search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "syrian rebels"

    • ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கிளர்ச்சியாளர்கள் சூளுரை.
    • துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கினர்.

    ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் இன்று காலை, சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.

     


    இதைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸ்-ஐ நுழைந்ததை அடுத்து பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் எங்கு சென்றுள்ளார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    சிரிய அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் தூக்கி எறியப்பட்ட நிலையில், அந்நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை சிரிய அரசு தொலைக்காட்சி மூலம் கிளர்ச்சியாளர்கள் குழு வீடியோ வெளியிட்டு அறிக்கை ஒன்றை ஒளிபரப்பியது.

    இந்த அறிக்கையை படித்த நபர், டமாஸ்கஸ்-ஐ ஆசாத்-இடம் இருந்து விடுவிக்கப்பட்டதை நாங்கள் அறிவிக்கிறோம். உலகம் முழுக்க இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது, என்று தெரிவித்தார்.

     


    கடந்த பத்து நாட்களுக்குள் சிரியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்ட கிளர்ச்சியாளர் குழு இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ்-ஐ கைப்பற்றிய நிலையில், சிரியா அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இதனை சிரிய பிரதமர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    இது குறித்து தொடர்ந்து பேசிய சிரிய பிரதமர் முகமது காசி ஜலாலி, "அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு தன் கையை நீட்ட தயாராக இருக்கிறது. அரசு தன் செயல்பாடுகளை இடைநிலை அரசாங்கத்திற்கு மாற்றவும் தயாராக இருக்கிறது. நான் என் வீட்டில் இருக்கிறேன், நான் வெளியேறவில்லை. இதற்குக் காரணம் நான் இந்த நாட்டை சேர்ந்தவன்." ," என்று கூறினார்.

    மேலும், பணியை தொடர தனது அலுவலகத்திற்கு செல்வதாக கூறிய அவர், பொது சொத்துக்களை சிதைக்க வேண்டாம் என்று சிரிய குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்தார். ஆசாத் தப்பியோடினாரா என்பது பற்றி தகவல்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

    சிரியாவில் பஷார் அல் ஆசாத்-இன் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து டமாஸ்கஸ் நகரில் பொது மக்கள் வெளியே வந்து மசூதிகளில் பிரார்த்தனை செய்தும், சதுரங்களில் கொண்டாடவும் செய்தனர். இதோடு "கடவுள் பெரியவர்" என்றும் பஷார் அல் ஆசாத் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

    சிலர் தங்களது காரின் ஹாரன்களை ஒலித்தனர். சில பகுதிகளில், கொண்டாட்டத்தின் அங்கமாக துப்பாக்கி குண்டுகளும் முழங்கின.

    • சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்.
    • பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

    சிரிய அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சிரிய எதிர்க்கட்சி போர் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய தலைநகருக்குள் நுழைய தொடங்கியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை டமாஸ்கஸ்-இல் இருந்து பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் ரமி அப்துர் ரஹ்மான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து அப்துர் ரஹ்மானின் கருத்துக்கள் வெளியாகி உள்ளன. தலைநகரில் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிரிய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை.

    • சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    • விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

    ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

    இந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததாக சிரிய கிளிர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    இது குறித்து அந்நாட்டின் ஷாம் எப்.எம். ரேடியோ வெளியிட்ட தகவல்களில் டமாஸ்கஸ் விமான நிலையம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிரிய தலைநகர் வடக்கில் உள்ள சயித்நயா ராணுவ சிறைக்குள் நுழைந்து தங்களது குழுவை சேர்ந்த சிறைவாசிகளை விடுவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ்-ஐ அரசாங்கப் படைகள் கைவிட்டதைத் தொடர்ந்து முந்தைய நாள் இரவு, எதிர்க்கட்சிப் படைகள் அதைக் கைப்பற்றின. ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கிளர்ச்சியாளர்கள் வேகமாக வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Syria
    டமஸ்கஸ்:

    சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

    சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

    2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.
     
    இந்நிலையில் மத்திய சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளான ஹமா மற்றும் ஹோம்ஸை சுற்றியுள்ள ராஸ்டன், டல்பேசேஹ் மற்றும் ஹௌலா பகுதிகள் இன்று அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அங்கு கிளர்ச்சியாளர்களால் மூடப்பட்டிருந்த அந்நாட்டின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையை அரசுப்படைகள் திறந்து வைத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு மீதம் இருந்த கிளர்ச்சியாளர்கள் அப்பகுதியை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.

    ஏற்கனவே, சிரிய அரசுடன் கிளர்ச்சியாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர். அதில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பகுதியை விட்டு கிளர்சியாளர்களின் குடும்பம் மற்றும் அதிபர் ஆசாத் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாத பொதுமக்களும் என சுமார் 1,10,000 பேர் கிளர்ச்சியாளர்களுடன் வெளியேற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த மாதம் தொடக்கம் முதல் 27 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

    அவர்கள் அனைவரும் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள துருக்கி மற்றும் ஜோர்டான் எல்லையை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டிருந்த பகுதிகளான கிழக்கு அல்லெப்போ பகுதியில் இருந்து 30 ஆயிரம் பேரும், கடந்த மாதம் கிழக்கு கவுட்டா பகுதியில் இருந்து 66 ஆயிரம் பேரும் ஏற்கனவே வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கிளர்ச்சியாளர்கள் வெளியேறிவருவதை அடுத்து அங்கு அமைதி திரும்பி வருகிறது. #Syria
    ×