என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப் படை வீரர்கள் 26 பேர் பலி
Byமாலை மலர்22 May 2019 5:19 AM GMT (Updated: 22 May 2019 5:19 AM GMT)
சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வடமேற்கு பகுதியில் அரசு ஆதரவு படைகள் மீது கிளர்ச்சிப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. அரசுப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஹமா மாகாணம் காபிர் நபுதா நகரில் நடந்த இந்த சண்டையில் அரசு படையைச் சேர்ந்த 26 வீரர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதேபோல் கிளர்ச்சிப் படை தரப்பில் 18 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
காபிர் நபுதா நகரை கடந்த 8-ம் தேதி அரசுப் படைகள் கைப்பற்றியது. இதனை மீட்கும் முயற்சியில் தற்போது கிளர்ச்சிப் படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வடமேற்கு பகுதியில் அரசு ஆதரவு படைகள் மீது கிளர்ச்சிப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. அரசுப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஹமா மாகாணம் காபிர் நபுதா நகரில் நடந்த இந்த சண்டையில் அரசு படையைச் சேர்ந்த 26 வீரர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதேபோல் கிளர்ச்சிப் படை தரப்பில் 18 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
காபிர் நபுதா நகரை கடந்த 8-ம் தேதி அரசுப் படைகள் கைப்பற்றியது. இதனை மீட்கும் முயற்சியில் தற்போது கிளர்ச்சிப் படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X