search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Syria Civil War"

    சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், வடமேற்கு பகுதியில் அரசு ஆதரவு படைகள் மீது கிளர்ச்சிப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. அரசுப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஹமா மாகாணம் காபிர் நபுதா நகரில் நடந்த இந்த சண்டையில் அரசு படையைச் சேர்ந்த 26 வீரர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதேபோல் கிளர்ச்சிப் படை தரப்பில் 18 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

    காபிர் நபுதா நகரை கடந்த 8-ம் தேதி அரசுப் படைகள் கைப்பற்றியது. இதனை மீட்கும் முயற்சியில் தற்போது கிளர்ச்சிப் படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
    ×