என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shamima begum
நீங்கள் தேடியது "Shamima Begum"
சிரியாவில் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் பயங்கரவாதி சமிமா பேகத்தின் குழந்தை நிமோனியா தாக்கி பலியானார்.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், இளம்பெண் சமிமா பேகம் (வயது 19). இவரது கணவர் யாகோ ரீடிஜ்க். இவர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.
சமிமா பேகம், கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போடுவதற்காக லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்றார்.
அவர் கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் சிரியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் தனது 2 நண்பர்களுடன் காணப்பட்டதாக தெரிய வந்தது. அவர் லண்டன் திரும்ப விரும்பியதாகவும், ஆனால் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சமிமா பேகத்துக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்தக் குழந்தைக்கு ஜாரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்தக் குழந்தை, நிமோனியா தாக்கி இறந்து விட்டது. இதை சிரிய ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.
குழந்தையின் இறப்பு குறித்து தந்தை யாகோவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிரியாவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போட்டு வந்தவர்தான்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், இளம்பெண் சமிமா பேகம் (வயது 19). இவரது கணவர் யாகோ ரீடிஜ்க். இவர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.
சமிமா பேகம், கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போடுவதற்காக லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்றார்.
அவர் கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் சிரியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் தனது 2 நண்பர்களுடன் காணப்பட்டதாக தெரிய வந்தது. அவர் லண்டன் திரும்ப விரும்பியதாகவும், ஆனால் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சமிமா பேகத்துக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்தக் குழந்தைக்கு ஜாரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்தக் குழந்தை, நிமோனியா தாக்கி இறந்து விட்டது. இதை சிரிய ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.
குழந்தையின் இறப்பு குறித்து தந்தை யாகோவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிரியாவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போட்டு வந்தவர்தான்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X