search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stray dogs"

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க உத்தரவிட்டார்.
    • பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரிந்த 40 தெரு நாய்களை வலை வீசி பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொது மக்களையும், வாகன ஓட்டி களையும் அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றி வருவதாகவும், அதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நெல்லை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.

    இதனையடுத்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, உதவி கமிஷனர் வாசுதேவன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் இன்று 2-வது நாளாக பணியாளர்கள் தச்சை மண்டலம் பகுதிக்கு உட்பட்ட நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, செல்வி அம்மன் கோவில், உடையார்பட்டி, மீனாட்சிபுரம், எஸ்.என் ஹைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரிந்த 40 தெரு நாய்களை வலை வீசி பிடித்தனர்.

    மேலும் நெல்லை மாநகராட்சி முழுவதும் இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

    • நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர்.
    • திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு நாய்கள் கடித்து குதறி யுள்ளன.

    திருச்செங்கோடு:

    தற்போது நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர். தெருக்களின் குறுக்கே திடீரென நாய்கள் கூட்டமாகஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு அதுவும் வேகமாக சாலையை கடப்பதால் இருசக்கர வாகனஓட்டிகள் நாய்கள் மீத மோதிவிழுந்து காயமடைவது தொடர்ந்து நடந்து வந்தது.

    திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு

    நாய்கள் கடித்து குதறி யுள்ளன. காயம் அடைந்த வர்களில் நாமக்கல் ரோடு சஞ்சய், ஆயிரத்தா குட்டை தரணி, எஸ்.என்.டி.ரோடு சின்னதம்பி, கொல்லப்பட்டி உஷா, ஏ.கே.இ. ரோடு காவியா, அம்பேத்கார் நகர் பகுதியைசேர்ந்த சுசிலா , ராஜம்மாள், முத்துலட்சுமி, நேசமணி உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் சிலர் ஈரோடு தனியார் மருத்துவமனை சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யவும் நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்த வருகின்றனர். நாய்க்கடி மருந்துகள் இருப்பில உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகராட்சி 87 -வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் ராஜூ நகரில் தெருநாய்கள் 24 மணி நேரமும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    நள்ளிரவு நேரங்களில் ஒரு நாய் குரைக்கும்போது, அதன் சத்தத்தை கேட்டு மற்ற நாய்களும் சேர்ந்து குரைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் தூக்கம் கெடும் நிலை உள்ளது. மேலும் சிறிய குழந்தைகள் தின்பண்டங்கள் வாங்குவதற்காக வெளியே கடைக்கு வரும்போது நாய் துரத்தும் அவல நிலையும் உள்ளது.

    சில சமயங்களில் நாய் துரத்தும் போது ஓடிச் செல்லும் குழந்தைகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய் துரத்துவதால், அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வேகமாக சென்று தடுமாறி கீழே விழுகின்றனர்.

    கார் செல்லும்போது அந்த காரை தெரு நாய்கள் கூட்டமாக குறைத்துக் கொண்டே துரத்துகிறது. இன்னும் ஒரு சில சமயங்களில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு கடித்துக் குதறி கொள்ளும் காட்சியும் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாயும் ரத்தம் சொட்ட சொட்ட தெருகளில் ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாய ஏற்படுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது,

    இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது நாய்கள் கூட்டத்தைக் கண்டு பயந்து வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு நாய் துரத்தும் போது அத்தனை நாய்களும் சேர்ந்து துரத்துகிறது.

    இதனால் அடிக்கடி தலை தெரிக்க ஓடும் நிகழ்வு ஏற்படுகிறது. வீட்டின் கதவை தெரியாமல் மறந்து திறந்து வைத்து விட்டால் நாய்கள் வீட்டுக்குள் வந்து விடுகிறது. பின்னர் அந்த நாய்களை மிகவும் சிரமப்பட்டு தான் துரத்த முடிகிறது.

    மேலும் தற்போது தெருக்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால், நாய்களின் கழிவுகள் நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களை நடைபயிற்சிக்காக வெளியே அழைத்துக்கொண்டு செல்லும்போது, தெரு நாய்களும் சேர்ந்து வளர்ப்பு நாயின் மீது பாய்கிறது.

    அதனை சமாளித்துக் வளர்ப்பு நாயை அழைத்து செல்வதற்குள் போதும் என்றாகி விடுகிறது. கோவை மாநகராட்சி இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் விட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்படுவது குடியிருக்கும் மக்கள்தான் என்றனர்.

    • தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர் சதீஷ் குமார் பேசுகையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆணையாளரிடம் புகார் செய்தால் ஊழியர் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.ஆணையாளரை சந்தித்து கோரிக்கை குறித்து பேச காத்திருக்கும் நிலை உள்ளது என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசுகையில், புதிய வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு விண்ணப் பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.இந்த நிலை நீடித்து வருகிறது என்றார்.இதற்கு பதில் அளித்த ஆணையாளர், சொத்து வரி மாற்றம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    ஏற்கனவே அலுவலகத்தில் தேங்கி யிருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. கட்டிட வரைபட அனுமதிக்கு முன்னர் மனையிட வரி செலுத்தினால்மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற முடியும்.

    இனி வரும் காலங்களில் இன்னும் விரைந்து இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி பேசுகையில் எனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து வலியுறுத்தினால் கண்டுகொள்வது கிடையாது. டெண்டர் சம்பந்தமான தகவல்கள் தரமறுக்கின்றனர் என்றார்.

    அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் மின்விளக்கு வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசுதொல்லை அதிகரித்து விட்டது.

    வார்டு முழுவதும் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம்இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்த தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த தொந்தரவு உள்ளது. நாய்களை கொல்ல முடியாது.நாய்களை கட்டுப்படுத்த புளு கிராஸ் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    சண்டிகரில் ஒன்றரை வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சண்டிகர்:

    சண்டிகரில் உள்ள பல்சோரா பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த தெரு நாய்கள் சிறுவர்களை தாக்க தொடங்கின. நாயை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டான்.

    படுகாயமடைந்த ஒன்றரை வயது சிறுவனான ஆயுஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடித்ததில் சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இது போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. தெரு நாய்களால் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

    இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களில் தொல்லை அதிகமாக இருப்பதால் சிறுவர்களை வெளியே விட பெற்றோர்கள் பயப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய் கடித்து குதறியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #straydogs
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். மோராபாத் பகுதியில் கடந்த 5 மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தெரு நாயால் தாக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.


    இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோதிநகரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் நேற்று சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். #straydogs
    ×