search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sun Pictures"

    விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் இருந்து சிம்டாங்காரன் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து சிம்டாங்காரன் என்ற சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த பாடலின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இசையை சோனி மியூசிக் சவுத் கைப்பற்றியிருக்கிறது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Sarkar #Vijay 

    விஜய் நடிக்கும் `சர்கார்' படத்தில் இருந்து `சிம்டாங்காரன்' என்ற பாடல் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், அந்த பாடல் பற்றி பாடலாசிரியர் விவேக் விளக்கமளித்துள்ளார். #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. 

    `சிம்டாங்காரன்' என தொடங்கும் இந்த பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,

    என்று குறிப்பிட்டுள்ளார்.

    சிங்கிளை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. 
    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 



    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarKondattam 

    விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க விஜய் ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கவிருப்பதாக பட நிறுவனம் வாய்ப்பு அறிவித்துள்ளது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று காலை அறிவித்தது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க குறிப்பிட்ட ரசிகர்களை தேர்வு செய்யப்போவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

    `சர்கார் இசை வெளியீட்டு விழாவில், விஜய் ரசிகர்கள் அனைவரும் பங்கேற்கும் அளவுக்கு பிரம்மாண்ட அரங்கம் ஏதும் இல்லை. எனவே ரசிகர்களில் குறிப்பிட்டவர்களை தேர்வு செய்து இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வைக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarKondattam 

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்திருந்தது.

    அதன்படி படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarKondattam #SarkarSingleOn24th

    தளபதியுடன் திரையில் தோன்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, சர்கார் படத்தில் தன்னை நடிக்க வைத்த ஏ.ஆர்.முருகதாசுக்கு நன்றி என்று நடிகர் லல்லு தெரிவித்துள்ளார். #Sarkar #Vijay
    கவுதம் கார்த்திக்கின் `ரங்கூன்' மற்றும் `8 தோட்டாக்கள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் லல்லு. இவர் தற்போது விஜய்யின் `சர்கார்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சர்கார் படத்தில் நடித்தது குறித்து லல்லு அவரது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `சர்கார் படத்தில் அற்புதமான வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு மிகப்பெரிய நன்றிகள். தளபதியுடன் திரையில் இணைந்து நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நிறைவேறிவிட்டது.' என்று தெரிவித்துள்ளார்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் லாஸ் வேகாஸ் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டது. படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருக்கிறது.



    விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #Lallu

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்துள்ளது. 

    படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர்  குறித்த அறிவிப்பு அன்று வெளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. 

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Sarkar #Vijay #SarkarKondattam

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Enthiran #Shankar
    ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.

    இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். 

    அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இதில் சிவில் வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் கால அவகாசம் கோரிய இயக்குநர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    இதில், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எட்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, தமிழ்நாடனின் கதை நகலை தாக்கல் செய்தார். மேலும், சிவில் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் சங்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை, வரும் 28 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Enthiran #Shankar #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. #Enthiran #Shankar
    ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.
    இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

    அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, நீதிபதி சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. 



    இதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். #Enthiran #Shankar #Rajinikanth

    விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகிய நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarWorkingStills
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.

    இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளை முதல் அடுத்த 5 நாளைக்கு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 



    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay #SarkarWorkingStills

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், முற்றிலும் வேறுபட்டதாக படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay #SarkarAudioFromOct2nd
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். #Sarkar #Vijay #KeerthySuresh

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay #KeerthySuresh
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சர்கார் படத்தின் கதை பற்றி புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய் தனது ஓட்டுரிமையை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார். அவர் வரும் விமானம் தாமதமாவதால், அவரது ஓட்டை திருட்டுத்தனமாக ஒரு அரசியல் கட்சி ஆட்கள் போட்டு விடுகிறார்கள்.

    அந்த கள்ள ஓட்டு சம்பவத்தால் அரசியலில் குதிக்கிறார் விஜய். அரசியலில் புரட்சி செய்கிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள். இந்த கதை கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கிறது. தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய டிரீட் காத்திருக்கிறது எனலாம். 



    சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay

    ×