் செயலாளர் தாஜுல் அமீன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் 75 ஆயிரத்திற்கும்ய மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 58 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சேவை மையத்தில் புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித் தல், ஆதார் கார்டு பிழை திருத்தம் செய்தல், பயோ மெட்ரிக் புதுப்பித்தல், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சேவை களுக்கு கூடுதல் பணியாளர் இல்லாமல் மக்கள் நீண்ட நேரம் காத்து இருக்கும் நிலை உள்ளது. ஆகவே மக்கள் தேவைகளை துரித மாக நிறைவேற்ற கூடுதல் பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    • நிலை தடுமாறி கீழே விழுந்த என்னை மது பாட்டிலால் எனது வலது கண்ணில் அடித்தனர்.
    • சம்பந்தப்பட்ட பார் பொறுப்பாளர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே லோகோ செட் விவேகானந்தர் நகரை சேர்ந்த சந்தோஷ் (34) என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில் சம்பவத்தன்று நானும், எனது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து திண்டலில் உள்ள ஒரு தனியார் பாருக்கு சென்றோம்.

    மது ஆர்டர் செய்து விட்டு உணவுப் பொருட்களுக்கும் ஆர்டர் கொடுத்தோம். அப்போது உணவை பரிமாறும் பணியாளர் இரவு ரொம்ப நேரமாக ஆகிவிட்டது பணத்தை செலுத்தி விடுங்கள் என்று கூறினார்.

    உடனே நான் கடன் அட்டையை பயன்படுத்தி பணத்தை செலுத்தினேன். பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பும்போது என்னுடைய விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் திடீரென மாயமானது.

    இதுகுறித்து பணியாளரிடம் கேட்டபோது, அவர் டிப்ஸ் பணம் கொடுங்கள் சார் போனை கண்டுபிடித்து தருகிறேன் என்றார். அதற்கு நான் பணம் தன்னிடம் இல்லை கடன் அட்டை பயன்படுத்தி தான் பில்லை செலுத்தியுள்ளேன் என்றேன்.

    அப்போது அந்த பணியாளர் தரை குறைவாக பேசினார். இதுகுறித்து தனியார் பாரின் பொறுப்பாளரிடம் தகவல் தெரிவித்தேன்.

    அவர் உடனடியாக அங்குள்ள பணியாளர்களை வைத்து என்னையும் எனது நண்பர்களையும் தாக்க சொன்னார். அவர்களும் மது பாட்டில்களால் என்னையும் எனது நண்பர்களையும் தாக்கினர்.

    இதில் எனது மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த என்னை மது பாட்டிலால் எனது வலது கண்ணில் அடித்தனர். இதில் என்னுடைய வலது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. இடது கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

    இதனால் நான் வேலைக்கு செல்ல முடியாமல் என் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகி உள்ளது.

    இதுகுறித்து போலீஸிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மேலும் சம்பந்தப்பட்ட பார் பொறுப்பா ளர்கள் பணியாளர்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட பார் பொறுப்பாளர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் எனது இரண்டு குழந்தைகளையும் கருணை கொலை செய்து விட்டு நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்வோம் இதைத் தவிர வேறு வழி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோவில்களில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்தி களுடன் 100 கால் மண்ட பத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வர்.

    வருகிற 26-ந்்தேதி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு வெள்ளியம்பல நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு ஆனி உத்திர திருமஞ்சனம் நடை பெறும். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளுக்கு பிறகு காலை 7 மணிக்கு பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மன் பல்லக்கில் எழுந்த ருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.

    ஜூலை 3-ந்தேதி உச்சி கால பூஜையில் மூலவர் சொக்கநாத பெருமானுக்கு முக்கனி அபிஷேகம் நடை பெறும். இதற்கு பக்தர்கள் அபிஷேக பொருட்களை 25-ந் தேதி 7 மணிக்குள் வழங்கலாம். தொடர்ந்து பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர், மீனாட்சி அம்மன் தனித்தனி வெள்ளிக் குதிரை வாகனங்களில் சித்திரை வீதிகளில் வலம் வருவார்கள். வருகிற 23-ந்தேதி மாணிக்கவாசகர் புறப்படும், ஜூலை 3-ந்தேதி அருணகிரி நாதர் புறப்பாடும் நடை பெறும்.

    திருப்பரங்குன்றம் கோவில்

    திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் வருகிற 24-ந்தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்ட பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாள் நிகழ்ச்சியாக ஜூலை 3-ந் தேதி முக்கனி பூஜை நடைபெறும். அன்றைய தினம் உச்சிகால வேளையில் சுப்பிரமணியர், சத்யகிரீசுவரர், பவளக் கனிவாய் பெருமாள், துர்க்கை, கற்பக விநாய கருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியா ளர்கள் செய்து வருகின்றனர். 

    • ரெயில்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

    ஈரோடு:

    கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி-நேபால் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஈரோடு கிளை சார்பில் இன்று கறுப்பு தினமாக கடைபிடித்து ஈரோடு ரெயில்வே பணிமனையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வினோத்குமார், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் முனிச்சந்த் மீனா, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×