என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rocket attack"
- மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
- பெரும்பாலான ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
மேற்கு ஈராக்கில் அல் அசாத் விமான தளம் உள்ளது. இங்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அல்-அசாத் விமான தளம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் கூறும்போது, மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
ஆனால் சில ஏவுகணைகள் ராணுவ தளம் மீது விழுந்தது. ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
- டெல்அவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- ஷீஜாவுடன் அவரது தாய் சரோஜினி, சகோதரி ஷஜி ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடியே பேசினர்.
திருவனந்தபுரம்:
இஸ்ரேலில் நடந்துவரும் போர், அங்கு மட்டுமின்றி அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து பதிலுக்கு பதிலாக எதிர் தாக்குதல் நடத்தியபடியே இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இஸ்ரேலில் நடந்துவரும் இந்த போரில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் யாரும் பலியாகியதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சு ஒருவர், ராக்கெட் தாக்குதலில் படுகாயமடைந்த தகவல் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூர் ஸ்ரீகண்டாபுரத்தை சேர்ந்த வர் ஆனந்த். இவரது மனைவி ஷீஜா, இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோன் என்ற பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த இடம் காசா பகுதியின் எல்லையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்நிலையில் ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷீஜா படுகாயமடைந்தார். அவர் முதலில் பார்சிலாய் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் ட்டார்.
பின்பு டெல்அவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கணவருடன் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது தான், ராக்கெட் தாக்குதலில் ஷீஜா சிக்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இஸ்ரேலில் போர் நடப்பதையறிந்த ஷீஜாவின் கணவர் ஆனந்த், அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசி பத்திரமாக இருக்கிறாயா? என்று கேட்டிருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது தான், ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடந்திருக்கிறது.
அதில் ஷீஜா சிக்கிக் கொண்டதால், அவரது செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பதறிப்போன் ஆனந்த், தனது மனைவியை மீண்டும் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அவரது செல்போனைதொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தனது மனைவிக்கு என்ன ஆனது? என்பது தெரியாமல் ஆனந்த் மற்றும் ஷீஜாவின் குடும்பத்தினர் தவித்தபடி இருந்தனர். இந்நிலையில் ராக்கெட் தாக்குதலில் ஷீஜா காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் தகவலை, அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேலில் இருக்கும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷீஜாவின் குடும்பத்தினர் கதறினர். ஷீஜாவின் நிலை நன்றாக இருப்பதாக குடும்பத்தினரிடம் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷீஜாவுடன் வீடியோ காலில் பேச வைத்தனர்.
ஷீஜாவுடன் அவரது தாய் சரோஜினி, சகோதரி ஷஜி ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடியே பேசினர். தனது மகளின் நிலையை கண்டு அவர்கள் வேதனையடைந்தனர்.
- ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இரு தரப்பும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் முடிவுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷிய வீரர்கள் உயிரிழந்தனர். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மகிவ்கா நகரில் ரஷிய வீரர்களின் தற்காலிக ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 ராக்கெட்டுகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷிய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
- இது மிக மோசமான படுகொலை என்று மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தகவல்.
- அண்மையில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.
பெய்ரூட்:
சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு சிரியாவில் குர்து இன போராளிகள் வசம் உள்ள நகரில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.
இந்நிலையில் வடக்கு சிரியாவின் அல்-பாப் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த சந்தை பகுதியில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.12 பேர்காயமடைந்தனர். இந்த தாக்குதல் மிக மோசமான படுகொலை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு மைய தலைவர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியாவின் குர்து இன போராளிகள் படை வெளியிட்ட அறிக்கையில், அல்-பாப் நகரம் மீது தங்கள் போராளிகள் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் குறித்து சிரிய அரசு தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற ஒரே விமான நிலையமான மட்டிகா விமான நிலையத்தை குறிவைத்து நேற்று முன்தினம் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அவற்றில் ஒரு ராக்கெட் மத்திய தரைக்கடலில் போய் விழுந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ராக்கெட் வீச்சை நடத்தியது யார் என உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும் இந்த ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என மட்டிகா விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
இந்த ராக்கெட் தாக்குதல் எதிரொலியாக, எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரத்தில் இருந்து திரிபோலிக்கு வந்து கொண்டிருந்த லிபிய விமானம் மிஸ்ரட்டா நகருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நகரம் திரிபோலியில் இருந்து 190 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது. #Libya #RocketAttack #TripoliAirport
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்