search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Syria"

    • சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

    சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    அந்த நகரை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இதுகுறித்து சிரியா ராணுவ வட்டாரம் கூறும்போது, இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம், சிரியா தலைநகர் டமாஸ்கர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கோவன் குன்றுகளில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் சிலவற்றை சிரியாவின் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.

    இந்த தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

    • இது மிக மோசமான படுகொலை என்று மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தகவல்.
    • அண்மையில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.

    பெய்ரூட்:

    சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு சிரியாவில் குர்து இன போராளிகள் வசம் உள்ள நகரில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.

    இந்நிலையில் வடக்கு சிரியாவின் அல்-பாப் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த சந்தை பகுதியில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.12 பேர்காயமடைந்தனர். இந்த தாக்குதல் மிக மோசமான படுகொலை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு மைய தலைவர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியாவின் குர்து இன போராளிகள் படை வெளியிட்ட அறிக்கையில், அல்-பாப் நகரம் மீது தங்கள் போராளிகள் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் குறித்து சிரிய அரசு தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், வடமேற்கு பகுதியில் அரசு ஆதரவு படைகள் மீது கிளர்ச்சிப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. அரசுப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஹமா மாகாணம் காபிர் நபுதா நகரில் நடந்த இந்த சண்டையில் அரசு படையைச் சேர்ந்த 26 வீரர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதேபோல் கிளர்ச்சிப் படை தரப்பில் 18 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

    காபிர் நபுதா நகரை கடந்த 8-ம் தேதி அரசுப் படைகள் கைப்பற்றியது. இதனை மீட்கும் முயற்சியில் தற்போது கிளர்ச்சிப் படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
    சிரியா நாட்டு மண்ணில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை துடைத்தெறிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். #Trumphails #IslamicStatecaliphate #fallofIS #IslamicStateinSyria
    வாஷிங்டன்:

    ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சில பகுதிகளை கடந்த 2014-ம் ஆண்டுவாக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருந்தவாறு உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட்பட்ட ஆட்சியை நிறுவப்போவதாக பிரகடனப்படுத்தி இருந்தனர்.

    கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் கைது செய்து சுட்டுக் கொன்றதுடன் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டித் துண்டித்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருநாடுகளிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 88 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பரப்பை இந்த பயங்கரவாதிகள் கைப்பற்றி வைத்திருந்தனர். அரசுப்படைகள் தாக்குதல் நடத்த இங்கு வந்தபோது பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி போரிட்டனர்.

    ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க விமானப்படை மற்றும் தரைப்படையினரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டனர். அவர்களின் பிடியில் சிக்கியிருந்த பல பகுதிகளை அரசுப்படைகள் கைப்பற்றின.

    ஈராக் மற்றும் சிரியாவில் அரசுப்படைகளின் ஆவேசமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத பயங்கரவாதிகளில் பலர் சரணடைந்தனர். உயிர் பயத்தில் சிலர் பாலைவனப் பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். ஈராக்கில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டதாக அந்நாட்டு அரசு கடந்த 2017-ம் ஆண்டில் அறிவித்தது.

    இதேபோல், சிரியாவிலும்  ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த கடைசி பகுதியான பாகுஸ் நகரை கைப்பற்ற சில மாதங்களாக சிரியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க வீரர்கள் நடத்திய உச்சக்கட்ட போர் நேற்று முடிவுக்கு வந்தது. அங்கிருந்த பயங்கரவாதிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். அந்நகரின்மீது நேற்று சிரியா நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த தாக்குதலுடன் சிரியா மண்ணில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை துடைத்தெறிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும். நைஜீரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், ‘அவர்களை முற்றிலுமாக தீர்த்துக்கட்டும் வரை அமெரிக்கா கண்காணிப்புடன் விழிப்பாக இருக்கும்’ எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



    நமது நேசநாடுகளுடன் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும், தேவைப்படும் இடங்களில் எல்லாம் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும். 

    இன்டர்நெட் மூலம் பரப்பப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரசாரங்களை நம்பி சீரழியும் இளைய தலைமுறையினர் இனிமேலாவது உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு வேறு பாதையை கடைபிடிக்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    சிரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசுப்படைகள் பெற்றுள்ள இந்த வெற்றிக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

    ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தில் இருந்து வெளியேறிய சிலர் சிரியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷீர் அல் ஆசாத் தலைமைக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களுடன் கடந்த 2011-ம் ஆண்டில் இணைந்தனர். 

    அவர்களின் துணையுடன் நவீனரக துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் ஆகியவற்றை சேகரித்து, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றிக் கொண்டு தங்களை நாடு கடந்த இஸ்லாமிய அரசு என ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரகடனம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய நிலவரப்படி ஈராக், சிரியா உள்ளிட்ட சில நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் பாய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து பதுங்கி இருப்பதாக கருதப்படுகிறது. இந்த இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் பக்தாதி கொல்லப்பட்டதாக பலமுறை செய்திகள் வெளியாகின. 

