search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர்"

    • காலை 6 மணி முதல் 9 மணி வரை குமரன் கல்லூரி அருகில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.
    • திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாநகர் தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சியின் 2023-2024 வரவு செலவு கூட்டத்தில் அறிவித்தபடி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை மங்களம் சாலை,எஸ்.ஆர்.நகர், குமரன் கல்லூரி அருகில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை பாதுகாக்கவும், பொது மக்கள் இளைப்பாறும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய சிறப்பான பொழுது போக்கு திருநாளாக மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.

    இதில் தி.மு.க. மாநில,மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள்,தொ.மு.ச.நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • 4-வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
    • 58,59,60-வது வார்டுகளில் மட்டும் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4-வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்று மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக 58,59,60-வது வார்டுகளில் மட்டும் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் மேல்நிலைத்தொட்டிகளில் 4-வது திட்ட குடிநீரை ஏற்றி வினியோகம் செய்வதற்கான ஆயத்தப்பணிகள் முடிந்துள்ளது. இந்தநிலையில் மேயர் தினேஷ்குமார் திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பம்ப்ஹவுஸ் மற்றும் கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலைத்தொட்டிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். 4-வது குடிநீர் திட்டத்தை இந்த மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யும்போது 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்பது பாதியாக குறையும். இந்த தொட்டிகளில் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்வது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. பகுதி செயலாளர் குமார், கவுன்சிலர்கள் கோமதி, சாமிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரதிய ஜனதா கட்சியினருக்கு கண்டனம்
    • அமைச்சர் மனோதங்கராஜ் பற்றி அவதூறு பரப்புவோர் மீது வழக்கு

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார்‌. அப்போது அவர் கூறியதாவது:

    மக்களால் தேர்வு செய்யப்பட்டு பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து 2-வது முறையாக வெற்றி பெற்று, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மந்திரிசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமாரகோவில் முருகன் கோவிலில் தேர் திருவிழாவில் வடம் பிடிக்க சென்ற போது வேண்டுமென்றே பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆட்சியில் திருக்கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜனதா கட்சியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் ரூ.43 கோடி குமரி மாவட்டத்தி லுள்ள திருக்கோயில்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு மூலவருக்கு தங்க கவசம் செய்ய ரூ10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த ஆண்டு இதுவரை 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் குமரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை பாரதிய ஜனதாவினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பரப்பி வந்தவர்களால் அதிக நிதி ஒதுக்கியதால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். அமைச்சர் பற்றி வீண் வதந்திகளை பரப்புவோர் மீது முறையாக புகார் கொடுத்து வழக்கு தொடர்வோம். தமிழகத்தில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் மாநகராட்சியை பொருத்த மட்டில் அரசின் கொள்கை முடிவு படி தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மண்டலங்கள் மாற்றப்படவில்லை.

    நாகர்கோவில் நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைபணிகள் கடந்த மாதம் 31ம் தேதி முடிப்பதாக தெரிவித்தனர்.

    ஆனால் சில பணிகளின் காரணமாக பணிகள் முடிக்கப்படவில்லை. தற்பொழுது சவேரியார் ஆலயம் முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    இன்னும் 2 மாத காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் .இவ்வாறு அவர் கூறினார்.

    ×