search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Star"

    • பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
    • இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.



    அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.

    இந்த நிலையில், பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    ஸ்டார் போஸ்டர்

    அதன்படி, இப்படத்திற்கு 'ஸ்டார்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர். 'ஸ்டார்' படத்தின் புரோமோ ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    2001-ஆம் ஆண்டில் பிரசாந்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் 'ஸ்டார்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.





    • ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது.
    • மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது.

    சேலம்:

    ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது. தனியார் தோட்டங்களிலும், சாலை யோரத்திலும் பரா மரிக்கப்பட்டு வரும் விளிம்பு மரங்களில் இருந்து இந்த பழங்கள் கிடைக்கிறது.

    மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது. மரத்தில் தானாக பழுத்து கீழே விழும் பழங்களை சேகரித்து விற்பனைக்காக வியாபாரி கள் சேலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    மருத்துவ குணம்

    மருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் பி,சி மற்றும் பொட்டாசியம், இரும்பு சத்து, நார்சத்து உளளது. இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது.

    இந்த பழம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. ஏற்காடுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த பழத்தை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    • நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இடையில் புருவ மத்தியில் அக்னி (நெற்றிக்கண்) உள்ளது.
    • 9 சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அடுத்த வல்லத்தில் யோக நரசிம்மப் பெருமாள் கோவில் உள்ளது.

    யோக நரசிம்மர் இங்கு சுயம்பு மூர்த்தி ஆவார். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இடையில் புருவ மத்தியில் அக்னி(நெற்றிக்கண்) உள்ளது.

    நரசிம்மர் மனித உடலும் சிங்க முகமும் கொண்டவர் என்பதால் இக்கோவிலில் யோக நரசிம்மர் கல், சுதை இரண்டும் கலந்து யோக நரசிம்மராக பக்தர்களுக்கு இங்கு காட்சி தருகிறார்.

    இவருக்கு தைலக்காப்பு மட்டுமே சாற்றுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் இது போன்ற அமைப்புகள் உடைய யோக நரசிம்மர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதி மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று காலையில் ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஒன்பது சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

    இந்த நிலையில் இன்று நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 6.30மணிக்கு உற்வர் லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் விஷேட திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு யோக நரசிம்மப் பெருமாளை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலையில் யோக நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனை நடைபெறும்.

    இந்த விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் சுவாதி கைங்கர்ய குழுவினர் செய்திருந்தனர்.

    • பள்ளியில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் ஆய்வு.
    • பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    பின்பு, சி.2002, இ.3 என பெயரிடப்பட்ட பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    பின்னர், பள்ளி மாணவி நீலவேணி தான் வரைந்த கலெக்டர் அருண் தம்புராஜின் உருவப்படத்தை அவரிடம் வழங்கினார்.

    ஆய்வின்போது நாகை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், வட்டாரக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், பள்ளி துணை ஆய்வர் ராமநாதன், தலைமையாசிரியர் ஸ்டெல்லா, ஜேனட் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    அமெரிக்காவில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் ஆபாசம் இல்லாத வகையில் தன்னை தொடுவதற்கு அனுமதி அளித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். இவர், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் 2006-ம் ஆண்டு செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக பரபரப்பு குற்றம் சாட்டியவர் ஆவார்.

    மேலும் ஜனாதிபதி தேர்தலின்போது இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக தனக்கு டிரம்ப் வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) தந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் ஓஹியோ மாகாணம், கொலம்பஸ் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    அங்கு அவர் வயது வந்தவர்களுக்கு கவர்ச்சியான நடனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தி உற்சாகம் ஏற்படுத்துகிற ‘ஸ்ட்ரிப் கிளப்’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மேடைக்கு வந்து தன்னை ஒரு ரசிகர் ஆபாசம் இல்லாத வகையில் தொடுவதற்கு அனுமதி அளித்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பான தகவலை அவரது வக்கீல் மைக்கேல் அவினாட்டி வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “இது திட்டமிட்ட நாடகம். அரசியல் ரீதியில் வஞ்சம் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். இது பெரும் ஏமாற்றத்தை தந்து உள்ளது. நாங்கள் அனைத்து போலி குற்றச்சாட்டுகளையும் சந்திப்போம்” என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    மேலும் ஸ்டார்மி டேனியல்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ் ஏற்கனவே 2 வழக்குகள் தாக்கல் செய்து இருப்பது நினைவுகூரத்தக்கது. 
    சூரியனைப் போல் நட்சத்திரத்தையும் புதிய கோள் ஒன்று சுற்றி வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
    சென்னை:

    விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. அதில் புதிய கோள்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும், இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதில், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையில் என்ஜினீயர்களும், பொறியாளர்களும் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில், சூரியனைப் போல் நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சூரியனை பூமி சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். இதுபோல், சனிகிரக பாதைக்கு கீழும், நெட்டியூன் கிரக பாதைக்கு மேலும் இருக்க கூடிய நட்சத்திரத்தை புதிய கோள் ஒன்று சுற்றி வருவதை பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

    நட்சத்திரத்தை சுற்றி வரும் இந்த கோள் பூமியின் எடையை போல் 27 மடங்கு பெரிதானது. பூமியின் ஆரத்தை போல 4 மடங்கு ஆரம் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.

    இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 1.2 மீட்டர் தொலை நோக்கியுடன் கூடிய மேம்பட்ட பி.எல்.ஆர். கருவியின் உதவியால் இந்த கோளின் எடையளவு துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று துல்லியமாக கிரகங்களின் எடையை கண்டறியும் இது போன்ற நிறமாலை கருவிகள் உலகில் ஒரு சிலதான் உள்ளது. இந்தியாவில் உள்ள இந்த பாரஸ் நிறமாலை கருவிதான் ஆசியாவிலேயே முதலாவது கருவியாகும்.

    இந்த கண்டுபிடிப்பின் மூலம் நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் உருவாவதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவும். இதன் மூலம் சூரிய குடும்பத்துக்கு அப்பாற்பட்டு நட்சத்திரங்களை சுற்றியுள்ள கோள்களை கண்டுபிடிக்கும் திறமையுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#tamilnews
    ×