    ஆனால், பின்நாட்களில் அவை ஆதாரமற்ற தகவல்களாக புறக்கணிக்கப்பட்டன. இருப்பினும், சிரியா அல்லது ஈராக்கில் உள்ள மலைக்குகைகளில் அபுபக்கர் பக்தாதி உள்ளிட்ட சில முக்கிய தளபதிகள் மறைந்து வாழ்வதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது. #Trumphails #IslamicStatecaliphate #fallofIS #IslamicStateinSyria
    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 ஆயிரம் பேர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்தனர்.
    மாஸ்கோ:

    சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

    அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.

    எனினும் டெயிர் எஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள பாகுஸ் கிராமம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய ராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர்.
    சிரியாவில் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் பயங்கரவாதி சமிமா பேகத்தின் குழந்தை நிமோனியா தாக்கி பலியானார்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், இளம்பெண் சமிமா பேகம் (வயது 19). இவரது கணவர் யாகோ ரீடிஜ்க். இவர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.

    சமிமா பேகம், கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போடுவதற்காக லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்றார்.

    அவர் கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் சிரியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் தனது 2 நண்பர்களுடன் காணப்பட்டதாக தெரிய வந்தது. அவர் லண்டன் திரும்ப விரும்பியதாகவும், ஆனால் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் சமிமா பேகத்துக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்தக் குழந்தைக்கு ஜாரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அந்தக் குழந்தை, நிமோனியா தாக்கி இறந்து விட்டது. இதை சிரிய ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

    குழந்தையின் இறப்பு குறித்து தந்தை யாகோவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிரியாவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போட்டு வந்தவர்தான்.
    சிரியாவின் கடைசி பகுதியை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு, அவர்களுடன் அமெரிக்க கூட்டுப்படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
    டமாஸ்கஸ்:

    உலகையே அச்சுறுத்தி வந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்காவே ஒப்புக்கொண்டது.

    2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான காரியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது.

    இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின. உள்நாட்டுப்படைகளுடன் கரம் கோர்த்து நடத்திய தாக்குதல்களில் பெரிய அளவுக்கு அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு வெற்றியும் கிடைத்தது.

    அவை, பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து விட்டன. இது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பின்னடைவாக அமைந்தது.

    இருப்பினும் இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    சிரியாவைப் பொறுத்தமட்டில், கடந்த சில மாதங்களாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்களில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டு படைகளுடன் கடும் தாக்குதல் நடத்தின.

    அங்கிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளை விரட்டியடித்தன.

    இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 2 ஆயிரம் பேரையும் திரும்பப்பெறுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

    இருப்பினும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒடுக்க வில்லை என்பதை இப்போது உணர்ந்த டிரம்ப், ஐ.எஸ். பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டி விட்டோம் என்ற அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவோம் என கடந்த 6-ந் தேதி அறிவித்தார்.

    இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதி, ஈராக் எல்லையில் அமைந்துள்ள டெயிர் அல் ஜோர் மாகாணத்தின் பாகுஸ் கிராமம் என தெரிய வந்தது.

    அங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி, முழுமையான வெற்றி பெற அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்த தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னதாக அப்பாவி உள்ளூர் மக்கள் 20 ஆயிரம் பேரையும் அங்கிருந்து பத்திரமாக வெளியேறச்செய்ய வேண்டும் என விரும்பியது. அதற்கு ஒரு வார கால அவகாசம் தரப்பட்டது. அதன்படி அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமாக சண்டை போட்டு வருகின்றன.

    இதுபற்றி சிரியா படை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “ தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற கடைசி பகுதியில், அனுபவம் வாய்ந்த பயங்கரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

    இந்த சண்டையின் முடிவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் இருந்து முழுமையாக ஒடுக்கப்பட்டு விடுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Syria #ApartmentFire #Damascus
    டமாஸ்கஸ்:

    சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற இடத்தில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. 4-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் இருந்தனர். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Syria #ApartmentFire #Damascus 
    சிரியா நாட்டில் உள்ள ஈரான் ராணுவ முகாம்களை குறிவைத்து இன்று இஸ்ரேல் விமானப்படை நடத்திய ஆவேச தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். #Israelibombardment #bombardmentinSyria
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹைட்ஸ் பகுதி மீது ஏவுகணைகள் மூலம்  தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதனால் ஆவேசமடைந்த இஸ்ரேல் அரசு சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள உள்நாட்டு மற்றும் ஈரான் நாட்டின் ராணுவ முகாம்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது.


    டமாஸ்கஸ் விமான நிலையம் அருகாமையிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடந்த இந்த தாக்குதலில் அரசுக்கு ஆதரவான படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். #Israelibombardment #bombardmentinSyria
    சிரியா நாட்டில் சர்வதேச கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். #Syria #CoalitionAirstrike
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.
     
    இந்நிலையில், சிரியாவின் டெயிர் அல் சோர் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் மீது சர்வதேச கூட்டுப் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர். #Syria #CoalitionAirstrike
    வடகிழக்கு சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலியாகினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #Syria
    டமாஸ்கஸ்:

    வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், சிரியா நாட்டின் வடபகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தின் மன்பிஜ் பகுதியில் பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக பலியாகினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், படுகாயம் அடைந்த பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் வசித்து வரும் பகுதி மன்பிஜ் என்பது குறிப்பிடத்தக்கது. #Syria
    ×